search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய காற்று தினம்"

    • மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.
    • சர்வதேச தூய காற்று தினம் 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் 2023-ஐ முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தினை கலெக்டர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    காற்று மாசுபாடு பூமியின் சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.

    ஆகவே 2019-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது 74-வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

    இதன் நோக்கமானது 2030-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று என்ற தீர்மானத்தை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. எனவே காற்றின் தரம் மற்றும் கழிவு மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை குறைக்க நாமும் நமது பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும்.

    இந்த ஆண்டுக்கான செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படும் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான "தூய காற்றிற்காக ஒன்றி னைவோம்" என்பதை நாம் அனைவரும் நடைமுறைப் படுத்தி நீலவானின் தூய காற்றினை பெற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி சுற்றுசூழல் பொறியாளர் சுகுமார், உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஜெபா , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • நீலவானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் 2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது.

    தென்காசி:

    நீலவானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் 2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    நீலவானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளான செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளிலுள்ள பஸ் நிலையங்களில், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், திரைய ரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வினியோகிக் கப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 2022-ம் ஆண்டுக்கான நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கொண்டாடப்படு வதையொட்டி விழிப்புணர்வு பிரசாரத்தை தென்காசி கலெக்டர் ஆகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    துண்டு பிரசுரங்களில், பொதுமக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் என்றும் காற்று மாசுபாடு பூமியின் சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. மாசற்ற காற்று மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.

    ஆகவே 2019-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதன் நிலையான வளர்ச்சி குறித்த 74-வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன் நோக்கமானது 2030-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் மாசுகளால் ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று என்ற தீர்மானத்தை ஐநா சபை ஏற்றுக்கொண்டது.

    எனவே காற்றின் தரம், கழிவு மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை குறைக்க நாமும் நமது பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும். 2022-ம் ஆண்டில் செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படும் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளாக தூய காற்றை நாம் அனைவரும் பெறுவோம் என்பதை நாம் ஒன்றிணைந்து பெற்றிட உறுதி மொழிகளை ஏற்று நடை முறைப்படுத்தி நீலவானின் தூய காற்றினை பெற்று விடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சுயம்பு தங்கராணி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் நக்கீரன், உதவி பொறியாளர் ஜெபா, தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×