search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயராம் ரமேஷ்"

    • 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் அரசமைப்பு முகவுவுரை நீக்கப்பட்டுள்ளதாக கார்கே குற்றம் சாட்டினார்.
    • சம்பந்தப்பட்ட புத்தகங்களை இணைந்து அவற்றில் அரசியலமைப்பு முகவுரை குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்

    என்சிஆர்டி புத்தகங்களில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எழுப்பிய அவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் அரசமைப்பு முகவுவுரை நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதிலளித்து பேசியமத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அந்த குற்றச்சாட்டை மறுத்து 6 வகுப்பு பாடத்தில் முகவுரை குறித்த குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தர்மேந்திர பிரதான் கூற்று தவறானது என்றும் மாநிலங்களவையில் தவறான செய்திகளை தந்திருக்கிறார் என்றும் அவர் மீது காங்கிரஸ் நோட்டிஸ் விடுத்துள்ளது.

    நேற்று மாநிலங்களவைத் சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கரிடம் இது தொடர்பான கடிதத்தை, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வழங்கினார். அதில், தர்மேந்திர பிரதானின் கூற்று பொய்யானது என்றும் அவையைத் தவறாக வழிநடத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதற்குச் சான்றளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை இணைந்து அவற்றில் அரசியலமைப்பு முகவுரை குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மாநிலங்களவையில் தவறான தகவல்களை வழங்கிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரிதான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜெகதீப் தன்கரை ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தினார்.  

    • தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
    • செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி  வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்.

    குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மாணவர்களின் எதிர்காலத்தை வெறும் வருமானம் ஈட்டுவதற்கான வழியாக மாற்றியுள்ளது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீட் தேர்வு ஊழலின் மையமாகத் தேசியத் தேர்வு முகமை உள்ளது. அது, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால், தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்துச் செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமையானது தற்போது, மெகா மோசடிகள் நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைமை தாங்கிய ஒருவரின் தலைமையில் உள்ளது.


     


    மாணவர்களிடமிருந்து ரூ.3,512.98 கோடி வசூலித்துள்ள NTA, தேர்வுகளை நடத்துவதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    ஆனால் இந்த லாபத்தைத் தேசிய தேர்வு முகமை, தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை மேம்படுத்தப் பயன்படுத்தவில்லை. எனவே, மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். 

    • நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
    • 'வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது'

    கடந்த ஜூலை [ஜூன் 27] ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவையில் ராகுல் காந்தியின் உரை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    கூட்டத்தொடரின் ஆரம்ப கூட்டங்களில் தான் பேசும்போது ஜெகதீப் தன்கர் மைக்கை ஆப் செய்வதாக கார்கே பல முறை குற்றம்சாட்டினார். ஆனால் மைக்கின் கண்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று ஜெகதீப் விளக்கம் அளித்தார். நேற்று முன் தினம் இருவருக்கும் இடையில் சற்று இணக்கம் ஏற்பட்டு அவை கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

    நேற்று மாநிலங்களவையில், காங்கிரஸ் எம். பி பிரமோத் திவாரி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது, ஆளும் பாஜக பல வழிகளில் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சாடினார். இந்த கருத்தை கண்டித்த ஜெகதீப் தன்கர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது என்று தெரிவித்தார். உடனே எழுந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், அதை [துரோகத்தை] எங்களால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்தார். இதனால் பொறுமை இழந்த ஜெகதீப் தன்கர், ஜெயராம் ரமேஷை பார்த்து, நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமை வாய்ந்தவனர், நீங்கள் உடனே வந்து எதிர்கட்சித் தலைவர் கார்கேவின் இடத்தில் அமர்ந்து அவரது வேலையே நீங்களே பார்க்கலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.

    ஜெகதீப் தன்கரின் கருத்தை கண்டிக்கும் வகையில் கார்கே உடனே எழுந்து, வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது, எனவே தான் ஜெயராம் ரமேஷை புத்திசாலி என்று தெரிவிப்பதன்மூலம் தலித் ஆகிய நான் மந்தமான நபர் என்றும் அவர் எனக்கு பதில் இங்கு வந்து அமர வேண்டும் என்றும் கூறுகிறீர்கள் என்று காட்டமாக ஜெகதீப் தன்கரிடம் தெரிவித்தார்.

