search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்த நிலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது.
    • ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டி வந்த கார் டீலர்கள், தற்போது சுமார் 4.5 லட்சம் யூனிட் அளவிலான உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் உற்பத்தியாளர்களிடமே தேங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 3.5 லட்சம் யூனிட் கார்கள் விற்பனையாகும் அளவிற்கு கார் விற்பனை சந்தை வளர்ந்துள்ள போதிலும் ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

     

    ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விங்கேஷ் குலாட்டி இதுகுறித்து பேசுகையில், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தாயாராக இருக்கும் கார்கள் 4 லட்சம் யூனிட் அளவிற்கு விற்பனைக்கு செல்வது ஆரோக்கியமான சந்தையை உருவாக்கும்.

     

    ஆனால் தற்போது 1 லட்சம் யூனிட் அளவு கூட விற்பானையாகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கார் யூனிட்களை கூடுதலாக பல மாதங்களாக இருப்பில் வைத்திருக்கும் செலவு அதிகரிப்பது கார் வாங்குபவர்களுக்கு டீலர்களுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

    இந்த அசாதாரண நிலையை சரி செய்ய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக்கொள்வதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

    • சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை முன்பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தொடர்மழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மெலட்டூர் :

    மெலட்டூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து கனமழைபெய்து வருவதால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல்நிலையங்கள் உடனடியாக விற்பனை செய்யமுடியாமல் வாரக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை முன்பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தொடர்மழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல்நிலையத்தில் விற்பனைக்கு கொட்டி வைத்துள்ள நிலையில் தொடர் மழையின் காரணமாக நெல்கொள்முதல் செய்யும் பணி மந்த நிலையில் உள்ளதால் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் நெல் தேக்கமடைந்துள்ளது.

    அதனால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் உரிய நேரத்தில் விற்க முடியாமல் கொள்முதல் நிலையங்களில் வார கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மழை நீடித்தால் குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்யவும் முடியாமல், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டு குறுவை சாகுபடி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    ×