என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் பரிசல் பயணம்"

    • விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக வந்த நிலையில் இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலை யோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • கடந்த ஆட்சியில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்றது.
    • பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியை சேர்ந்த போகிபுரம் கிராமத்தில் 100 மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1000 மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் 100-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லூரி சென்று படித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் இருந்து சின்னகாம நாயக்கன்பேட்டை, பெரியகாம நாயக்கன் பேட்டை இடையிலான சின்னார் கால்வாயில் செல்லும் தண்ணீர் வழியாக தான் கிராம மக்கள் பரிசல் முலம் பயணம் செய்து சூளகிரி செல்ல முடியும். இதனால் பள்ளி, கல்லூரி, ெதாழில்சாலைகளுக்கு செல்பவர்கள் 60, 70 ஆண்டுகளாக அவதிபட்டு வருகின்றனர்.

    கடந்த ஆட்சியில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்றது.

    பின்பு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பாலம் கட்டப்பட்டு பாதியில் பணியை நிறுத்தினர். இதனையடுத்து பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    இதனால் இந்த கிராமத்தில் இருந்து வெளியூர் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்தும், ஒரு சிலர் கிராமத்திற்கு செல்ல காட்டு வழியை பயன்படுத்தி 5 கிலோ மீட்டர் சுற்றி சென்றும் வருகின்றனர்.

    ×