என் மலர்
நீங்கள் தேடியது "துரித உணவு"
- காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது.
- உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.
இன்றைய அவசர உலகில் சிலர் பின்பற்றும் பழக்கங்கள் மெதுவாக கொல்லும் விஷமாக மாறக்கூடியது. குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடியது. அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்போம்.
மன அழுத்தம்
நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' (அமைதியான கொலையாளி) என்று சித்தரிக்கப்படுவதுண்டு. மன அழுத்தம் சில நிமிடங்களோ, சில நாட்களோ நீடிப்பதே சிக்கலானது. ஆனால் நாள் கணக்கில் மன அழுத்தத்துடனே இருப்பது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் மன அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திவிட வேண்டும்.
வேலை
எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்ய வேண்டும். வெறுப்புடனோ, அதிருப்தியுடனோ அந்த வேலையை செய்யக்கூடாது. ஆர்வம் இல்லாமல் இருந்தால் அந்த வேலையை தொடரக்கூடாது. சிறிது ஓய்வுக்கு பிறகோ, அந்த வேலை மீது ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொண்டோ பின் செய்யலாம். ஆனால் வெறுப்புடன் வேலை செய்வது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் கேடு விளைவிக்கும். தொடர் அதிருப்தியுடன் வேலை செய்வது தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதே நிலை தொடர்ந்தால் உடலை கொல்லும் மெதுவான விஷமாக மாறிவிடும்.
நல்லெண்ணம் இன்மை
நீங்கள் பழகும் நபர்கள், உங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்கள் உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியை பாராட்டும் நல் மனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்களாகவோ, உங்களின் செயல்பாடுகளை குறை கூறுபவர்களாகவோ, உங்கள் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள் உங்கள் மன ஆரோக்கியத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
துரித உணவு
துரித உணவை தொடர்ந்து உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகளில் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை அதிகமாக கலந்திருக்கும். இவை உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு வித்திடக்கூடும்.
உணர்ச்சிகளை அடக்குதல்
உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். மனதுக்கு பிடித்தமானவர்களின் செயல்பாடோ, நெருங்கிய நண்பர்களின் செயல்பாடோ வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலோ, விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தாலோ தயங்காமல் அதுபற்றி விவாதித்துவிட வேண்டும். அதைவிடுத்து உணர்ச்சிகளை அடக்குவது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து மன நோயாக மாறக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.
காலை உணவைத் தவிர்த்தல்
காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கவலையாக இருத்தல்
நாள்பட்ட பதற்றம் என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான மனக்கவலை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அடிக்கடி கவலையில் ஆழ்ந்திருப்பது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் அளவை உயர்த்த வழிவகுக்கும். காலப்போக்கில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பது உடல் பருமன், ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டுபண்ணும்.
சோர்வாக இருத்தல்
சுய பராமரிப்பு முக்கியமானது. தினமும் குளிப்பது, முகம் கழுவுவது, கை, கால்களை கழுவுவது என உடலை எந்த அளவுக்கு சுத்தமாக பராமரிக்கிறோமோ அதுபோல் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் மற்றும் உணர்வு இரண்டும் சோர்வுக்குள்ளாகிவிடும். இத்தகைய நாள்பட்ட சோர்வு இதய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
வெகுமதி அளிக்காதிருத்தல்
ஏதேனும் ஒரு செயலை நீங்கள் சிறப்பாக செய்து முடித்துவிட்டதாக தோன்றினால் மற்றவர்கள்தான் உங்களை பாராட்ட வேண்டும், வெகுமதி அளிக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. உங்களை நீங்களே பாராட்டி வெகுமதி அளித்துவிட வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பொருளை பரிசாக உங்களுக்கே வழங்கி ஆனந்தப்படலாம். உங்கள் செயல்பாடுகளை பாராட்டாமல் கடந்து செல்வதும் சோர்வையும், வாழ்க்கை மீது ஈர்ப்பு இல்லாத நிலையையும் ஏற்படுத்தலாம். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷம் போல் மாறி விரக்தியை ஏற்படுத்திவிடும். உடல்நல பிரச்சனைகளையும் உண்டுபண்ணும்.
- செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- நோய் வராமல் இருக்க ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது.
திருப்பூர் :
ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து உணவு பற்றிய பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக 15 வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நோய் வராமல் இருக்க நமது உடலில் ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது. சத்தான உணவுகளான ,கீரைகள், காய்கறிகள் இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் தேவைப்படுகிறது. இவற்றில் அதிகளவில் முக்கிய சத்துக்கள் காணப்படுகிறது.வைட்டமின் -ஏகொண்ட முருங்கை, பப்பாளி போன்ற பழம், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு அதிகம் கேடு விளைவிக்கும். சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தோடு வாழவேண்டும்.ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன், பாலசுப்பிரமணியம், சுந்தரம் , பூபதி ராஜா, பாக்கியலஷ்மி ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 ந் தேதி தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும். அதன் படி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் காய்கறிகளின் அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.தொடர்ந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் கண்காட்சியினை நடத்த திட்டமிட உள்ளார்கள் என்றார்.