என் மலர்
நீங்கள் தேடியது "பணம் வைத்து சூதாடிய"
- ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
- அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புஞ்சை புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி ஆதிபரா சக்தி கோவில் அருகே செயல்படாமல் உள்ள தனியார் நூல்மில் குடோனில் சூதாட்டம் நடைபெறுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவயிடம் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த இம்தியாஸ், தனசேகர், அமீர், ஜான் தேவராஜ், கண்ணன், கோகுல், ராஜேஷ்குமார், சசிகுமார் ஆகிய 8 பேர் என்பதும், இவர்களை சூதாட மில் காவலாளி பிரகாஷ் அனுமதித்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், 10 செல்போன்கள், 4 மோட்டார்சைக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- சூரம்பட்டி போலீசார் சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
- இதையடுத்து 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு, பாரதிபுரம், மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கராஜ் (50), அதேபகுதியை சேர்ந்த குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன் (52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.450 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சத்தியமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
இதில் செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி(73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து முத்துசாமியை கைது செய்து தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 மோட்டார் சைக்கிள்கள் ரூ.9 ஆயிரம் ரொக்கம், சீட்டுக்கட்டு க்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
- கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
- இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள முள் புதர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொடுமுடி, சாலைப்புதூரை சேர்ந்த மகேஷ்வரன் (33), பெரியசாமி (37), நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (49), தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்த நவமணி (53), இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் (44) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.1,200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல பர்கூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பர்கூர் அருகே உள்ள துருசனம் பாளையத்தில் கெஞ்சேகவுடர் என்பவரது வீட்டின் முன் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முருகன் (27), மாதேவன் (37), சிவலிங்கம் (28), தேவராஜ் (30), பரமேஸ் (30), நாகராஜ் (35), தேவராஜ் (28) ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.4,900 ஆகியவற்றையும் பர்கூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி:
பவானி மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மைலம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (34), சரவணன் (31), ஒலகடத்தை சேர்ந்த பூபதி (28), பாலன் (32), கண்ணடிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.
- அந்தியூர் பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம். விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தியூர் போலீசார் சம்மந்தப்பட்ட இடத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்மன்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன்(50), அதே பகுதியை சேர்ந்த தங்கவேல்(50), கணேசன்(33), செல்வக்குமார் (49), சீரங்கன் (50), மாரியப்பன் (36), சம்பத் (32), பழனிசாமி (47) ஆகிய 8 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர்.
- சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கே.ஆர்.பாளையம் முத்து கவுண்டர் வீதியை சேர்ந்த கந்தசாமி(47), அதேபகுதியை சேர்ந்த செல்லதுரை (45), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் (49), பள்ளிபாளையம் எக்கட்டூர் செந்தில்குமார் (43) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.3,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
- காசிபாளையம் அருகே உள்ள அரசலமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடத்தூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கடத்தூர் அடுத்த காசிபாளையம் அருகே உள்ள அரசலமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அய்யாசாமி (53), கிருஷ்ணன் (68), பெருமாள் (56), பரமேஸ்வரன் (50), நஞ்சப்பன்(62), முருகேசன் (50) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சீட்டுக்கட்டுகள், பணம் ரூ.7,050 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
- போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒங்கன்புரம் மற்றும் மரூர் பகுதியில் 10 பேர் கொண்ட 2 குழுவினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒங்கன்புரம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் தாளவாடி பகுதியை சேர்ந்த விஜய குமார் (40), பசுவராஜ் (30), சித்துராஜ் (25), அருள்ராஜ் (26), மாதேஷ் (50) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்த இருசக்கர வாகனங்கள், 52 சீட்டுகள், பணம் ரூ.1,000 ஆகியவ ற்றையும் பறிமுதல் செய்த னர்.
இதேபோல் மரூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாளவாடி பகுதியை சேர்ந்த பசுவராஜ் (35), நசீப் (52), சிவராமு (35), சிவகுமார் (41), நந்தேஷ் (47) ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள், பணம் ரூ.52 ஆயிரத்து 60 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
- இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த பழனிசாமி (52), கணேசன் (31), ஒட்டபாளையம் அய்யண்ணார் (48), முனுசாமி (52), கண்ணையன் (48) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.530 ரொக்கம் மற்றும் சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- கருங்க ல்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அபூபக்கர் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கருங்க ல்பாளையம் அழகரசன் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டி ருந்தது தெரிய வந்தது.
அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மணிகண்டன் (31), கார்த்திக் (28), பிரகாஷ் (33), மணிகண்டன் (35), பிரகாஷ் (35), ராஜா (32) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிட மிருந்து சீட்டு கட்டுகள், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
- போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தின்.
விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்த சுகுமார் சர்தார் (24), பிரோசெஸ்திரா (24), அருண் காயல் (28), சானு ஹால்டர் (28), சாந்தனு குமார் ஆரி (26), நித்யானந்தா போன்டல் (32), சுகுமார் (25), மந்தும் சர்தர் (30) ஆகிய 8 பேர் என தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.700 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
- பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 பேர் கைது
- ரூ. 44 ஆயிரத்து 190 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.
அப்போது பசுவேஸ்வரா கோவில் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உல்லாஸ் (27), மகாதேவசவாமி (32), சங்கரா (37), மகந்தேஸ் (29), மகாதேவசாமி (34) அஞ்சு (30), ஹர்தான் (24), சந்தான், ஹரிஷ் (29), மகேஷ்(46) ஆகியோர் என்பதும் அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 44 ஆயிரத்து 190 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் பங்களா புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பங்களாபுதூர் அடுத்த கொண்டையம் பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சக்திவேல்(37), சந்திர மூர்த்தி (51), கணேசன் (62), உதயகுமார் (52), முருகே சன், சதீஷ்(28) ஆகியோரை பங்களப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.600 ரொக்க பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.