என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் பாதிப்பு"
- ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின.
- வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கள்ளக் கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால், பிள்ளை தோப்பு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பின. இதனால் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
அந்த பகுதியில் உள்ள தெருக்களில் கடல் நீர் புகுந்ததுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததையடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தனர்.
மேலும் சிலர் கடல் நீர் வீட்டிற்குள் செல்லாமல் இருக்கும் வகையில் வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலையிலும் அழிக்கால் பிள்ளை தோப்பு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. லெமூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரை ஓரத்தில் இருந்த தற்காலிக கடைகள் வரை வந்து சென்றன. இதனால் அங்குள்ள கடைகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன.
கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள நுழைவாயில் மூடப்பட்டிருந்ததுடன் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.
தேங்காய் பட்டினம், இரவிபுத்தன் துறை, வள்ளவிளை, பூத்துறை, தூத்தூர் பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையை ஓட்டியுள்ள வீடுகள் வரை வந்து சென்றன. அந்த பகுதியில் உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீதும் வேகமாக மோதியது. இதனால் கடற்கரையில் உள்ள மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் சொத்தவிளை, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
- வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதியில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இந்தநிலையில் திருப்பூர் காங்கேயம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளியான குமார் என்பவர் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீட்டி ற்குள் குமார் மற்றும் அவரது மனைவி சசிகலா, மகன் கிஷோர், மகள் கீர்த்தனா ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.

வீடு இடிந்ததால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்து போராடினர். அவர்களின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி யடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று 4பேரையும் மீட்டனர். பின்னர் காய மடைந்த அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 40 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

மேலும் பலத்த மழை காரணமாக திருப்பூர் மங்களம் சாலை கே. வி .ஆர். நகர் , தந்தை பெரியார் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதில் வீட்டின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் சேதம் அடைந்தது.
வீட்டிற்குள் புகுந்த மழை நீரை பொதுமக்களே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மற்றும் விஏஓ.,ஆகியோர் பாதி க்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை உணவு வழங்கவும், மளிகை பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க ப்பட்டது.
கோவை, திருப்பூரில் பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் பெரு க்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் பெருக்கெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கரை யோரம் வசிக்கும் மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-44, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம் -51.60, திருப்பூர் தெற்கு -48, கலெக்டர் அலுவலகம் -32, அவி னாசி-2, ஊத்துக்குளி-11, பல்லடம் -38, மூலனூர்-7, உப்பாறு அணை -4, காங்கயம்-1.80, உடுமலை -42, அமராவதி அணை -9, திருமூர்த்தி அணை -8, ஐ.பி.,-6, மடத்துக்குளம்-27. மாவட்டம் முழுவதும் மொத்தம் 331.40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
- கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது.
- பாலம் உடைந்ததால் மாறங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி ைபயூர் வழியாக செல்கின்றனர்.
விழுப்புரம்:
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கர்நாட காவிலும் இந்த மழை பெய்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணைக்கட்டு வேகமாக நிரம்பியது. இதன் காரணமாக அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த உபரி நீர் திருவெண்ணெய்நல்லூர் வழியாக மாறங்கியூரில் உள்ள கோரை ஆறு தரைப் பாலம் வழியாக வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இந்த வெள்ள பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால் கோரை ஆறு தரைப்பாலம் உடைந்து சேதமானது. இந்த பாலம் உடைந்ததால் மாறங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி ைபயூர் வழியாக செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் காலையிலே சம்பவ இடத்திற்கு சென்று உடைந்த பாலத்தை பார்வையிட்டார். மேலும் உடைந்த பாலம் குறித்தும் அதனை சீர் செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பொது மக்கள் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டாம் என பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.