என் மலர்
நீங்கள் தேடியது "மறைவு"
- நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
- தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், விஜய் நடிகர் கவுண்டமணியை ஆரத் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
- கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
- உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் வருகை தருகின்றனர்.
தற்போது போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர்.
இந்நிலையில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாள் பயணமாக இன்று வாடிகன் கிளம்பியுள்ளனர். நாளை போப் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
இந்நிலையில், நாளைய தினம் (ஏப். 26) போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கையொட்டி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
- 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.
போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.
பொதுவாக போப்பாக உள்ளவர்கள் சைப்ரஸ், ஈயம் மற்றும் கருவாலி மரத்தால் ஆன பேழையில் அடக்கம் செய்யப்படுவார்கள்.
ஆனால், போப் பிரான்சிஸ் ஜிங்க-ஆல் பூசப்பட்ட சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.
100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
மேலும், போப்பின் இறுதிச் சடங்கிற்கு 2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகு புதிய போப்பை தேர்தந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் சிஸ்டைன் ஆலயத்தில் கூடுவார்கள். ரகசிய பரிமாணம் செய்து ரகசிய வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.
80 வயதிற்குட்பட்ட கார்டினல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
புதிய போப்பை தேர்ந்தெடுக்க மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை. ஒவ்வொரு வாக்கெடுப்புக்குப் பிறகும், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும்.
பின்னர் பெரும்பான்மையை பொருத்து புதிய போப் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது இரங்கலகளை தெரிவித்துள்ளனர்.
- போப் பிரான்சிஸ் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போப் பிரான்சிஸின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது இரங்கலகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கத்தோலிக்க திருச்சபையை பச்சாதாபம் மற்றும் முற்போக்கான மதிப்புகளுடன் வழிநடத்திய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நபரான போப் பிரான்சிஸின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.
அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தார். அவர் போப் பாண்டவருக்கு பணிவு, தார்மீக தைரியம் மற்றும் ஆழ்ந்த பச்சாதாப உணர்வைக் கொண்டு வந்தார்.
ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.
அவர் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது.
அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற செய்தியால் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஒரு ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அவரது அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்.
அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போப் பிரசான்சிஸ் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்லக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.
அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். மேலும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.
இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:-
கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான புனித போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
அவர் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுடன் நின்றார். சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார், அன்பு மற்றும் மனிதநேயம் பற்றிய தனது செய்தியால் மில்லியன் கணக்கான மதங்களை ஊக்கப்படுத்தினார்.
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்துடன் எனது எண்ணங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார்.
- சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.
பூந்தமல்லி:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். அதில் குடியேற ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொய்வடைந்த நிலையில் மீண்டும் வீடு கட்டும் பணிகள் வேகம் எடுத்தது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும் விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் விஜயகாந்த் வசிக்க வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலே போனது.
- ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.
- சினிமாவில் சிகரம் தொட்டு அரசியலுக்கு காலடி வைக்கும் போது கூட மதுரை மண்ணில் தான் விஜயகாந்த் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி கட்சி பெயரையும் அறிவித்தார்
ஒருவனின் மரணத்தில்... குழந்தை அழுதால் அவன் நல்ல தகப்பன்..., மனைவி அழுதால் அவன் நல்ல கணவன்..., ஆனால் அந்த ஊரே அழுதால் அவன் தான் தலைவன்...!!
இது ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் பேசிய பஞ்ச் டயலாக். எப்போதுமே பஞ்ச் டயலாக் பேசுவதில் ரஜினிக்கு போட்டியாக விஜயகாந்த் படங்களிலும் குறையிருக்காது. தனது ரசிகர்களை மகிழ்விக்க அரசியல் நெடி கலந்த பஞ்ச் டயலாக்குகள் பேசுவதில் விஜயகாந்த்துக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம்.
சிறு வயது முதலே தான் வளர்ந்த மதுரை மண்மீது அளவற்ற பாசம் கொண்டவர் தான் விஜயகாந்த். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகர காவல் திரைப்படத்தில் "வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை" என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரசித்தம் பெற்றது என்றால் மிகையில்லை.
சினிமாவில் சிகரம் தொட்டு அரசியலுக்கு காலடி வைக்கும் போது கூட மதுரை மண்ணில் தான் விஜயகாந்த் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி கட்சி பெயரையும் அறிவித்தார். அந்த அளவுக்கு தன்னை வளர்ந்த மதுரை மண்ணை தாயாக நேசித்தவர் விஜயகாந்த். அவரது ஆரம்ப கால வாழ்க்கையின் சில பிளாஷ் பேக், இதோ...
