search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் கார்டு"

    • கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார்.
    • விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், பல்லடம் மற்றும் திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்கள் ஏ.டி.எம். கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு புகார்கள் வரவே அதிரடி விசாரணை நடத்தினர்.

    அப்போது திண்டுக்கல் மாவட்டம் மடூர், புகையிலைப்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 29) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார். அங்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை முதலில் குறி வைப்பார். அதன் பிறகு அவர்களுக்கு தானாக வந்து உதவி செய்வது போல உதவி செய்வார் . அப்போது பணம் எடுக்க தெரியாத முதியவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து, முதியவர்கள் தெரிவிக்கும் 4 இலக்க பின் நம்பரை புத்திசாலித்தனமாக தன் நினைவில் வைத்து கொள்வார்.

    அதன் பிறகு முதியவர்கள் கேட்கும் பணத்தை மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பன்னீர்செல்வம் முதியவர்களின் ஏடிஎம்., கார்டை அவர்களுக்கு திருப்பி கொடுக்க மாட்டார். அதற்கு பதிலாக அவர் ஏற்கனவே போலியாக வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை முதியவர்களிடம் கொடுத்து விடுவார்.

    முதியவர்கள் ஏ.டி.எம்.மில் இருந்து சென்ற பிறகு அவர்களின் கார்டை வைத்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்துள்ளார். இந்தநிலையில் தாராபுரத்தில் முதியவர்களின் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் தானாக எடுக்கப்படுவதாக தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் போலீசாருக்கு புகார்கள் வரவே, தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி நபரை தேடி வந்தனர்.

    தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பன்னீர்செல்வம் என்பதும் , முதியவர்களின் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மாஸ், தொப்பி அணிந்து டிப்-டாப்பாக வலம் வந்த அவர், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களது செல்போனுக்கு வங்கியில் இருந்து ஓ.டி.பி. எண் வந்திருக்கும்.
    • யார் ஓ.டி.பி. எண்ணை கேட்டாலும் கொடுக்கக்கூடாது என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    ஆண்ட்ராய்டு செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பிறகு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பாக பொய்யான தகவல்களை தெரிவித்து வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டுவது அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் தற்போது போலியான ஏ.டி.எம் கார்டுகளை தபாலில் அனுப்பி வங்கியில் உள்ள பணத்தை சுருட்டும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் முதலில் ஆன்லைனில் வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான தகவல்களை சேகரிப்பார்கள். பின்னர் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அவர்களது வீட்டு முகவரிக்கு தபாலை அனுப்புவார்கள். அதில் போலியான ஏ.டி.எம். கார்டுகளை அனுப்பி வைப்பார்கள்.

    பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களது செல்போனுக்கு வங்கியில் இருந்து ஓ.டி.பி. எண் வந்திருக்கும். அதனை உடனே சொல்லுங்கள். அப்போதுதான் உங்களது புது ஏ.டி.எம். கார்டு செயல்பட தொடங்கும். பழைய ஏ.டி.எம். கார்டும் செயல்படும் என்று பயமுறுத்தும் வகையில் பேசுவார்கள். இதை நம்பி நீங்கள் ஓ.டி.பி. எண்ணை சொல்லிவிட்டால் போதும் அடுத்த சில நொடிகளிலேயே வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் மோசடி கும்பல் சுருட்டி விடும்.

    அதன் பிறகே சம்பந்தப்பட்ட நபர் ஏமாற்றப்பட்டதை உணர்வார். அதற்குள் மோசடி ஆசாமி சுருட்டிய பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி இருப்பான். அவன் எங்கு இருக்கிறான் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மோசடி கும்பல் மிகவும் உஷாராக செயல்படுவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எனவே பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போனில் யார் ஓ.டி.பி. எண்ணை கேட்டாலும் கொடுக்கக்கூடாது என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் வங்கியில் உள்ள பணம் பத்திரமாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
    • தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொகளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

    தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் வந்து தியாகராஜனின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு, அவரது கார்டுக்கு பதிலாகமாற்று ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு, ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறிஉள்ளனர்.

    இந்நிலையில் ஏ.டி.எம். கார்டு மாற்றப்பட்டதை அறிந்த தியாகராஜன் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர்விரைந்து வந்தனர். பொது மக்கள் வருவதை பார்த்ததும் பிரசாந்த் தப்பியோடி விட்டார். சரத்குமார், கபிலை பிடித்து வைத்துக் கொண்டு மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நூதன முறையில் விவசாயிடம் பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மருத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பியோடி பிரசாந்தை தேடி வருகிறார்கள்.

    ×