search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

    அதன்பின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒவ்வொருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.


    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி வேகமாக சேசிங் செய்தது. 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 15 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்தது. 15-வது ஓவரில் 24 ரன்கள் குவித்த அந்த அணி பெரிய அளவில் தன்னம்பிக்கையை பெற்றது.

    ஆனால், 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை வீசிய பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் மொத்தமே ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பும்ராவின் பந்துவீச்சை சந்திக்க தென்னாப்பிரிக்கா அணி திணறியது. அதன் காரணமாக, அந்த அணிக்கு இருந்த அழுத்தம், இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    பாராட்டு விழாவில், பும்ராவை 'உலகின் எட்டாவது அதிசயம்' மற்றும் 'தேசிய பொக்கிஷம்' என்று அழைக்கும் மனுவில் கையெழுத்திடுவீர்களா என்று கேட்டதற்கு, கோலி சிறிதும் தயங்காமல் கையெழுத்திடுவேன் என்று விராட் கோலி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- மைதானத்தில் இருந்த அனைவரையும் போலவே ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையும் கையை விட்டு நழுவுகிறது என்று நினைத்தோம். ஆனால், கடைசி ஐந்து ஓவரில் என்ன நடந்ததோ அது மிகவும் அற்புதமானது. நாம் அனைவரும் இந்த போட்டியில் நம்மை மீண்டும் வெற்றியை நோக்கி கொண்டு வந்த வீரரை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்த தொடரில் மீண்டும், மீண்டும் அதை செய்தார். அந்த கடைசி ஐந்து ஓவரில் பும்ரா இரண்டு ஓவர்களை வீசினார். அது அற்புதமாக இருந்தது என்றார்.

    இதனிடையே இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    • இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.
    • இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

    டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதோடு பிரதமர் மோடியுடன் அவர்கள் காலை உணவில் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தில் இன்று மாலை மும்பையில் நகர் வலம் வரவுள்ளனர். 


    • இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
    • இந்திய கேப்டன் ரோகித் சர்மா நடனம் ஆடி மகிழ்ந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.


    இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டெல்லியில் உள்ள ஐடிசி மவரியா விடுதிக்கு சென்றனர். அங்கு இந்திய அணி வீரர்களுக்கு மேளதாளங்களுடன் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விடுதிக்குள் நுழைந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மேளதாள இசைக்கு ஏற்றவாரு நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


    அதன்பிறகு விடுதி சார்பில் விசேஷமாக உருவாக்கப்பட்ட கேக்-ஐ இந்திய வீரர்கள் வெட்டினர். இந்திய வீரர்கள் வருகையால் தங்கும் விடுதி உற்சாக நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு பேருந்து மூலம் சென்றுள்ளனர்.


    பிரதமரை சந்திக்கும் இந்திய அணியிர் மும்பையில் திறந்தவெளி வாகனத்தில் உலா வரவுள்ளனர். இதற்காக திறந்தவெளி வாகனம் சிறப்பு ஸ்டிக்கர்களால் அசத்தலாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. 

    • இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

     

    கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.


    தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் கோப்பையுடன் நகர் வலம் வரவுள்ளனர். 


    • தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
    • ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாடும் இருதரப்பு போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி சம்மதம் தெரிவித்துள்ளார்.

    மேலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தஸ்கின் அகமது விளையாடவில்லை.
    • பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லாததால் போட்டியில் விளையாடவில்லை.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லை. இதனால் அவர் போட்டியில் விளையாடவில்லை.

