search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரூப்-1"

    • சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த குரூப் -1 தேர்வு எழுத 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • குரூப் - 1 தேர்வை மாவட்டம் முழுவதும் 11,238 பேர் எழுதினர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த குரூப் -1 தேர்வு எழுத 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்ட முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. காலை, 8:30 மணிக்குள் தேர்வர்கள் அனைவரும் மையங்களுக்கு வந்தனர். அவர்களின் நுழைவு சீட்டை சரிபார்த்து அலுவலர்கள் உள்ளே அனுப்பி வைத்தனர்.

    கண்காணிப்பு பணியில் 16 பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில், தேர்வை வீடியோவில் பதிவு செய்தனர். தேர்வு எழுத செல்வோருக்கு சிறப்பு பஸ்கள், மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குரூப் - 1 தேர்வை மாவட்டம் முழுவதும் 11,238 பேர் எழுதினர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
    • குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.அக்டோபர் 30 ந் தேதி நடக்க உள்ள, அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதிரித்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாரம் தோறும் நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கான முதல் மாதிரித்தேர்வு சமீபத்தில் நடந்தது. பயிற்சி பெற்று வரும் 148 பேர் மாதிரி தேர்வு எழுதினர். கடந்த தேர்வுகளில் வழங்கிய, கேள்வித்தாள்களை கொண்டு, தேர்வு நடத்துவதன் வாயிலாக பயிற்சி மாணவர் அதிகம் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×