search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறியல்போராட்டம்"

    • இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தின் போது அந்த வழியே வந்த அரசு பஸ்களை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பஸ்களை மறித்து சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

    மறியல் போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் கடலூர், விழுப்புரம் சாலையில் பரபரப்பு நிலவியது.

    இதேபோல வில்லியனூர், சேதராப்பட்டு, பாகூர் உட்பட பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    • கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், அரசு வெளியிட்டுள்ள அரசாணை 152-ன்படி சுகாதார பணியாளர்களை அரசு தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி மாவட்டத்தில் திருப்பூர் மாநகரம், அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    கவர்னரின் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. யின் சார்பில் 500 தொழிலாளர்கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    கடலூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அரிசி, தயிர், மோர், வெண்ணை, நெய் ஆகிய உணவுகள் மீது போடப்பட்ட ஜி.எ.ஸ்டி. வரி உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஈம சடங்கிற்கு போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயிர்காக்கும் மருந்துகளின் மீதான விலையை 10 சதவீதம் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 30 ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் துரை தலைமையில் மாவட்ட துணை செயலாளர் குளோப், மாவட்ட பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குணசேகரன், மாநகர செயலாளர் நாகராஜ், சக்திவேல், மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் திரண்டனர். அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருந்து ஊர்வலமாக ரயில் நிலையத்தை முற்றுகையிட மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிக்கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்து போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை. இதனை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படும் என அறிவுறுத்தினர். ஆனால் அதனை மீறியும் ஊர்வலமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்றனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு சென்ற போது சற்று கால தாமதமாக வந்த சோழன் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்குவதற்காக ரயில் நிலையத்தில் நின்றது.


    இதனை பார்த்த போராட்டக்காரர்கள் சோழன் எக்ஸ்பிரஸ் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு கண்டித்து கோஷம் இழுத்துக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து அந்த திரண்டு இருந்த போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    ×