search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனரக ட்ரெட்ஜிங் எந்திரம்"

    • அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை
    • தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட பணிகள் குறித்த கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

    நாகர்கோவில்:

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட பணிகள் குறித்த கூட்டம் நேற்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மீன்துறை இயக்குநர் பழனிசாமி, ராஜேஷ்குமார் எம். எல்.ஏ உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறு கையில், 'மீனவர்களுக்கு பாதுகாப்பான வகையில் துறைமுகத்தை மறுசீர மைப்பு செய்ய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின்பேரில், நியாட், சிடபிள் யூபி ஆர்.எஸ்., ஐஐடி மற் றும் மீன்வளத்துறையின் தொழில்நுட்ப வல்லுநர் களை வரவழைத்து பல கட்ட ஆய்வுகளை மேற் கொண்டு, உள்ளூர் மீன வர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. உள்ளூர் மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து திட்ட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது வரலாற்றிலேயே இது முதல் முறையாகும்.

    அதன்பின்னர் தமிழக அரசு திட்டத்திற்கான கருத்துரு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந் தது. இது குறித்து கடந்த 21.04.2022 அன்று நடை பெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 12-வது கூட்டத் தில், துறைமுக உட்கட்ட மைப்பு வசதிகள் மற்றும் பிரதான அலைதடுப்பு நீட்டிப்பு சுவர் ஆகிய இரண்டு பணிகளையும் ஒரே கருத்துருவாக்க கேட் டுக்கொண்டதற்கிணங்க, தமிழக அரசு மீண்டும், இரு பணிகளையும் ஒரே கருத் துருவாக்கி ரூ.253 கோடிக் கான திட்டத்தை அனுப்பி வைத்தது. அதனை கடந்த 29.07.2022 அன்று நடை பெற்றகூட்டத்தில் மத்திய ஒப்புதல் மற்றும் கண்கா ணிப்பு குழு ஒப்புதல் அளித்து, ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டு ஒப்புதலுக் காக பரிந்துரை செய்தது.

    துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்த தற்போது பணியில் இருக்கும் இயந்திரங்களை விட கனரக ட்ரெட்ஜிங் இயந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. துறைமுக பணிக்கான மத்திய அரசின் ஒப்புதல் ஓரிருநாட்களில் கிடைத்த தும், உடனடியாக டெண் டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும். இதற் கான பணிகளை தமிழக அரசு முழுவீச்சில் செயல்ப டுத்தி வருகிறது.

    எனவே, மீனவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து பணிகள் தொடங்கும் வரை அமைதி காக்க வேண்டும். லைப் ஜாக்கெட் அணிந்து படகில் பயணிப்பது, இயற்கை  சீற்றநேரங்களிலும், ஆபத்தான பகுதிகளி லும் உயிர் காக்க உதவும். துறைமுக பணிக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், லைப் ஜாக் கெட் அணிவது குறித்தும் தவறான கருத்துக்களை யாரும் அரசியல் லாபத்திற்காக பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×