என் மலர்
நீங்கள் தேடியது "டி20 உலக கோப்பை கிரிக்கெட்"
- இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
- ரன்ரேட் முறையில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.
England won by 4 wkts
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 1-ல் இன்றைய கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிசங்கா 67 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 74 ரன்கள் குவித்தது. இதனால் 15 ஓவரில் ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 111 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஸ்டோக்ஸ் - சாம் கரன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாம் கரன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டியது நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது.
கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா அணி உலககோப்பையில் இருந்து வெளியேறியது.
- சூர்யகுமார் யாதவ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அரைசதம் விளாசினார்
- உலகக்கோப்பையில் ஐந்து போட்டிகளில் 3-ல் அரைசதம் கண்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் வேற்றுகிரகவாசி: பாகிஸ்தான ஜாம்பவான்கள் புகழாரம்ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார்.
எந்தவித அச்சமின்றி பந்துகளை நாலாபுறமும் விளாசுகிறார். இந்த பந்தையெல்லாம் அடிக்க முடியுமா? என்ற கேட்க தோன்றும் பந்துகளையெல்லாம் கீப்பருக்கு பின்னால் சிக்சராக விளாசுகிறார். அவருக்கு எப்படித்தான் வீசுவது என பந்து வீச்சாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று ஜிம்பாப்வே அணிக்கெதிராக கடைசி பந்தை விக்கெட் கீப்பருக்கு மேலாக அருமையாக சிக்ஸ் அடித்திருப்பார். அவரை புகழாத விமர்சகர்ளே இல்லை.
ஐந்து பேட்டிகளில் 225 ரன்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 246 ரன்கள எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம், சூர்யகுமார் வேற்று கிரகத்தில் இருநது வந்துள்ளார் என புகழாரம் தெரிவித்துள்ளார்.
மேலும் ''சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளதாக நினைக்கிறேன். மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட நபராக இருக்கிறார். அவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் ரன்கள் குவித்துள்ளார்'' என வாசிக் அக்ரம் தெரிவித்துள்ளார்.
மற்றொரும் பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் கூறுகையில் ''டி20-யில் சூர்யகுமாரை ஆட்டமிழக்க செய்ய வழி என்ன?. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு நீங்கள் திட்டம் தீட்ட முடியும். ஆனால், டி20-யில் ஏற்கனவே பந்து வீச்சாளர்கள் சிரமப்படும்போது, ஒருவர் இந்த மாதிரியான ஃபார்மில் இருக்கும்போது பந்து வீசுவது கடினம்.
பாகிஸ்தான் குரூப் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதாக நினைக்கிறேன். அவர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளால் தாக்கினார்கள். ஒருவேளை சூர்யகுமாரை அவுட்டாக்க இது ஒன்றுதான் வழியாக இருக்கலாம்'' என்றார்.
- மேத்யூ ஹெய்டன் பாகிஸ்தான் அணிக்கான ஆலோசகராக உள்ளார்.
- பாகிஸ்தான் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்படுகிறது. ஆனால் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியை சந்தித்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
மேலும், இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய மங்கியது என்றே சொல்லாம். ஆனால், அதன்பின் வீறுகொண்டு எழுந்த பாகிஸ்தான் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றது. நெதர்லாந்து தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
அந்த அணியின் மிடில் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் இப்திகார், ஹாரிஸ், சதாப் ஃபார்முக்கு வந்துள்ளனர். ஏற்கனவே தொடக்க வீரர் ரிஸ்வான், பாபர் ஆசம், பந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் உள்ளதால் மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.
பாகிஸ்தான் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) சிட்னியில் நடைபெற இருக்கும் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், பாகிஸ்தான் அணி அச்சுறுத்தலாக மாறிவிட்டது என மூன்று அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹெய்டன் கூறுகையில் ''முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் தோற்றபின், இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிடுவோம் என்ற சாத்தியக்கூறான யோசனைகள் இருந்தன. ஆனால், அந்த நிலையில் பாகிஸ்தான் வீறுகொண்டு சூப்பர் ஃபார்முக்கு திரும்பிய தருணம், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.