    இதனால், ஹசன் சாகிப் மற்றும் முஸ்தபிசுர் ரகுமான் என்ற 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வங்காளதேச அணி போட்டியை எதிர்கொண்டது. தஸ்கின் போட்டியில் விளையாடாமல் போனது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் நிபுணர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தஸ்கின் அகமது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் போனதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

    அறையில் படுத்து தூங்கிய அவர், போட்டிக்காக விளையாட எழுந்து வரவில்லை. இதனால் அணி வீரர்களுக்காக தயாராக இருந்த பஸ்சிலும் அவர் ஏறவில்லை. சரியான நேரத்திற்கு வராத சூழலில் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவரை அணி நிர்வாகமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பின் பஸ்சை தவற விட்டதற்காக சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் தஸ்கின். ஆனாலும் அவரை இந்திய அணிக்கு எதிரான போட்டியில், விளையாட வைக்கவேண்டாம் என அணியின் பயிற்சியாளர் முடிவு செய்திருக்கிறார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் தூக்கம் காரணமாக ஓட்டல் அறையில் மூத்த வீரர் ஒருவர் படுத்துக்கொண்டு, விளையாடாமல் போனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார்.
    • இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.

    இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார். இருவரும் 222 புள்ளிகளுடன் உள்ளனர். 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ் உள்ளார். 4, 5 இடங்கள் முறையே சிக்கந்தர் ராசா, சகிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர்.

    இந்திய அணியின் மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் 7 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இந்தத் தோல்வியால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தத் தோல்வியால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். சில முன்னாள் வீரர்கள் ஒட்டுமொத்த அணியையும் நீக்கவேண்டும் என கோரினர். அணிக்குள் குழுவாதம் பற்றிய வதந்திகளும் உள்ளன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அணிக்குள் சில அரசியல் இருப்பதாகவும், சில வேறுபாடுகள் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

    ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் இதற்கு முன் ஆட்டங்களை இழந்திருக்கிறோம். இது வெறும் வெளிப்புற உரையாடல்.

    இதே அணி இறுதிப்போட்டி, அரையிறுதியில் விளையாடியிருந்தாலும் கோப்பையை வெல்லவில்லை என்பது உண்மைதான்.

    அணி எதிர்கொள்ளும் விமர்சனம் நியாயமானது. நாங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் இதற்கு நாங்கள் தகுதியானவர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத வீரர்களால் வெற்றிபெற முடியாது.

    டி20 உலகக் கோப்பையில் எங்கள் ஆட்டத்தில் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நமது இழப்புகளுக்குப் பின் பல காரணங்கள் உள்ளன. ஒரு அணி தோற்றால் பந்துவீச்சும், பேட்டிங்கும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது. அந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    இருப்பினும், அங்கு சகஜ நிலை திரும்ப தாமதமானதால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் நாளை அதிகாலை டெல்லியில் தரையிறங்கும். வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.


    நாடு திரும்புவதை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உலகக் கோப்பையுடன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் போஸ் கொடுத்தனர்.


    • புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
    • பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

    பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் தங்கினர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    இருப்பினும், அங்கு சகஜ நிலை திரும்ப தாமதமானது. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்தியா அணி நாளை காலை நாடு திரும்புகிறது. அணியுடன் புறப்படும் சிறப்பு விமானம் நாளை அதிகாலை டெல்லியில் தரையிறங்குகிறது.

    பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்பாடு செய்து விமானம் மூலம் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என அனைவரும் நாடு திரும்புகின்றனர்.

    வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளதால் நாளை டெல்லி விமான நிலையத்தில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது.
    • நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மோதின. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் முயற்சியில் டேவிட் மில்லர் பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவின் அபாராமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அந்த கேட்ச் தான் இந்த போட்டியின் முடிவையும் மாற்றியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து டேவிட் மில்லர் மௌனம் கலைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தோல்வி ரொம்ப வலிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது. நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனக்குத் தெரிந்த ஒன்று, இந்த யூனிட்டைப் பற்றி நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதுதான்.

    இந்த பயணம் நம்பமுடியாத ஒன்றாக இருந்தது, மாதம் முழுவதும் உயர்வும் தாழ்வும் இருந்தது. நாங்கள் வலியை சகித்துக் கொண்டோம். ஆனால் இந்த தோல்வி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து சிறப்பாக எங்களது விளையாட்டை கொடுப்போம்.

    என்று மில்லர் கூறினார்.

    ×