என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளர்துறை"
- திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
- 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.
திருப்பூர் :
சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.
- வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளில் சுதந்திர தினத்தை கொண்டாட தொழிலாளர்துறை வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
- அமுதப்பெருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.
மதுரை
மதுரை மண்டலத்திற்கு உதமிழக தொழிலாளர் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் அறிவுரைப்படி, மதுரை கூடுதல் கமிஷனர் குமரன் வழிகாட்டுதலின் படி 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.
மதுரை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அப்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி, வருகிற 15-ந் தேதி 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா அனைத்து தரப்பினரும் கொண்டாட வேண்டும். எனவே அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர், ஆஸ்பத்திரிகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றிலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசியக்கொடி ஏற்றி வைக்க வேண்டும்.
அன்றைய நாட்களில், விளம்பர பலகைகளில் மூவர்ணம் இருக்க வேண்டும். பணியாளர்கள் தேசியக்கொடி அணிந்து பணியாற்ற வேண்டும். நிறுவனத்தின் வலைத்தளங்களில் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன்வெளிமாநில தொழிலாளர்களின் பணி நிலைமை மற்றும் நலன்களை முறைப்படுத்தும் வகையில், வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவன உரிமையாளர்கள், அவர்களின் பெயர், ஆதார் எண், செல்போன் எண், தொழிலாளி சார்ந்துள்ள மாநிலத்தில் உள்ள வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை தொழிலாளர் துறை இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால பலன்களை வழங்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது.
துணை கமிஷனரிடம் ஆன்லைனில், பணி நியமனம் குறித்து பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் உதவி கமிஷனரிடம் (அமலாக்கம்) உரிமம் பெற வேண்டும். கடைகள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு 8 மணி நேர வேலையின் போது, உட்கார்ந்து பணியாற்ற வசதியாக இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.அன்றைய நாட்களில், விளம்பர பலகைகளில் மூவர்ணம் இருக்க வேண்டும். பணியாளர்கள் தேசியக்கொடி அணிந்து பணியாற்ற வேண்டும். நிறுவனத்தின் வலைத்தளங்களில் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.