search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறுப்பு பேச்சு"

    • இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது என்றார்.

    வாஷிங்டன்:

    2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சில மாநிலங்களில் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

    மத சமூகங்களுக்கு தனித்தனி சட்டங்கள் அமைப்பதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

    முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் மற்றும் பழங்குடியின தலைவர்கள் மற்றும் சில மாநில அரசு அதிகாரிகள் எதிர்த்தனர்.

    இது நாட்டை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.

    ஏற்கனவே, மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையிலும் இந்தியாவுக்கு எதிரான கருத்தை அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் அந்த அறிக்கையை இந்தியா உடனடியாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    • புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது
    • பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோடி 3 வது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

    இந்த 72 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம், கலவரத்தைத் தூண்டும் வெறுப்பு பேச்சு ஆகிய கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் [ ADR ] அறிக்கை வெளியிட்டுள்ளது.

    துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்கூர் மற்றும் தென் கிழக்கு பகுதிகளின் கல்வி - மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க எம்.பி சுகந்தா மஜூம்தார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி குற்றம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    28 அமைச்சர்களில் பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. 8 அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆக புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

    • ஒரு முஸ்லீம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். நான் பேசுவதற்கு கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயப்பட மாட்டேன்
    • இந்த தேர்தலில், பிரதமரின் இந்தப் பேச்சால் மாநிலத்தில் 4 தொகுதிகளில் பெரும் பின்னடைவு ஏற்படும்

    அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, "இந்தியாவில் இந்துக்களின் சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்திய நாட்டின் பிரதமர் இப்படி மத ரீதியாக பேசுவது தவறு என்று எதிர்க்கட்சிகள் இதற்கு கணடனம் தெரிவித்தனர்.

    அப்போது, ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் உஸ்மான் கனி, பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு, பாஜகவுக்கு வாக்கு கேட்க முஸ்லீம்களிடம் செல்லும்போது, பிரதமர் கூறிய கருத்துகளைப் பற்றி மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஒரு முஸ்லீம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். நான் பேசுவதற்கு கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயப்பட மாட்டேன். மேலும், பாஜக மீது ஜாட் சமூகத்தினரும் கடுமையான கோபத்தில் இருக்கிறர்கள். அதனால், இந்த தேர்தலில், பிரதமரின் இந்தப் பேச்சால் மாநிலத்தில் 4 தொகுதிகளில் பெரும் பின்னடைவு ஏற்படும்" என தெரிவித்தார்.

    இதனையடுத்து, ராஜஸ்தான் பாஜக தலைமை, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சிறுபான்மையினர் அணி தலைவர் உஸ்மான் கனியை முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்திருக்கிறது.

    இந்நிலையில், முன்னாள் பாஜக சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் உஸ்மான் கனி கைது செய்யப்பட்டுள்ளார். காவல்நிலையத்தில் புகுந்து அமைதியை குலைத்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • இரு தரப்புக்கும் ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன
    • வெறுப்பு பேச்சு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் டென்னிஸ்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    உலக அளவில் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் மக்களில் பலர் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இதனால் வன்முறை வெடித்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச்சபையின் 78-வது அமர்வில், அச்சபையின் அதிபர் டென்னிஸ் ஃப்ரான்ஸிஸ் (Dennis Francis) உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அக்டோபர் 7 தொடங்கி உலகம் முழுவதும் அதிகரித்துள்ள வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் கவலையளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. உலக மக்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். நாம் வாழும் உலகில் வெறுப்புணர்ச்சிக்கு இடமே இல்லை. மனிதர்களுக்கு இடையே பாகுபாடுகள் எந்த வழியில் நடந்தாலும் அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். வலி தரும் காயங்களை வெறுப்பு பேச்சுக்கள் ஆழமாக்கும். அவநம்பிக்கையயும், வன்முறையையும் இது ஊக்குவிக்குமே தவிர எந்த சிக்கலையும் தீர்க்காது. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளும் கண்ணியமான கருத்து பரிமாற்றங்களும் மட்டுமே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும். உலக சமுதாயம் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது உரையில், மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் முதல் வரியான "அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் உரிமைகள் உண்டு" என்பதை நினைவுகூர்ந்தார் பிரான்ஸிஸ்.

    • வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுப்பதில் தொகுப்பாளரின் பங்கு முக்கியமானது என நீதிபதிகள் கருத்து
    • இந்த வழக்கில் நீதிமன்றத்தின் ஆலோசராக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே நியமனம்

    புதுடெல்லி:

    தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்பில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் வாதாடும்போது, இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் தேசிய ஒலிபரப்பாளர் சங்கத்தை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெறுப்பு பேச்சு தொடர்பாக பல்வேறு கருத்துகளை கூறினர்.

    'வெறுப்பு பேச்சு என்பது பிரதான ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் கட்டுப்பாடற்ற முறையில் உள்ளது. இதில் வெறுப்பு பேச்சுக்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுப்பதில் தொகுப்பாளரின் பங்கு முக்கியமானதாகும். நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்பு பேச்சை உமிழாமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

    வெறுக்கத்தக்க பேச்சு காட்சி ஊடகம் மூலமாக இருப்பதால், டிவி செய்தி சேனல்களைப் பற்றி நாங்கள் குறிப்பிடுகிறோம். செய்தித்தாள்களில் எழுதப்பட்டதை யாரும் பொருட்படுத்துவதில்லை, ஏனெனில் மக்களுக்கு படிக்க நேரம் இல்லை.

    வெறுப்பு பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும் தொலைக்காட்சி சேனல்கள் எந்தவித தடைகளும் இன்றி தப்பி விடுகின்றன. இந்த விஷயத்தில் அரசு இன்னும் மவுனமாக இருப்பது ஏன்?. வெறுப்பு பேச்சுகளை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்'' என நீதிபதிகள் கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கில் நீதிமன்றத்தின் ஆலோசராக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவை உச்ச நீதிமன்றம் நியமித்ததுடன், மனுக்கள் மீதான பதில்களைத் தொகுக்குமாறு கேட்டுக் கொண்டது.

    ×