இந்த போட்டியில் உலகின் எந்தவொரு அணியும் தற்போதைய நிலையில், எங்களை எதிர்கொள்ள விரும்பமாட்டார்கள். மற்ற அணிகள் எங்களை வெளியேற்றிய நினைத்தார்கள். தற்போது அவர்கள் எங்களை தோற்கடிக்கப் போவதில்லை. நெதர்லாந்து அணி இல்லையென்றால், ஒருவேளை நாங்கள் இங்கே இல்லாமல் இருந்திருக்கலாம்.
தற்போது நாங்கள் இங்கே இருக்கிறோம். இது மிகவும் பவர்ஃபுல் ஆனது. ஏனென்றால், நாங்கள் இங்கே இருப்பதை (அரையிறுதி) யாரும் விரும்பியிருக்க மாட்டார்கள். இதை நாங்கள் சாதகமாக பெற்றுள்ளோம்'' என்றார்
- இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
- அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.
அடிலெய்ட்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடக்கிறது.
இதில் ரோகித்சர்மா தலைமையிலான இந்தியா-பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.
வலை பயிற்சியின்போது அவருக்கு வலது முன்னங் கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் வலியால் துடித்தார். உடனே பயிற்சியை விட்டு வெளியேறினார்.
அவரது கையில் ஐஸ் கட்டி வைக்கப்பட்டது. ஐஸ் கட்டியை தடவி அவருடன் காயம் குறித்து பயிற்சி குழுவை சேர்ந்த பேடி அப்டன் பேசிக் கொண்டு இருந்தார். ரோகித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து பின்னர் ஆய்வு செய்யப்படும்.
இந்த காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போட்டிக்கு இன்னும் 48 மணி நேரம் இருப்பதால் அதற்குள் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.
ரோகித்சர்மா விளையாடாமல் போனால் மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
- பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார்.
- பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.
சிட்னி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதன் முடிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கா னிஸ்தான் ஆகியவை வெளியேற்றப்பட்டன.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. சிட்னியில் புதன்கிழமை நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் குரூப் 1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து -குரூப் 2 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.இதற்கு முன்பு கடந்த உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
அந்த அணி ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. இங்கிலாந்திடம் 20 ரன்னில் தோல்வி அடைந் தது. ஆஸ்திரேலியா (89 ரன்), இலங்கை (65 ரன்), அயர்லாந்து (35ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆப்கானிஸ்தானுடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்கு சன் (தலா 7 விக்கெட்) ஆகி யோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.
பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை 33 ரன்னிலும், நெதர்லாந்தை 6 விக்கெட்டிலும், வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயிடம் 1 ரன்னிலும் தோற்றது.
அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூதி, இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப்கான் (10 விக்கெட்), ஷகீன்சா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ந்தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இறுதிப் போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் நாளைய அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் குறித்து எதிரணிகள் கலக்கம் அடைந்துள்ளன.
- குரூப் 12 சுற்றில் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இங்கிலாந்து அணியின் ஒரே கவலை, சூர்யகுமாரை எப்படி அவுட்டாக்குவதுதான். சூர்ய குமார் வித்தியாசமாக ஷாட்டுகளை இவ்வளவு எளிதாக எப்படி விளையாடுகிறார் என்பதுதான், கிரிக்கெட்டில் உலகில் தற்போதைய பேச்சாக இருக்கிறது.
இங்கிலாந்து எதிராக நாளை அரையிறுதியில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில், இன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது சூர்யகுமார் யாதவை பெரிய அளவில் இந்தியா நம்புகிறது. இது அவருக்கு நெருக்கடியாக அமையாதா? என்பது போல் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-
தன்னுடன் எந்த வகையான பேக்கேஜ்-ஐயும் எடுத்துச் செல்லாத நபரை போன்றவர் சூர்யகுமார் யாதவ். அவருடைய சூட்கேஸை மட்டுமல்லை. நான் சொல்வதின் அர்த்தம், அவர் ஏராளமான சூட்கேஸ்களை வைத்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் ஷாப்பின் செய்வதை மிகவும் விரும்புவார். ஆனால், கூடுதல் சுமையை (extra pressure) சுமக்கும்போது, அவரிடம் அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாடும்போது அதை நீங்கள் பார்க்க முடியும். கடந்த ஒரு வருடமாக அவர் இப்படித்தான் விளையாடி கொண்டிருக்கிறார்.
