என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆயத்த பணிகள்"
- 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஆயத்த பணிகள் தொடக்கங்கப்பட்டது.
- தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட விஜயகரிசல்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.
இதில் பழங்கால சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் விஜயகரிசல் குளத்தில் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் இருந்த தற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன. அத்தோடு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன.
தமிழர்களின் நாகரீகம் மற்றும் பழமைகள் குறித்து மேலும் கண்டறிய வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுப்பணி நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று தொடங்கின.
அகழ்வாரா ய்ச்சிக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணியும், குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி போன்றவை நடந்து வருகிறது.
- ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
- அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உடுமலை:
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஊராட்சிகளின் கட்டமைப்பு வசதி மட்டுமின்றி பசுமை நிறைந்த மாசில்லாத சுற்றுச்சூழலை உருவாக்கவும் மரம் வளர்க்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
உடுமலை ஒன்றியத்துக்கான மரக்கன்றுகள் போடிபட்டியில் பண்ணை அமைத்து தயார் செய்யப்படுகிறது. மரக்கன்றுகள் எண்ணிக்கைக்கு தேவையான அளவு விதைகள், கன்றுகள் பராமரிப்பதற்கான மண், உரம் உள்ளிட்டவை அனைத்தும் வேலை உறுதி திட்டத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.
திட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக மரக்கன்றுகள் நடும் வகையில் இடவசதியுள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து மரக்கன்றுகள் வழங்கப்படும். வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதற்கான மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்