     

    இதனால் சற்று கலக்கமடைந்த தன்கர், நான் அப்படி கூறவில்லை, எனது கருத்தை நீங்கள் திரித்துக் தவறாக எடுத்துகொண்டீர்கள், உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. நீங்கள் இருக்கும்போது ஜெயராம் ரமேஷ் ஏன் பேச வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு சொன்னேன், நீங்கள் சில பிரச்னைகளை தீர்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த கார்கே, என்னை உருவாகியவர் இங்கு உள்ளார் [சோனியா காந்தியை சுட்டிக்காட்டி] மேலும் மக்கள் என்னை உருவாக்கியவர்கள். நீங்களோ ஜெய்ராம் ரமேஷோ என்னை உருவாக்கவில்லை என்று தெரிவித்தார். 

     

    • முஸ்லிம் லீக்கின் சிந்தனை ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது- மோடி
    • வங்காளத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தவர், அப்போது இந்து மகாசபையின் தலைவரான முகர்ஜி- காங்கிரஸ்

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறுகையில் "பிரதமர் மோடிக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை. உண்மையில், வங்காளத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தவர், அப்போது இந்து மகாசபையின் தலைவரான முகர்ஜியைத் தவிர வேறு யாரும் இல்லை. பிரித்தாளும் அரசியலை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும் பாஜக-தான், காங்கிரஸ் அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.

    • ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
    • முதலமைச்சர் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து கூறிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருந்தார். ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால், லட்சக்கணக்கான மலிந்த் தியோராக்கள் எங்களுடன் வந்து சேர்வார்கள். காங்கிரஸை இது எந்த வகையிலும் பாதிக்காது என தெரிவித்துள்ளார்.

    மிலிந்த் தியோராவின் விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்தின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தீப் திக்ஷித், "மிலிந்த் தியோராவைப் போன்ற ஒருவர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவின் கூட்டணிக் கட்சியில் இணையப்போவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மனிதனுக்கு இரண்டு பெரிய பலவீனங்கள் இருக்கின்றன. பயமும், பேராசையுமே அவை" என தெரிவித்தார்.

    • இந்தியா பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • இந்தியாவின் பெயரையே மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் மத்திய அரசு இந்தியா பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

    எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால் தான் இந்தியாவின் பெயரையே மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி பாரத் என்று பெயரை மாற்றினாலும் அந்த பெயரிலேயே கூட்டணியின் பெயரை மாற்ற தயாராக உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்ற பெயரை பாரத் என்று குறிக்கும் வகையில் நல்லிணக்கம், நட்பு, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை கொண்டு வரும் கூட்டணி (பாரத்) என மாற்றம் செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் வரி வருவாய் குறித்த பட்டியலை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.
    • பொதுமக்களிடம் வசூலித்த வரி வருவாய் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

    மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை விட, பொதுமக்கள் மீது அதிக வரியை விதிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை விட மக்களிடம் இருந்து மத்திய அரசு அதிக வரி வருவாய் பெறுவதை விளக்கும் பட்டியலை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

    அதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் கிடைத்த வரி வருவாய் 40 சதவீதமாக உள்ளதாகவும் அதுவே பொதுமக்களிடமிருந்து பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக உள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

    கடந்த 2021 ஆண்டு கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து தற்போதைய மத்திய அரசு பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக குறைந்திருப்பதும், அதே நேரத்தில் பொதுமக்களிடமிருந்து வசூலித்த வரி வருவாய் 48 சதவீதமாக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மக்கள் மீது வரியை உயர்த்து, நண்பர்களுக்கு வரியை குறை, இதுதான் சூட்-பூட்-சர்க்காரின் செயல்பாடு என்று ராகுல்காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


    இதனிடையே, அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய நிதி மந்திரிக்கு எழுதியிருந்த கடிதத்தை தமது டுவிட்டர் பதிவில் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

    ×