என் மலர்
நீங்கள் தேடியது "கடலூர் துறைமுகம்"
- கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது.
- இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர்.
கடலூர்:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் வலுவான நிலையில் கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வரு கின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தீவாக காட்சியளித்து வருகின்றன. கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது. இந்த நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன் வாங்கி சென்று வருவது வழக்கம்.
இதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் மீன் வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் வருவார்கள் என்பதால் காலை முதல் குடைபிடித்த படி மீன்களை விற்பனை செய்வதற்கு தயார் நிலை யில் இருந்தனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் இன்று காலை வரையிலும் மிக கனமழை பெய்து வருவதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொது மக்கள் பெருமளவில் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மீன் வியாபாரி கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர். மேலும் ஒரு சில பொதுமக்கள் மற்றும் தங்களுக்கு தேவை யான மீன்களை வாங்கி சென்றதும் காண முடிந்தது.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் ஏற்படும் என மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலூர்:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் ஏற்படும் என மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவிப்பு.
- துறைமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போதே கடலூர் அஞ்சலையம்மாள் துறைமுகம் என்று அறிவிக்க வேண்டும்.
கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவித்திருக்கிறது.
கடலூரில் புதிய துறைமுகம் அமைக்கப் வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. புதிய துறைமுகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.
புதிதாக அமைக்கப்படவுள்ள துறைமுகத்திற்கு கடலூரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும். அது தான் அவருக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் சிறந்த மரியாதையாக இருக்கும்.
கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை.
வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர்.
அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியப் போதே, அஞ்சலையம்மாளும் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார்.
உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல்போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டு சிறையில் இருந்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கை இன்று வரை ஏற்கப்படவில்லை.
இந்த நிலையில் புதிதாக திறக்கப்படவுள்ள துறைமுகத்திற்காவது அவரது பெயரைச் சூட்ட வேண்டும். துறைமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போதே கடலூர் அஞ்சலையம்மாள் துறைமுகம் என்று அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர்.
- கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது.
கடலூர்:
கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் உள்ளிட்ட பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது.
இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மீன்கள் எதுவும் வாங்கவில்லை. இதனால் புரட்டாசி மாதத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
புரட்டாசி 3-வது சனிக்கிழமை முதல் பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர். அன்று முதல் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ளதால் மீன் மார்க்கெட்டுகளில் ஓரளவு கூட்டம் அதிகரித்து வருகிறது.
நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகையாகும். எனவே வெளியூர்களில் வேலைபார்க்கும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கடலூருக்கு தற்போது வந்துள்ளனர். தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர். எனவே தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.
இதன் காரணமாக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது. அதிக அளவில் மக்கள் வந்துள்ளதால் மீன்கள் விலையும் கனிசமாக உயர்ந்து காணப்பட்டது.
- வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது.
- 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.
கடலூர்:
வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுவடைந்து நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுக அலுவலகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.