என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்ட்ராய்டு"

    • சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.
    • தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது.

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.

    இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அதனை ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.

    புதிய ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கின் நோக்கம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போன சாதனங்களின் லொகேஷன் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் இதரானவர்கள் லொகேஷன் விவரங்களை இயக்க முடியாது.

    • செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்படும்.
    • பிக்சல் சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல் ஓ.எஸ். ஆண்ட்ராய்டு 16 ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் அமெரிக்க நாட்டின் கோடை கால இறுதியிலோ அல்லது செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்படும்.

    எனினும், அடுத்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் 2025 இரண்டாவது காலாண்டு வாக்கில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான தகவல்களில் ஜூன் 3 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட்-க்கு (AOSP) மாற்றப்படும் என்றும் அதே நாள் தகுதி வாய்ந்த பிக்சல் சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு ஓஎஸ்-இன் கோர் இடம்பெற்று இருக்கும் சோர்ஸ் கோட் ஆர்கிவ் தான் AOSP ஆகும். இதில் தான் டெவலப்பர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சார்ந்த கஸ்டம் ஓஎஸ் உருவாக்க முடியும். அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய பிக்சல் 10 சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் ஆண்ட்ராயடு வெர்ஷன் எவ்வித பிழைகள் இன்றி பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    முன்கூட்டியே வெளியிடப்படுவது மட்டுமின்றி ஆண்ட்ராய்டு 16 வெர்ஷனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை பயனர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் விதத்தை அடியோடு மாற்றிவிடும். 

    • அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும்
    • CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

    ஆண்ட்ராய்டு - Android 12, 12 12L, 13, 14, 15 ஆகிய வெர்ஷன்களை கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோருக்கு அரசு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் உபயோக சாதனங்களிலும் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.

     

    மேற்கூறிய வெர்ஷன்களை பயன்படுத்தும் ஆண்டிராய்டு சாதனங்களில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு கோளாறுகளால் தனிநபர் தகவல்களைத் திருடி தன்னிச்சையாக arbitrary code குறியீடுகளைச் செயல்படுத்தி denial of service (DoS) கட்டமைப்பு மூலம் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

    CERT-In இன்கூற்றுப்படி அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிராய்டில் உள்ள, சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள்,கர்னல் எல்டிஎஸ், இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியாடெக், குவால்காம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளால் இந்த பாதுகாப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

     

    இதற்கான தீர்வாக, பயனர்கள், தங்கள் சாதனங்களில் பொருத்தமான அப்டேட்களை மேற்கொள்ள CERT-In அறிவுறுத்தியுள்ளது. CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு பணிகளைக் கையாள்வதற்கான அமைப்பாகும்.  

    • ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது அதற்கும் பழைய ஓ.எஸ். கொண்ட ஸ்மார்ட்போன்களில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மெட்டா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மேலும், இந்த நடவடிக்கை செயலியின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2013ம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓஎஸ் மிகவும் பழையது என்பதால், வாட்ஸ்அப்-இன் புதிய அம்சங்களை அதில் வழங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படும். இதோடு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

    வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் காரணமாக சாம்சங், எல்.ஜி. மற்றும் சோனி என பல ஸ்மார்ட்போன் பிரான்டுகளின் பழைய மாடல்களை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர். எனினும், எந்தெந்த மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிசில் டைனமிக் ஐலேண்ட் எனும் பெயரில் புது அம்சத்தை அறிமுகம் செய்தது.
    • ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கத் துவங்கி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் நாட்ச் பகுதியில் மிகவும் வித்தியாசமான அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் பெயரில் புது விதமான நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் பல்வேறு விதமான அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் உரையாடல்களை வழங்குகிறது.

    புதிய ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை அடுத்து ஆண்ட்ராய்டு பயனர்கள் இதுபோன்ற அம்சம் இல்லையே என வருத்தம் கொள்ள வேண்டாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சம் கொண்டு வர மிக எளிமையான வழிமுறை உள்ளது.

    இதற்கு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் டைனமிக்-ஸ்பாட் (dynamicspot) எனும் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது. ஜாவோமோ உருவாக்கி இருக்கும் இந்த செயலி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்றே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது.

    ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள நாட்ச் அளவுக்கு ஏற்ப ஐலேண்ட் அளவு மற்றும் எங்கு தோன்ற வேண்டும் என்ற விவரங்களை செட் செய்ய டைனமிக்-ஸ்பாட் வழி செய்கிறது. இத்துடன் செயலியை பல விதங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எது போன்ற நோட்டிபிகேஷன்கள் திரையில் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க செய்கிறது.

    இந்த செயலியின் இலவச பதிப்பில் அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. அதிக அம்சங்கள் நிறைந்த செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் விலை 4.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    ×