search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாங்காய் உச்சி மாநாடு"

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்கிறது.

    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவர் பாகிஸ்தானில் தங்கியிருக்க உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இம்மாத மத்தியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறேன்.

    நான் பாகிஸ்தான் செல்வது இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுவதற்கு அல்ல; அது பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.

    இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் பதட்டமான தன்மை காரணமாக, ஊடகங்களுக்கு எனது பயணம் குறித்து நிறைய ஆர்வம் இருக்கலாம். நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்.

    இது பல நாடுகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி. நான் இந்த அமைப்பில் நல்ல உறுப்பினராக இருப்பேன், கண்ணியமான நபராக, அதற்கேற்ப நடந்து கொள்வேன். பாகிஸ்தானில் உச்சி மாநாடு நடப்பதால் எனது பயணத்தின் தன்மை மாறுபாடு அடையாது.

    இந்த மாநாட்டிற்கு செல்லும் நீங்கள், என்ன செய்யப் போகிறீர்கள், என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என நீங்கள் கேட்கலாம். நான் தெளிவாகவும், கண்ணியமாகவும் நடந்துகொள்வேன் என தெரிவித்தார்.

    • புதிய நிரந்த உறுப்பினராகியுள்ள ஈரானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பாகிஸ்தானும் எஸ்.சி.ஓ அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (எஸ்.சி.ஓ) உருவாக்கியது.

    அதன்பின்னர் 2005-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் இந்தியா பார்வையாளராக பங்கேற்றது. கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் எஸ்.சி.ஓ அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த அமைப்பில் உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தலைமையேற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி சாமர்கண்ட் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் எஸ்.சி.ஓ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.

    இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. மதியம் 12.30 மணி அளவில் இந்த மாநாடு தொடங்கியது.

    சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் அதிபர் ஷாபாஸ் செரீப் மற்றும் எஸ்.சி.ஓ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரசிங் மூலம் நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் பங்கேற்க ஐ.நா.சபை, தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்), காமன்வெல்த் நாடுகள் அமைப்பு (சி.ஐ.எஸ்), கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சி.எஸ்.டி.ஓ), யுரேசிய பொருளாதார ஒன்றியம் (இ.ஏ.இ.யு) ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளான மாநாட்டு அமைப்பு (சி.ஐ.சி.ஏ.) ஆகிய 6 சர்வதேச, பிராந்திய அமைப்புகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

    இந்த அமைப்பில் புதிய நிரந்த உறுப்பினராகியுள்ள ஈரானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு நிலவரம், வர்த்தகம், நாடுகள், போக்குவரத்து தொடர்பை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான் நிலவரம், உக்ரைன் மீதான போர் விவகாரம் எஸ்.சி.ஓ அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
    • நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது.

    தாஷ்கண்ட்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கொரோனா தொற்று நோய் காலத்திற்குப் பிறகு, உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா காலம் மற்றும் உக்ரைன் போர், உலகளாவிய விநியோக சங்கிலியில் தடைகளை உருவாக்கியது. இதன் விளைவாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் நெருக்கடி ஏற்பட்டது.

    ஷாங்காய் அமைப்பு எங்கள் பிராந்திய பகுதியில் நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலியை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு சிறந்த இணைப்பு மற்றும் போக்குவரத்து உரிமைகளை வழங்குவது முக்கியம். நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது.  


    இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்தை குஜராத்தில் தொடங்கியது. பாரம்பரிய சிகிச்சைக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையம் இதுவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×