என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் குடம்"
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (வயது 75) என்பவர் வீட்டின் அருகே பிளாஸ்டிக் குடத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
- அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழதென்பாதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்ப ள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தேவையான சேர்கள், பிளாஸ்டிக் குடம், டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சீர் வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்தியிடம் வழங்கினர்.
தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கியதோடு 50 மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் வகுப்பு கட்டணத்தையும் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ரம்யாதனராஜ் வழங்கினார். அப்போது தி.மு.க நிர்வாகி ஒப்பந்ததாரர் தனராஜ் உடன் இருந்தார்.