பேட்டியளிக்கும்போது அவரது பேச்சு உங்களுக்கு கேட்குமா என்று எனக்குத் தெரியாது. அதே பாணியில்தான் அவர் பேட்டிங் செய்கிறார்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள்.
- ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேஸ்ட்மேன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வு பெறும். இதில் இந்தியா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.
சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள். ரோகித் சர்மா இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாட ஆரம்பித்தால் அனல் பறக்கும். ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணியும், நாளை நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.
- இங்கிலாந்து அணியில் மார்க் வுட், மலான் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது
- உலகத்தரம் வாய்ந்து ஆடுகளத்தில் சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டி நடைபெறும் அடிலெய்டில் நாளை மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால், மழை வராமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என சொல்ல இயலாது. அடிலெய்டு மைதானம் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு ராசியானது. மேலும், சூர்யகுமார் யாதவ் அபாரமான ஃபார்மில் உள்ளார்.
இவர்கள் இருவரையும் விரைவாக வெளியேற்றினால்தான் இறுதி போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என இங்கிலாந்து நினைத்தால் அதில் தவறு ஏதும் இல்லை.
இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது:-
மார்க் வுட், தாவித் மலான் ஆகியோர் காயத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்று பார்க்க இருக்கிறோம். முடிந்த அளவு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அணியில் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
தாவித் மலான் மீண்டும் ஒருநாள் லேசாக காயத்துடன் காணப்படுகிறார். மார்க் வுட்டிற்கும் இன்னும் லேசாக வலி உள்ளது. நாங்கள் மெடிக்கல் டீம் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதேபோல் இரண்டு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம்.
இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய பார்வையில், உலகின் தலைசிறந்த மைதானத்தில், சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம். சிறந்த ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
அது சிறந்த தருணமாக இருக்க போகிறது. ஒரு வீரராக நீங்கள் அதில் ஈடுபட விரும்பும் நேரம். இந்திய ரசிகர்கள் இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை மிகவும் ஆவலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நிச்சயமாக இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை விரும்பவில்லை. இந்தியாவின் நாளைய திட்டத்தை முறியடிப்போம்.
ஆகவே, அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்ததை செய்ய முயற்சிப்போம்.
இவ்வாறு பட்லர் தெரிவித்தார்.
- நிதானமாக ஆடிய வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்னில் வெளியேறினார்.
- அதிரடி ஆட்டக்காரர் பிலிப்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
New Zealand set a target of 160 runs for Pakistanடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக பின் ஆலன்- கான்வே களமிறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பின் ஆலன் 3-வது பந்தில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கான்வே உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பவர் பிளேயின் கடைசி பந்தில் கான்வே ரன் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்த வந்த அதிரடி ஆட்டக்காரர் பிலிப்ஸ் 6 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து வில்லியம்சன் - மிட்செல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.
நிதானமாக ஆடிய வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்னில் வெளியேறினார். ஒரு பக்கம் அதிரடி காட்டிய 30 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது.
- முதல் விக்கெட்டுக்கு ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி 105 ரன்கள் குவித்தது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று முதல் அரையிறுதி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி ஆடினர். முதல் ஓவரிலேயே பாபர் அசாமுக்கு 0 ரன்னில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 105 ரன்கள் குவித்தது.
பாபர் அசாம் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் அரை சதம் அடித்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி எப்பவும் போல அரையிறுதி வரை வந்து கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது.
நாளை 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணி மோதுகிறது. இதில் வெற்றி பெரும் அணி 13-ந் தேதி பாகிஸ்தானுடன் மோதும்.
- நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன்.
- மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.
நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தும்.
கோடான கோடி ரசிகர்கள் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும், பாகிஸ்தான் ரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது:-
ஹிந்துஸ்தான், நாங்கள் மெல்போர்னுக்கு முன்னேறிவிட்டோம். உங்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இங்கிலாந்தை வீழ்த்தி நீங்கள் மெல்போர்ன் வர மனதார வாழ்த்துகிறேன். மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.
தற்போது 2022-வது வருடம். வருடம் வேறுபட்டிருக்கலாம். ஆனால் நம்பர் ஒன்றேதான். நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன். இன்னொரு முறை மோதப் போகிறோம். நமக்கு இன்னும் ஒரு போட்டி தேவை. உலகம் முழுவதும் மூச்சு விட முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.