என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிகாரம்"

    • துபாயில் வசித்துவரும் இந்திய சிறுவனை அவனது நன்னடத்தைக்காக துபாய் போலீசார் பாராட்டினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    துபாய்:

    துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் ஒருவன் அவனது நன்னடத்தை செயலுக்காக துபாய் போலீசாரால் பாராட்டப்பட்டார்.

    துபாய்க்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் அவரது கைக்கடிகாரத்தை அங்கு தொலைத்துள்ளார். அந்த கடிகாரத்தை இந்தியாவை சேர்ந்த சிறுவன் யூனிஸ் பார்த்துள்ளார். அதை எடுத்துச்சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

    அந்த பயணி அவரது சொந்த ஊர் திரும்பிய நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு துபாய் போலீசார் கடிகாரத்தைக் கொடுத்துள்ளனர். இதற்கு அந்த பயணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில், சுற்றுலா காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜலாப், துணை லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல் ரகுமான், சுற்றுலா துறை தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாடி ஆகியோர் இந்திய சிறுவன் யூனிஸை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

    இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், சுற்றுலா பயணியின் தொலைந்த கடிகாரத்தை திருப்பி அளித்த சிறுவனின் நேர்மையை துபாய் போலீஸ் கவுரவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

    • இந்த தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) நாடு முழுவதும் ஒரே நேரத்தை கண்க்கிட NavIC ஐ பயன்படுத்தும்.
    • பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது

    நாடு முழுவதும் Indian Standard Time (IST) நேரத்தை கட்டாயமாக்கி மத்திய அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

    இந்த வரைவு விதிகள் குறித்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது

    இந்த புதிய வரைவு விதிகள் அதிகாரப்பூர்வ, வர்த்தக, நிதி, நிர்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் Indian Standard Time -யை மட்டுமே பின்பற்ற வலியுறுத்துகிறது.

    Indian Standard Time -யை தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த விதிகளின்கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

     நாடு முழுவதும் ஒரே நேரக் குறிப்புகளை வழங்குவதற்காக தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL), இந்திய விண்மீன்கள் நேவிகேஷன் அமைப்புடன் [Navigation with Indian Constellation system] (NavIC) உடன் இணைக்கட உள்ளது.

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் அமைந்துள்ள இந்த தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) நாடு முழுவதும் ஒரே நேரத்தை கண்க்கிட NavIC ஐ பயன்படுத்தும்.

    அதன்மூலம் பெறப்பட்ட நேர தரவுகளை அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் கௌஹாத்தியில் உள்ள நான்கு மையங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்புகள் வழியாக அனுப்பும். அனுப்பப்படும் தரவுகளின் துல்லியத்தை கணக்கிட இந்த மையங்களில் அணு கடிகாரங்கள் [ ATOMIC CLOCK ] நிறுவப்படும்.  

    அணு கடிகாரங்கள் என்பது அணுக்களின் அசைவுகளை[அலைவுகள் - Oscillation] பயன்படுத்தி நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கருவியாகும். உதாரணமாக சீசியம்-133 ன் அணுக்கள் நொடிக்கு பல கோடி முறை அசைகின்றன. இந்த எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கின்றன. இதை கணக்கிடுவதன் மூலம் துல்லியமாக நேரம் கிடைக்கிறது.

    எனவே துல்லியமான நேரம் காட்டும் அளவுகோலாக அணுக் கடிகாரம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒரே நாடு ஒரே நேர திட்டத்தை செயல்படுத்த இந்த அணு கடிகாரம் பயன்படுத்தப்பட உள்ளது. 

    சாமீபத்திய வளர்ச்சியாக அணு கடிகாரத்தை விட துல்லியமான அணுக்கரு [Atomic nucleus] கடிகாரத்தை பயன்படுத்த சர்வதேச  விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதன்மூலம் பிரபஞ்சத்திலுள்ள கரும்பொருள் (Dark matter) போன்ற பல்வேறு மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். கோடிக்கணக்கான ஆண்டுகள் ஓடினாலும் ஒரு நொடியைக்கூட தவறவிடாத கைக்கடிகாரமாக அது இருக்கும்.

    • டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
    • அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழதென்பாதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்ப ள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தேவையான சேர்கள், பிளாஸ்டிக் குடம், டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சீர் வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்தியிடம் வழங்கினர்.

    தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கியதோடு 50 மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் வகுப்பு கட்டணத்தையும் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ரம்யாதனராஜ் வழங்கினார். அப்போது தி.மு.க நிர்வாகி ஒப்பந்ததாரர் தனராஜ் உடன் இருந்தார்.

    ×