search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வக்பு வாரியம்"

    • காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண்.
    • தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

    மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் எம்.பி.யும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது.,

    திராவிட மாடல் நல்லாட்சியின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் மகிழ்கிறேன்.

    மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தங்களது மேலான கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.

    அங்கு அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டது என்ற வகையில், வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

    திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மதுரை சுற்றுவட்டார பகுதி அனைத்து தரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செல்லும் ஒரு சில அரசியல் கட்சியினரினால் தான் அங்கு தேவையற்ற பதற்றமும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

    எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அங்கு அமைந்துள்ள கோவில் நிர்வாகத்தினர், இந்து அறநிலையத்துறை, தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், அரசு வருவாய் துறை ஆகியோர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இக்குழுவோடு உரிய ஆலோசனை செய்து, விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்டப்பட வழிவகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண், அதுவும் குறிப்பாக மதுரையை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான மண்.

    எனவே இதன் அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமுகமான முடிவை விரைந்து எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை
    • வக்பு வாரிய கண்காணிப்பாளர் காதர் ஷெரீப் பள்ளி வாசல் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் உள்ள மீராசா ஆண்டவர் முஸ்லீம்பள்ளிவாசல் நிர்வாகத்தை தமிழக அரசின் வக்பு வாரியம் நேற்று ஏற்றது.

    கன்னியாகுமரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் என்கிற குத்பா தொழுகை பள்ளி உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களும், கன்னியா குமரிக்கு சுற்றுலா வருகின்ற சுற்றுலா பயணிகளும் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது வழக்கம்.தமிழக வக்பு வாரியத்திற்கு சொந்தமான இப்பள்ளிவாசலை "ஜாக்" என்கிற ஒரு அமைப்பு நிர்வாகம் செய்து வந்தது. அது மட்டுமின்றி முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தொழுகை நடத்தவும்,

    அவர்களின் வீடுகளில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யவும் இந்த அமைப்பு அனுமதி மறுத்து வந்தது. இதனால் கன்னியாகுமரியில் உள்ள முஸ்லிம்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வந்தது. இது குறித்து இந்தப்பகுதி முஸ்லிம்கள் அரசுக்கும் வக்பு வாரியத்துக்கும் புகார்கள் அனுப்பி வந்தனர்.

    விசாரணை மேற்கொ ண்ட வக்பு வாரியம், பள்ளிவாசல் நிர்வா கத்தை வாரியத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை வக்பு வாரிய உத்தரவை உறுதி செய்துபள்ளிவாசல் நிர்வாகத்தை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி வந்த வக்பு வாரிய கண்காணிப்பாளர் காதர் ஷெரீப் பள்ளி வாசல் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார்.

    பள்ளிவாசல் ஆவ ணங்கள், பதிவேடுகள் மற்றும் பொருட்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி ராஜா தலை மையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×