என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "கால்வாய் சீரமைப்பு"
- கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நின்றது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சில வாரங்களுக்கு முன் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் இக்கால்வாயானது மற்ற கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த செய்தியானது மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு சிமெண்ட் குழாய் அமைத்து கழிவு நீர் வாய்க்கால்களை சீர்ப்படுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- கழிவு நீர் கால்வாய் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.
- தற்போது இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை பஞ்சாயத்து தலைவர் தூர்வாரி கொடுத்துள்ளார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஅள்ளி காவேரிப்பட்டினத்துடன் இணைக்கும் முக்கிய சாலையான கொசமேடு, மேல் மக்கான் சாப்பரம் செல்லும் வழி மற்றும் கே.ஆர்.பி. அணைக்கு செல்லும் வழியில் உள்ள கழிவு நீர் கால்வாய் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.
இதனால் கழிவுநீர் அங்குள்ள வீடுகளுக்குள் போகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் காவிரியிடம் முறையிட்டனர்.
பஞ்சாயத்து தலைவர் காவேரி உடனடியாக மினி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அனைத்து கால்வாய்களையும் தூர்வார ஏற்பாடு செய்தார். கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும் பொழுது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது. இதனை அடுத்து நாங்கள் தலைவரிடம் முறையிட்டோம். அவர் உடனடியாக எங்களுக்கு தூர் வாரி தருகிறேன் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து தற்போது இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரி கொடுத்துள்ளார். மேலும் இப்பகுதியில் மீன் கடை, பூ கடை, காய் கடை, பேக்கரி கடை, மெக்கானிக்கடை ,ஓட்டல் கடை, கோழி உள்ளிட்ட கடைகள் வைத்துள்ளவர்கள் தங்கள் கடைகளை கழிவு நீர் கால்வாய் மேலே வைத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் சாலைகள் குறுகிவிட்டன. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய பின்பு கழிவு நீர் கால்வாய் மீது கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டாம் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, சுமார் 5,000 குடியிருப்புகளில் உள்ள மக்கள் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.
- ராஜ கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், செடி, கொடிகள் அனைத்தும் ஜே.சி.பி. மற்றும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஓசூர்,
ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகர், ராஜாஜி நகர், எம். எம். நகர், ஸ்ரீ நகர் ஆகிய பகுதிகள் வழியாக பழமையான ராஜ கால்வாய் செல்கிறது.
இந்த ராஜ கால்வாய், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யப்படாமல் ஆக்கி ரமிப்புகளால் சூழப்பட்டு இருந்தது. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் வழியாக மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, சுமார் 5,000 குடியிருப்புகளில் உள்ள மக்கள் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஓசூர் மாநகராட்சி மூலம் ரூ.10 லட்சம் செலவில், 17-வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் முயற்சியின்பேரில் ராஜா கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியது.
ராஜ கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், செடி, கொடிகள் அனைத்தும் ஜே.சி.பி. மற்றும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கால்வாய் சுத்தம் செய்யப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜ கால்வாய் சுத்தம் செய்யப்படுவதால் மழைக்காலங்களில் அதிகப்படியாக வரும் மழை நீர் எங்கும் தேங்காமல், கால்வாய் வழியாக அப்பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரிக்கு எளிதில் சென்று விடும்.
இதற்கான நடவடிக்கை களை மேற்கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.