search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "102 அடியில் நீடிக்கும்"

    • பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 2,800 கன அடியாக நீர் வரத்து சரிந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 2,800 கன அடியாக நீர் வரத்து சரிந்தது. பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 500 கன அடி தண்ணீரும் என 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணை 102 அடியில் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • இன்று தொடர்ந்து 35-வது நாளாக பவானி சாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.
    • தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழிகின்றது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பவானிசாகர், வரட்டு பள்ளம் , குண்டேரி பள்ளம் பெரும்பள்ளம் ஆகிய அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் 102 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று தொடர்ந்து 35-வது நாளாக பவானி சாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.

    அணைக்கு வினாடிக்கு 4, 200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்கா–கவும், குடிநீருக்காகவும் 4,000 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அன்னையான வரட்டுபள்ளம் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணை இன்று காலை நிலவரப்படி வரட்டுபள்ளம் அணை 33.46 அடியாக உள்ளது.

    இதே போல் 41.75 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.74 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.13 அடியாக உள்ளது.

    தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழிகின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
    • அணைக்கு வினாடிக்கு 3,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    தொடர்ந்து ஒரு மாதமாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடித்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 3,750 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • இன்று தொடர்ந்து 9-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.
    • அணைக்கு வினாடிக்கு 15,300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு, ஆக. 13-

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனை த்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.

    தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று தொடர்ந்து 9-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 15,300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 15,100 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.

    ×