என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரபாடா"
- 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக விளையாடமாட்டார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா. இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் (கால் தசையில் தொற்று) காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த நாடு திரும்பிவிட்டார். இதனால் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்திலும், 19-ந்தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ரபாடாவின் காயம் குறித்து மருத்து குழு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ரபாடா இடம் பெறுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், 15 பேர் கொண்ட அணியில் அவர் மட்டும்தான் கருப்பின வீரர் ஆவார். இது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் கொள்கைப்படி ஆறு வெள்ளை நிற வீரர்களும், இரண்டு கருப்பு நிற வீரர்களும் இடம்பெற வேண்டும். ஆறு வெள்ளை நிற வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் கருப்பு நிற வீரர்களில் ரபாடா மட்டுமே இடம் பிடித்துள்ளதால் அவர் அனைத்து போட்டிகளிலும் களம் இறங்க வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
லுங்கி நிகிடி ரிசர்வ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அன்ரிச் நோர்ஜே, ஜெரால்டு கோயட்சி, மார்கோ யான்சன், ஓட்டினியல் பார்ட்மேன் ஆகி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும்.
- தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட்டில் 258, ஒருநாள் போட்டியில் 157, டி20-யில் 58 என ஆக மொத்தம் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் அதிகமான போட்டிகளில் விளையாடினால் ரபாடா பல சாதனைகளை படைப்பார் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதினி கூறியதாவது:-
ரபடா மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவரால் 400 விக்கெட்டை தாண்டி சாதனைகளை படைக்க முடியும். ஆனால் வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும். தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்க வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்தவர் ஸ்டெய்ன். அவர் 439 விக்கெட் எடுத்துள்ளார். பொல்லாக் 421 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், நிதினி 390 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார். ரபடா 285 விக்கெட்டுடன் 7-வது இடத்தில் உள்ளார். அவர் குறைவான டெஸ்ட்களில் விளையாடி உள்ளார்.
- ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
- முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்த தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2 இடங்கள் முன்னேறி உள்ளார். இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரபாடா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா-அப்ரிடி ஆகியோரை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் அப்ரிடி-பும்ரா 828 புள்ளிகளுடன் 4,5-வது இடங்களிலும் உள்ளனர். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.
- 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 7 தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 முதல் 6-வது இடங்கள் முறையே ஷான் பொல்லாக், நிதினி, டொனால்ட், மோர்னே மார்கல், கல்லீஸ் ஆகியோர் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்