அழகர்சாமி- ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த விஜயராஜ் மதுரை தெற்கு வாசல் பகுதியில் பள்ளி படிப்பை தொடர அவரது தந்தை கீரைத்துரை பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தார். விஜயராஜூக்கு படிப்பு சரியாக வராததால் பத்தாம் வகுப்போடு பள்ளிக் கூடம் செல்வதற்கு குட்பை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நேரத்தில் தன் தந்தை நடத்தி வந்த ரைஸ்மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்தார் விஜயராஜ். அப்போதே அவருக்கு சினிமா மீது அளவற்ற மோகம் இருந்தது. பகலில் ரைஸ் மில்லில் வேலை பார்த்துவிட்டு இரவுகளில் சினிமா கொட்டகைகளில் படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டார் அதிலும் எம்.ஜி. ஆர். படங்களை விரும்பி பார்த்து வந்தார் விஜயராஜ்
எம்.ஜி.ஆர். போல நாமும் பிற்காலத்தில் நடிகராக, தலைவராக வரவேண்டும் என்று உத்வேகம் அப்போதே அவருக்குள் முளைவிட தொடங்கியது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தனது வாலிப நண்பர்களுடன் அவ்வப்போது பேசிக் கொண்டும், இரவு நேரங்களில் பார்த்த சினிமாவின் கதைகளை அப்படியே அவர்களுக்கு பாடம் எடுப்பது போல ஒப்பிப்பதும் அவரது அன்றாட வழக்கமாக இருந்தது .
இந்த நேரத்தில் அவரது நண்பர்கள் மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒரு ஸ்டு டியோ இருக்கிறது அதன் பெயரே ராசி. அந்த ஸ்டுடியோவில் போய் படம் எடுத்தால் நீ சினிமாவுக்கு போய்விடலாம் என்று ஆசை காட்டினார்கள். எப்போதும் சினிமா வாய்ப்புக்காக கனவு கண்ட விஜயராஜுக்கு அது நன்றாக தோன்றி யது. இந்த வாய்ப்பை கெட்டி யாக பிடித்துக் கொள்ள விரும்பினார் விஜயராஜ்.

நேராக கரிமேடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்றார். ஸ்டுடியோவின் உரிமையாளரான ஆசைத்தம்பியை சந்தித்து தன்னை அறிமுகம் செய்தார் விஜயராஜ் அப்போது அவரும் மதுரைக்கார வாலிபரின் ஆசைக்கு பச்சை கொடி அசைத்து தானும் உதவுவதாக கூறினார். ஆசை தம்பிக்கு பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால் இரவு 11 மணிக்கு மேல் வரும்படி விஜயராஜியிடம் கூறி அனுப்பி வைத்தார். விஜயராஜ் சோர்ந்து விடவில்லை பகலில் ரைஸ்மிலில் பணிபுரிந்து விட்டு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அந்த ஸ்டூடியோவில் விதவித மாக போஸ்களை கொடுத்து தன்னை ஒரு திரை கலைஞ ராக உருவாக்க அடித்தள மிட்டார். ஆசைத்தம்பி எடுத்த நள்ளிரவு நேர ஸ்டில்கள் தான் விஜயராஜின் சினிமா ஆசைக்கு கை கொடுத்து வாய்ப்புக்கு வலுசேர்க்கும் வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்த படங்களை எடுத்து கொண்டு பல சினிமா கம்பெனிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள் என்று ஏறி இறங்கினார் விஜயராஜ். 1979-ம் ஆண்டு "இனிக்கும் இளமை" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான் ரஜினி காந்த், கமலஹாசனுக்கு போட்டியாக விஜயராஜ் உருவெடுத்தார். அவரது நண்பர்களின் ஆலோசனைப்படி தனது பெயரையும் விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு திரையுலகத்தில் தடம் பதித்தார். அவர் தொட்ட சிகரம் மலைப்பானது. தனது நிறத்தால், உடல் தோற்றத்தால் தமிழ் திரையுலகில் பல்வேறு அவமானங்களையும் சந்திக்க விஜயகாந்த் தவறவில்லை. அவமானத்தை அவார்டாக மாற்றி மாபெரும் சாதனையை தமிழ் திரை உலகில் நிகழ்த்தினார் என்றால் அது விஜயகாந்த் ஒருவரால் தான் முடியும். ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.
சினிமா துறை மட்டுமல்ல அரசியலிலும் மாபெரும் வெற்றியை விஜயகாந்த் பெற்றார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகி எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். வாழ்நாளில் பலருக்கு ஏணியாக வாழ்ந்த வர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்தை பட்டித் தொட்டி எங்கும் ஒலிக்க செய்தவர் விஜயகாந்த். இவரது மரணம் மதுரை மண்ணில் நீங்காத சோக அலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல் மது ரையின் அனைத்து பகுதிக ளிலும் விஜயகாந்தின் சோக கீத திரை இசை அவரது நினைவை ஒலித்தபடி உள்ளன. அவனியாபுரம் பகுதியில் அவரது ரசிகர்கள் மொட்டை அடித்து மண்ணின் மைந்தனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
படிப்பு வராவிட்டாலும் வந்த நடிப்பை ஒரு வாய்ப்பாக பிடித்து தமிழக திரையுலக மற்றும் அரசியல் வரலாற்றில் விஜயகாந்த் பிடித்த இடம் மகத்தானது யாரும் குறை சொல்ல முடியாத பொது வாழ்க்கைக்கு சொந்தக்கார ரான இந்த "நல்லவன்" புகழ் இம்மண்ணில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
- வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
- அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில், கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் சுற்றுப்பயணம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.
