என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உபரி நீரை"
- உபரிநீர் கடந்த 25 நாட்களாக குடியிருப்பு பகுதியிலும், நெடுஞ்சாலையிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- தற்போது முதற்கட்டமாக ஒரு கால்வாய் அமைத்து சிறிது அளவு தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் ஏரி உபரிநீர் வெளியேற உரிய நீர்வழிப்பாதை இல்லாத காரணத்தால் உபரிநீர் கடந்த 25 நாட்களாக குடியிருப்பு பகுதியிலும், நெடுஞ்சாலையிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.தற்போது முதற்கட்டமாக ஒரு கால்வாய் அமைத்து சிறிது அளவு தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இருப்பினும் நீரின் வெளியேற்றம் அதிக அளவில் இருப்பதால் தற்போது மேலும் 2 கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பட்டாதாரர்களை அழைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்றுமாலை தாசில்தார் வள்ளமுனியப்பன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, நகராட்சி தலைவர் குணசேகரன், பொதுப்பணித்துறை அதிகாரி பிரபு, மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வருவாய்துறை பதிவேட்டில் உள்ள பழைய நீர்வழிப்பாதை செல்லும் பாதை குறித்து ஆராயப்பட்டது.
அதன்படி ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக வெளியேறும் வழித்தடம் குறித்த சர்வே எண் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழியில் அடுத்த கட்டமாக அளவீடு செய்து அதன்வழியாக கால்வாய் அமைத்து உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்தனர்.அதற்கு பொதுமக்களும் பட்டா தாரர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்