என் மலர்
நீங்கள் தேடியது "தவசு"
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் போன்ற 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் செல்லாண்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஆடித்தவசுக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.