இதில், வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். இவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டது.
வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார்.
- ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
'கேப்டன் மார்வல்' படத்தில் காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்தவர் கென்னெத் மிட்ச்செல் (49).
இவர் 5 வருடங்களுக்கும் மேலாக அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளெரோசிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார்.
இந்நிலையில், கென்னெத் மிட்சசெல் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார்.
இவரின் மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன்.
- பதவியேற்பு விழா முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன்.
ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.
இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் இரங்களை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.
ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவுக்கு ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அஞ்சலி நேரில் சென்று அஞ்சலி செலுத்தின்ர்.
ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், "ராமோஜி ராவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. பதவியேற்பு விழா முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன். கடந்த ஒன்றரை தசாப்தங்களில் அரசுகள் அவரை மிகவும் தொந்தரவு செய்தன, ஆனால் அவர் இன்று வரை மக்கள் பக்கம் நின்றார். அவர் தெலுங்கு திரையுலகிற்கு நிறைய உள்கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு கடவுள் பலம் கொடுக்க ஜனசேனா சார்பாகவும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
இந்நிலையில் திரைப்பட நடிகரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அவர் கூறுகையில், "அவரது கனவை அவரது வாரிசுகள் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எல்லோரும் அவருக்குள் ஒரு பெரிய மனிதரைப் பார்த்திருக்கலாம், ஆனால் நான் அவரிடம் ஒரு சிறு குழந்தையைப் பார்த்தேன். 2009 இல், நான் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்காக அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவது வழக்கம்.. தனது கருத்துக்களை டைரியில் பல்வேறு வண்ண மைகளால் எழுதுவார் அவரது குடும்பம் மட்டுமல்ல, தெலுங்கு மக்களும் சிறந்த மனிதரை இழந்துவிட்டார்கள் என்று எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
- கமலா பூஜாரி ஜி மறைவு வேதனை அளிக்கிறது.
- பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும் புகழ்பெற்ற இயற்கை விவசாயியுமான கமலா பூஜாரி. அவருக்கு வயது 74, அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரகம் தொடர்பான நோயால் இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த கமலா பூஜாரி சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
கோராபுட் மாவட்டத்தில் உள்ள பைபரிகுடா தொகுதியின் பத்ராபுட் கிராமத்தில் பிறந்த பூஜாரி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவராகவும், 100 வகையான அரிசிகளை அறுவடை செய்தவராகவும் இருந்தார். அவர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்.
அவருக்கு 2019 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் 2018 ஆம் ஆண்டில் மாநில திட்டமிடல் குழுவில் உறுப்பினராக இருந்தார் மற்றும் 2004 ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தால் சிறந்த விவசாயி விருதைப் பெற்றார்.
2002 இல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 'ஈக்வேட்டர் இனிஷியேட்டிவ் விருதை' வென்றார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மோகன் சரண் மாஜி, அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்தார். பூஜாரியின் மகன் தங்கதர் பூஜாரியிடமும் மாஜி தொலைபேசியில் பேசினார்.
"விவசாயத் துறையில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று ஒடிசா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார் அதில்,
கமலா பூஜாரி ஜி மறைவு வேதனை அளிக்கிறது. அவர் விவசாயத்திற்கு ஒரு மகத்தான பங்களிப்பைச் செய்தார், குறிப்பாக இயற்கை விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல். நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும் அவர் ஆற்றிய பணி பல ஆண்டுகளாக நினைவுகூரப்படும். பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என்று கூறியுள்ளார்.
Pained by the passing away of Smt. Kamala Pujari Ji. She made a monumental contribution to agriculture, particularly boosting organic agricultural practices and protecting indigenous seeds. Her work in enriching sustainability and protecting biodiversity will be remembered for… pic.twitter.com/GUupabkQ9m
— Narendra Modi (@narendramodi) July 20, 2024
- மாஸ்டர் மாதன் மறைவு செய்தியை அறிந்த கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாயின் பேரன்பைப் பெற்றிருந்தவர்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 98 மற்றும் 99-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்த மாஸ்டர் மாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றி இரவு உயிரிழந்தார். மாஸ்டர் மாதன் மறைவு செய்தியை அறிந்த கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாஸ்டர் மாதன் மறைவையடுத்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான, மதிப்புக்குரிய மாஸ்டர் மாதன்
நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு, இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிக்கும். நீலகிரி மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டவர். நீலகிரி தேயிலைத் தோட்டப் பிரச்சினைகளுக்கும், மலைப்பகுதிகளில், மனித விலங்கு மோதல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டவர். கடின உழைப்பாளர். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். மாண்புமிகு முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாயின் பேரன்பைப் பெற்றிருந்தவர். அவரது மறைவு, தமிழக பாஜகவுக்குப் பேரிழப்பாகும்.
இன்று, பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன், ஐயா மாஸ்டர் மாதன் அவர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளோம். நாளைய தினம், தமிழகம் முழுவதும், தமிழக பாஜக மாவட்ட அலுவலகங்களில், மாஸ்டர் மாதன் அவர்களது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படும்.
மாஸ்டர் மாதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும். ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.