என் மலர்
நீங்கள் தேடியது "கடலூரில் மழை"
- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்று (29-ந்தேதி) தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுதவிர கடலூர் மாவட்டத்தில் தொடர்கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர வீராணம், பெருமாள் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது.
- மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.
கடலூர்:
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ந் தேதி காலை பலவீனமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புயல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பெண்ணாடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகின்றது.
ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குடைப்பிடித்த படியும், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மழையில் பலர் நனைந்த படி சென்றதைக் காண முடிந்தது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது சிறிதளவு தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் தென்பெண்ணை கரையோரம் ஆங்காங்கே கரைகள் சேதமடைந்து தற்போது மணல் மூட்டைகள் அடுக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இருந்தபோதிலும் சாத்தனூர் அணையிலிருந்து மீண்டும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இன்று முதல் 13-ந் தேதி வரை மழை இருக்கும் என்பதால் ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்து உள்ளனர்.
- தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர்:
மத்திய வங்கக்கடலில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த மழை கடலூர் நகரம், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் நீடித்தது. விடிய விடிய பெய்த மழை இன்று காலையும் தொடர்ந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் அவதிபட்டனர்.
தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.