search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிவீரர்"

    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று அக்னி வீரரான இளைஞர் ஒருவர் வழிப்பறி கொல்லைகளில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அக்னிவீரராக வங்க தேசத்தில் பணியாற்றி வந்த இஷ்மீத் சிங் வங்க தேசத்தில் பணியாற்றிவந்தார்.

    சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள ராணுவவீரர்கள் ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் மீதான விமர்சனங்கள் வலுவடையத் துவங்கியுள்ளன. அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 முதல் 23 வயதுடைய இளைஞர்களுக்கு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆனால் 25% பேர் மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்

    இந்த திட்டம் இளைஞர்களைப் பயன்படுத்திவிட்டு அவர்களைத் தூக்கியெறியும் வகையில் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று அக்னி வீரரான இளைஞர் ஒருவர் வழிப்பறி கொல்லைகளில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் இஷ்மீத் சிங். பயிற்சிபெற்ற அக்னிவீரராக வங்க தேசத்தில் பணியாற்றி வந்த இஷ்மீத் சிங் கடந்த 2 மாதங்களுக்கு முன் விடுப்பில் பஞ்சாப் திருப்பிய நிலையில் மீண்டும் பணிக்கு செல்லாமல் தனது சகோதரர் பிரப்பிரீத் சிங் மற்றும் நண்பர் பால்கரன் சிங் ஆகியோருடன் இணைந்து நெடுஞ்சாலைகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

    பஞ்சாபின் மொகாலியில் உள்ள பாலோங்கி பகுதியில் அறை ஒன்றை வாடைக்கு எடுத்துத் தங்கி அங்கிருந்தபடி சகோதரர் மற்றும் நபருடன் சேர்ந்து திருட்டு, கொள்ளை மற்றும் வழிபறிகளில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கான்பூரிலிருந்து சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கிய இஷ்மீத் சிங் கும்பல் அதைப் பயன்படுத்தி வாகனங்களில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்து வந்துள்ளனர்.

     

    இதுதொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாணையில் இஷ்மீத் சிங் கும்பல் சிக்கியுள்ளது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. அக்னி வீரராப் பயிற்சி பெற்ற ஒருவர் கொள்ளையனாக மாறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை.
    • உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில்,

    "ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், ராணுவத்தில் உயிரிழந்த அக்னிவீரர் அஜய் குமார் குடும்பத்திற்கு மத்திய அரசு தற்போது வரை எந்தவொரு இழப்பீடும் வழங்கவில்லை. தனியார் வங்கியில் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணமும் ராணுவ குரூப் இன்சூரன்ஸ் நிதியில் இருந்து ரூ.48 லட்சமும் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.

    அஜய்குமாரின் சம்பள பாக்கியை இன்னமும் ஏன் அவரது வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை என கேள்வியெழுப்பிய அவர், இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீட்டிற்கும் இன்சூரன்ஸ் பணத்திற்கும் வேறுபாடு உள்ளது. உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.

    நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்தை நாம் மதிக்க வேண்டும். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது. இது ஒரு தேசிய பிரச்சனை இதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.

    நம் நாட்டில் ராணுவ வீரர் அக்னிவீரர் இருவரும் உயிர் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவ வீரருக்கு தியாகி பட்டம் கிடைக்கிறது. அக்னீவீரருக்கு தியாகி பட்டம் கிடைப்பதில்லை. ஒருவருக்கு பென்ஷன் கிடைக்கிறது. இன்னொருவருக்கு கிடைப்பதில்லை. நாட்டிற்காக யார் தியாகம் செய்தாலும் அவரை நாம் மதிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய அஜய்குமாரின் தந்தை, மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ், கேன்டீன் கார்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
    • பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

    "ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசியுள்ள அஜய் சிங்கின் தந்தை, "அக்னிவீரர் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவத்தில் வழக்கமான முறையில் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலூர் காவல் பணி சேர்ப்பு பள்ளியில் 27ந்தேதி முதல் 29 வரை முகாம்.
    • இணைய தளம் வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பெண்கள் சேர்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து இந்திய ராணுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர் பணியில் பெண்களை சேர்ப்பதற்கான ஆள் தேர்வு முகாம் வேலூரில் உள்ள காவல் பணிசேர்ப்பு பள்ளியில் வரும் 27ந்தேதி தொடங்கி 29ந்தேதிவரை நடைபெற உள்ளது.

    இணைய தளம் வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். நவம்பர் 1, 2022 முதல் அனுமதி அட்டைகள் இணைய வழியாக வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்வதற்கான தேதி அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். நவம்பர் 1ந்தேதிககு பிறகு www.joinindianarmy.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பதாரர் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு நடைமுறை முழுவதும் நேர்மையானதாக வெளிப்படைத் தன்மையானதாக இருக்கும். முறைகேடுகளில் ஈடுபடுவதை விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் தயார்நிலை ஆகிய தகுதியின் அடிப்படையே உங்களுடைய தேர்வினை உறுதி செய்யும்.

    விண்ணப்பதாரர்கள் ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பான தங்களுடைய சந்தேகங்களை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×