என் மலர்
நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
- பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானார்.
2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரைப் தொடர்ந்து நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூன் 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
- மே 1-ந்தேதிக்குள் வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் வழங்கப்பட வேண்டும்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
மே 1-ந்தேதிக்குள் இதில் விளையாட தகுதிப் பெற்றுள்ள அணிகள் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை ஐசிசி-க்கு அனுப்ப வேண்டும். இருந்தபோதிலும் மே 25-ந்தேதி வரை அணியில் மாற்றம் தேவை என்றால் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த நிலையில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 26-ந்தேதி வரை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆனால், லீக் ஆட்டம் மே 19-ந்தேதியுடன் முடிவடைகிறது.
பிளேஆஃப் சுற்றுக்கு இடம்பெறாத அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களை முன்னதாகவே அனுப்பு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிளேஆஃப் சுற்றுகளில் விளையாடும் அணிகளில் இடம் பிடித்திருந்தால் அவர்கள் ஐபிஎல் முடிந்த உடன் செல்வார்கள்.
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்கும் இவ்வாறுதான் வீரர்கள் சென்றார்கள். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது. தேர்வாளர்கள் பெரும்பாலான போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். சிறப்பான ஆட்டம் மற்றும் உடற்தகுதி போன்ற பல்வேறு தகுதிகள் தேர்வில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் விராட் கோலி இடம் பெறுவாரா? என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.
- டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் அடுத்தடுத்தாண்டுகளில் நடைபெறுகின்றன.
- இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என ரோகித் தெரிவித்துள்ளார்.
மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் ஆகியவற்றில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மோதியது. இரண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.
வருகிற ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்த அணியையும் இவர்தான் வழி நடத்துகிறார்.
இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 36 வயதான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது, குறிப்பாக ஒயிட்பால் (டி20) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன் என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் ரோகித் சர்மா இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன் உடன் கவுரவ் கபூர் நடத்தும் "பிரேக்பாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது எட் ஷீரன் ஓய்வு குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார்.
எட் ஷீரன் ஓய்வு எப்போது எனக் கேட்ட கேள்விக்கு,
ரோகித் சர்மா: "இந்த நேரத்திலும் நான் நன்றாக விளையாடி வருகிறேன். ஆகவே, இன்னும் சில வருடங்கள் விளையாடும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்" என்றார்.
எட் ஷீரன்: இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வரைக்கும்?
ரோகித் சர்மா: "ஆமாம். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். 2025-ல் இங்கிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்திய அணி அதற்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விகள் உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது." என்றார்.
- இன்று முதல் 20-ந்தேதி வரை நான்கு நகரங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது.
- மே 16-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை 2-வது கட்டமாக கயானா, டிரினிடாட் அண்டு டொபாகோ எடுத்துச் செல்லப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் (டிராபி) சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளது. இன்று அமெரிக்க வீரர் அலி கான் மற்றும் இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றவரும், யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படுபவருமான கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளை நடத்தும் ஆறு நகரங்களில் உலா வர இருக்கிறது. அப்போது கிரிக்கெட் பிரபலங்கள் இந்த கோப்பையை ஏந்தி செல்வார்கள். போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும் பார்படோஸ் நகரில் முதன்முதலில் வலம் வர இருக்கிறது.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இதுபோன்று கோப்பைகள் எடுத்துச் செல்வது வழக்கம். உலகம் முழுவதும் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் அல்லது போட்டியை நடத்தும் நாட்டில் இதுபோன்று கோப்பை எடுத்துச் செல்லப்படும். ரசிகர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் மீடியாக்கள் ஆகியவற்றை ஈர்ப்பதற்கான ஒரு வழி இதுவாகும். போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் இவ்வாறு நடத்தப்படும்.
ஏப்ரல் 12-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை பார்படோஸ், ஆன்டிகுவா, பார்புடா, செயின்ட் லூசியா ஆகிய நகரங்களில் உலகக் கோப்பை எடுத்துச் செல்லப்படும். பின்னர் மே 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை செயின்ட் வின்செட், கிரேனடைன்ஸ், டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் கயனா ஆகிய இடங்களில் எடுத்துச் செல்லப்படும்.
- உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
- அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவு.
ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் 20 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்திய அணியின் பேட்டிங் பிரிவில்- ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பிரிவில்- ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே மற்றும் அக்சர் பட்டேல் இடம்பெறுவர் என தெரிகிறது.
