search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வ.உ.சி. மார்க்கெட்டில்"

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தாறு மாறாக உயர்ந்து விட்டது.
    • திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாளவாடி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்தாகி வருகிறது.

    இங்கு காய்கறிகள் சில்லரை மற்றும் மொத்த வியாபாரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக ஒரு சில காய்கறிகளின் விலை தாறு மாறாக உயர்ந்து விட்டது.

    தினமும் 40 டன் காய்கறிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு 30 டன் மட்டுமே காய்கறிகள் வர த்தாகி இருந்தது.

    கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்ற காலி பிளவர் இன்று ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பச்சை மிளகாய் கடந்த வாரம் ரூ.30 விற்ற நிலையில் இன்று ரூ.60 ஆக உயர்ந்து உள்ளது.

    கருப்பு அவரை கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 70-ம், கத்தரிக்காய் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.௭௦-க்கும், கொத்தவரங்காய் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.70-க்கும் விற்பனையானது.

    வெண்டைக்காய் கடந்த வாரம் ரூ. 40 -க்கு கிலோ விற்ற நிலையில் இன்று ரூ.80-க்கு விற்பனை யானது.வெண்டைக்காயை பொறுத்தவரை எப்போதும் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆயிரம் கிலோ வரத்தாகி வந்த நிலையில் இன்று வெறும் 400 கிலோ மட்டுமே வரத்தாகி உள்ளது.

    காய்கறிகளின் திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேப்போல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    உருளைக்கிழங்கு-ரூ.25, முட்டைகோஸ்-ரூ.10, தக்காளி-ரூ.30, பெரிய வெங்காயம்-ரூ.25, சின்ன வெங்காயம்-ரூ.35, கேரட்- ரூ.40, முள்ளங்கி-ரூ.20, சுரக்காய் - ரூ.5, பாவ க்காய்-ரூ.40, புடல ங்காய்-ரூ.30, பீட்ரூட்- ரூ.50, பீன்ஸ் -ரூ.50, பட்டவரை -ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.60.

    • தக்காளி விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் உயர்ந்து விட்டது.
    • வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் உயர்ந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை வந்தன. இங்கு கிருஷ்ணகிரி, ஆந்திரா, தாளவாடி, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி வந்தன.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கள் வரத்தும் குறைந்து வருகின்றன.

    இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் உயர்ந்து விட்டது.

    இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு கனமழை எதிரொலியாக கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து மட்டும் 1,500 பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி இன்று கிடுகிடுவென உயர்ந்து ரூ.25-க்கு விற்கப்படுகிறது. 

    • முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது.
    • இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி, பெங்களூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மேச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    தற்போது முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட ரூ.60 வரை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் கேரட், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனையானது. இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது. இதேப்போல் கத்திரிக்காய் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.

    வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்களின் விலை கிலோவில் வருமாறு:

    பீர்க்கங்காய்-70, பாவைக்காய்-50, கருப்பு அவரை-110, பட்ட அவரை-70, சுரைக்காய்-20, பச்சைமிளகாய்-50, முட்டைகோஸ்-50, காலி பிளவர்-40, முருங்கைகாய்-120, வெண்டைக்காய்-40, முள்ளங்கி-50, பீட்ரூட்-80, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-45, தக்காளி-30.

    • ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகின்றன. ஒட்டன் சத்திரம், மேச்சேரி, தாளவாடி, ஊட்டி, மேட்டு ப்பாளையம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் 20 டன் காய்கறிகள் விற்பனை க்கு வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    கேரட்டை பொருத்த வரை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் 70 ரூபாய் வரை விற்ற கத்திரிக்காய் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பீன்ஸ்-80, பீட்ரூட்-50-70, சவ்சவ்-30, குடைமிளகா-60, கோவக்காய்-40, கருணைக்கிழங்கு-40, தக்காளி-40, பீர்க்கங்காய்-60, முள்ளங்கி, பாவக்காய், புடலங்காய், வெண்டைக்காய்-40, முருங்கைக்காய் -60, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-40, இஞ்சி-70, முட்டைகோஸ்-25, கருப்பு அவரைக்காய்-90, பட்டை அவரைக்காய்-60, காளிப்ளவர்-50.

    இன்னும் சில நாட்கள் காய்கறிகள் விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு சரியாகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×