search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிசய வாழை"

    • சாம்ராஜ் சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறிய ரக கோழிக்கூடு வாழைகள் பயிரிட்டுள்ளார்.
    • வாழை மரத்தில் சுமார் 1 அடி உயரத்தில் குலை தள்ளி உள்ளதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை அடுத்த இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(வயது 28). விவசாயி.

    இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறிய ரக கோழிக்கூடு வாழைகள் பயிரிட்டுள்ளார்.

    வழக்கமாக மேல் பகுதியில் குலைகள் தள்ளும் நிலையில், இதில் ஒரு வாழையில் மட்டும் சுமார் 1 அடி உயரத்தில் குலை தள்ளி உள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

    • வழக்கமாக எல்லா வாழை மரங்களும் மேலிருந்து தான் குலை தள்ளும்.
    • அதிசய வாழையை அப்பகுதியினர் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் இ.பி.குமாரவேல் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய வீட்டில் உள்ள ஒரு வாழை அதிசயமாக குலை தள்ளி உள்ளது. வழக்கமாக எல்லா வாழை மரங்களும் மேலிருந்து தான் குலை தள்ளும்.

    ஆனால் இந்த வாழை மரத்தில் நடுப்பகுதியில் இருந்து அதுவும் தண்டுக்கும், மேல் பகுதிக்கும் நடுவில் குலை தள்ளி உள்ளது. இது பார்ப்பதற்கு தண்டை கிழித்துக்கொண்டு வெளியில் வந்தது போல் உள்ளது. இந்த அதிசய வாழையை அப்பகுதியினர் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

    ×