ஸ்பின்னர்கள் பிரிவில்- குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், கே.எல். ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்று தெரிகிறது. வேகப் பந்துவீச்சாளர் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது.
- ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
- ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.
புதுடெல்லி:
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புரோமோ இன்று வெளியிடப்பட்டது. இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
INDIAN TEAM PROMO FOR THE T20I WORLD CUP. ??
— Johns. (@CricCrazyJohns) April 23, 2024
- Rohit Army is ready to create history.pic.twitter.com/2jjM9wYQQW
- கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது.
- டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கபட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் நிரந்தரமானது என்பதற்கு சான்றாகும். ஃபார்ம் தற்காலிகமானது. மேலும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பெற வேண்டும். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.
- சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
- கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,
புதுடெல்லி:
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.
இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.
மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-
ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.
அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
- உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள்.
- இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக டோனி தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆலோசனை கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள் என்பதே ராகுல் டிராவிட்டுக்கு என்னுடைய நேரடியான ஆலோசனையாகும். அணியின் சரிவு என்பது கேரக்டரில் இருந்து தான் உருவாகிறது. எனவே உங்கள் கேரக்டரில் நீங்கள் சமரசம் செய்யும் போது வெற்றி கிடைக்கிறது.
உங்களிடம் ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ரவி பிஸ்னோய் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுங்கள். ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் மயங் யாதவை தேர்வு செய்யலாம். கலீல் அகமது, மோசின் கான், முகேஷ் குமார் உட்பட இந்தியாவுக்காக விக்கெட் டேக்கிங் பவுலர்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.
இம்ரான் கான் அல்லது ஸ்டீவ் வாக் போன்ற மகத்தான கேப்டன்கள் எப்போதுமே விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அது தான் வெற்றிக்கான ரகசியமாகும். ஆனால் இந்த டெம்ப்ளேட்டை நம்முடைய அணி புறக்கணிக்கிறது. 6 பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்காமல் போனால் 7-வது பேட்ஸ்மேனாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது.
என்று சித்து கூறினார்.
- முதல் டி20 உலகக் கோப்பையில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் விளாசியர்.
- கிறிஸ் கெய்ல், உசைன் போல்ட் ஆகியோரும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கை 2024 டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமனம் செய்துள்ளது.
2007-ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரை அறிமுகப்படுத்தியபோது இங்கிலாந்து அணிக்கு எதிரான பிராட் ஓவரில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடித்து சாதனைப் படைத்தவர் யுவராஜ் சிங். மேலும், இந்திய அணி 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.
ஏற்கனவே டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், அதிவேக ஓட்டப்பந்தைய வீரராக கருதப்படும் உசைன் போல்ட் ஆகியோரையும் ஐசியி தூதராக நியமனம் செய்துள்ளது.
இது தொடர்பாக யுவராஜ் சிங் கூறியதாவது:-
ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது உள்பட டி20 உலகக் கோப்பையில் விளையாடியதில் இருந்து எனது சில அருமையான கிரிக்கெட் நினைவுகள் வந்துள்ளன, எனவே இந்த பதிப்பின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, இது இன்னும் மிகப்பெரியதாக இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த இடமாகும். மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்கள் உருவாக்கும் வைப் (vibe), உலகின் மற்ற பகுதியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமானது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் கிரிக்கெட் விரிவடைகிறது. டி20 உலகக் கோப்பை மூலம்அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மோதல் இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இருக்கும், எனவே புதிய மைதானத்தில் உலகின் சிறந்த வீரர்கள் விளையாடுவதைக் காண்பது ஒரு பாக்கியம்.
இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. 20 அணிகள் 9 இடங்களில் 55 போட்டிகளில் விளையாடுகின்றன. இறுதிப் போட்டி ஜூன் 29-ந்தேதி பார்படோஸில் நடக்கிறது.
- டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 முதல் 29 வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.
- இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. 9-ம் தேதி பாகிஸ்தானுடனும், 12-ம் தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடாவுடனும் மோதுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. நியூசிலாந்து மட்டுமே இதுவரை டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனை தேர்வு செய்யும் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பர் என தகவல் வெளியாகியுள்ளது.
- இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டன்.
- விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.
அந்த வரிசையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக அறிவித்து இருக்கிறது.

அதன்படி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Presenting #TeamIndia for the ICC Men's T20 World Cup to be hosted in the West Indies and USA! pic.twitter.com/6NoFJBMOjT
— BCCI (@BCCI) April 30, 2024