search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி"

    • சொந்த நிதியில் இருந்து விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
    • வருகிற 7-ந் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடை பயணத்தை தொடங்குகிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டா ரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்ப த்திரி செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரிக்கு விஜய்வசந்த் எம்.பி. தனது சொந்த நிதியிலிருந்து 300 நாற்காலிகளை வழங்கி இருக்கிறார். இதனை ஆஸ்பத்திரியில் ஒப்ப டைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டேவி தலைமை தாங்கினார்.விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரிடம் நாற்காலிகளை வழங்கினார்.

    பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் வந்து படிக்கிறார்கள். மேலும் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரிக்கு நாற்காலிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தி ருந்தனர். அதன்படி தற்போது 300 நாற்காலிகள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் புறநோயாளி களுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அந்த கோரிக்கையும் நிறை வேற்றி தரப்படும்.

    வருகிற 7-ந் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடை பயணத்தை தொடங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இது தொடர்பான முழு அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோ வில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், மாநில பொதுக்குழு உறுப்பி னர் ரெத்தினகுமார், கண்ண னூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×