search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.2 ஆயிரம்"

    • சினிமா தியேட்டர்கள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை.
    • நாளையுடன் காலக்கெடு முடிவடைவதால், இன்னும் காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

    சென்னை:

    நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

    இதற்கிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது.

    இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். இதற்காக வங்கிகள் சிறப்பு கவுண்ட்டர்களையும் திறந்திருந்தன.

    இதற்கிடையே ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.

    இந்தநிலையில் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கினால் அவற்றை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அவ்வாறு மீறி வாங்கினால் அதற்கு கண்டக்டர்களே முழு பொறுப்பாவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

    அதேபோல், சினிமா தியேட்டர்கள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. நாளையுடன் காலக்கெடு முடிவடைவதால், இன்னும் காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

    கோவில் உண்டியல்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருக்கக்கூடும் என்பதால் அனைத்து கோவில்களிலும் முன்கூட்டியே உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் ரூ.2 ஆயிரம் கிடந்தால் அவற்றை உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் பணம் எண்ணியதில் ரூ.5 கோடி இருந்துள்ளது. அதில் ரூ.2ஆயிரம் நோட்டுகளும் இருந்துள்ளது. இவற்றையும் மாற்றும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

    இதற்கிடையே தமிழ்நாடு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி கூறும் போது, 'மத்திய அரசு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள போதுமான காலஅவகாசம் வழங்கி இருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் இருந்த நோட்டுகளை வங்கிகளில் படிப்படியாக கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டு வருவது முற்றிலும் நின்று போனது. சிலர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கி கார், வேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி சென்றுள்ளனர். தற்போது அதுவும் நின்றுவிட்டது.

    நாளையுடன் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் நீக்கப்படுவதால் நேற்று முதல் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ரூ.2 ஆயிரம் வாங்குவதை நிறுத்தி உள்ளோம். இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களும் இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் தருவதை தவிர்க்கலாம்' என்றார்.

    இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'போதிய அவகாசத்தை மத்திய அரசு வழங்கியதால் பொதுமக்கள் கைகளில் இருந்த ஒரு சில ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இதனால் எங்களிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் முற்றிலுமாக வருவது நின்றுவிட்டது. தற்போது நாங்களும் வாங்குவதை நிறுத்தி கொண்டோம். காரணம் இனி வங்கிகளிலும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது' என்றனர்.

    வங்கி அதிகாரிகள் கூறும் போது, 'நாளை வரை பணத்தை வாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். மத்திய அரசு கூறியப்படி இந்தப்பணியை சிறப்பாக செய்து முடிப்போம்' என்றனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது இவருக்கு அருகில் நின்ற நபர் ரவிச்சந்திரனின் பாக்கெட்டில் இருந்து ரூ.2 ஆயிரத்தை திருடினார்.

    சேலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள மேல் சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கு அருகில் நின்ற நபர் ரவிச்சந்திரனின் பாக்கெட்டில் இருந்து ரூ.2 ஆயிரத்தை திருடினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் அருகில் உள்ள சக பயணிகளுடன் சேர்ந்து அந்த நபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அந்த நபர் காடையாம்பட்டி அடுத்த சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு ( 44 ) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×