என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய அளவில்"
- பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
- 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த மாதம் 27-ந்தேதி தேசிய சிறப்பு ஆய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்ததில் தேசிய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடமும், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2024-ம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் டெல்லி முதலிடமும், மராட்டியம் 2-வது இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது.
- இதில், ‘2047-ல் இந்தியா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம்.
ஈரோடு, செப். 18-
ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணி ப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. இதில், '2047-ல் இந்தியா ஒரு பார்வை' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம்.
போட்டிகள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பங்கேற்கலாம். இரு பிரிவினரும் இன்லாண்ட் லெட்டர், என்வலப் லெட்டரில் ஏதாவது ஒன்றில் கடிதம் எழுதலாம். என்வல பிரிவில், 'ஏ4' அளவு வெள்ளை தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், இன்லாண்ட் லெட்டர் பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்.
கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டும் ஏற்கப்படும். எழுதப்பட்ட கடிதத்தை 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை –600 002' என்ற முகவரிக்கு, 'Dai Akhar' அஞ்சல் துறை கடித போட்டி–2022–23 என குறிப்பிட்டு அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் வழங்கலாம். கடிதங்களை அக்டோபர் 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசாக தலா 25,000, 10,000, 5,000 ரூபாய், தேசிய அளவில் வெற்றி பெறும் கடிதங்களில் முதல் 3 பரிசாக 50,000, 25,000, 10,000 ரூபாய் வழங்கப்படும்.
போட்டியாளர்கள் தங்கள் கடிதத்தில் 2022 ஜனவரி, 1-ன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்உடையவர் என்ற சான்று இணைத்து அனுப்ப வேண்டும்.
மாநில அளவில் பரிசு பெறும் 3 கடிதங்களின் விபரம் வரும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி அறிவிக்க ப்படும். பின், தேசிய அளவில் பரிசு பெறும் கடிதம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.