என் மலர்
நீங்கள் தேடியது "மறுமலர்ச்சி திட்டம்"
- விக்கிரவாண்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
- குழந்தை களை சரியான முறையில் பராமறிக்கின்றனரா என்பதை பார்வையிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேற்று பிற்பகல் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ரெட்டிக் குப்பம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படு கின்ற ரேஷன் கடை கட்டு மான பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும், கயத்துார் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளையும், துவக்க பள்ளி வகுப்பறை கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கன் வாடி மையத்திற்கு சென்ற கலெக்டர், குழந்தை களை சரியான முறையில் பராமறிக்கின்றனரா என்பதை பார்வையிட்டார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக், ஒன்றிய பொறி யாளர்கள் இளையராஜா, நடராஜன், கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கமலக்கண்ணன், செல்வி முருகையன், ஊராட்சி செய லாளர்கள் வெங்கடேசன், சித்ரா உட்பட பலர் இருந்த னர்.
- ரூ.2.75 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட 2-ம் கட்ட பணிகள் நடந்தது.
- கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி யூனியன் கம்பிக்குடி ஊராட்சி வினோபா நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைசார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II கீழ் ரூ.275.179 லட்சம் மதிப்பில் 63 பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
இதில் அமைச்சர்கள் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-ன் மூலம் 2021-2022-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 92 கிராம ஊராட்சிகளிலும், 2022-2023-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 94 கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் 100 சதவீதம் விடுதலின்றி நடைபெறுகிறது.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், டி.கடம்பன்குளம் ஊராட்சியில் 12 பணிகள் ரூ.43.95 லட்சம் மதிப்பிலும், கம்பிக்குடி ஊராட்சியில் 10 பணிகள் ரூ.46.725 லட்சம் மதிப்பிலும், கிழவனேரி ஊராட்சியில் 7 பணிகள் ரூ.31.93 லட்சம் மதிப்பிலும்,மாங்குளம் ஊராட்சியில் 7 பணிகள் ரூ.31.96 லட்சம் மதிப்பிலும், முடுக்கன் குளம் ஊராட்சியில் 9 பணிகள் ரூ.45.119 லட்சம் மதிப்பிலும்,சூரனூர் ஊராட்சியில் 10 பணிகள் ரூ.41.445 லட்சம் மதிப்பிலும், வலுக்கலொட்டி ஊராட்சியில் 8 பணிகள் ரூ.34.05 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.275.179 லட்சம் மதிப்பில் கண்மாய், ஊரணி ஆழப்படுத்துதல், பேவர் பிளாக் சாலை அமைத்தல், கதிரடிக்கும் தளம் அமைத்தல், கழிப்பறை, பூங்கா, நர்சரி உள்ளிட்ட 63 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், செயற்பொறியாளர் சக்திமுருகன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவர் செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், பிரமுகர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.