search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறப்பு"

    • எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள்.
    • வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள்.

    குழந்தை பிறப்பது என்பதே ஒரு அற்புதமான நிகழ்வு, ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் என்ன குழந்தை பிறக்கும் என்பதில் அதீத ஆர்வத்தில் இருப்பார்கள். அப்படி குழந்தை பிறந்தவுடன் பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஜாதகம் எழுதுவதற்கும் ராசி நட்சத்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள குழந்தை பிறந்த பின்பு அதை எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது மூலம் அவர்களின் தலையெழுத்து எப்படி இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.

    அப்படி இருக்க செவ்வாய் கிழமை கிழமைகளில் குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு அந்த குழந்தைக்கு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயம் அதிகமாக இருக்கும். அப்படி செவ்வாய் கிழமை ஆண் குழந்தை பிறந்தால் பிள்ளைகளின் வாழ்நாள் பற்றிய பலன்களை பார்ப்போம்.

    செவ்வாய் கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்தையும் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

    எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள். இவர்களிடம், கற்பனை திறன் அதிகமாக காணப்படும். மேலும் இவர்கள் சிறந்த தலைவர்கள் அல்லது விளையாட்டு துறையில் பணிபுரிபவராக இருப்பார்கள்.

    அவர்கள் எழுத்து, இசை, கலை அல்லது சுய வெளிப்பாட்டின் பிற வடிவங்களில் திறமை பெற்றிருக்கலாம்.

    இந்த கிழமையில் பிறந்தவர்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய காதல் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள். எவ்வளவு தான் பிரச்சனை வந்தாலும் அவர்களுடைய அன்பின் மூலம் ஜெயித்து விடுவார்கள்.

    செவ்வாய் கிழமை பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் இரத்தம் தொடர்பான பிரச்சனை ஏற்படும். மேலும் வாழ்க்கையில் காயங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் வண்டியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.

    இவர்களிடம் பொறுமை என்பது இருக்காது. இதனால் அவர்கள் செய்ய கூடிய செயல்களை அவசரமாக செய்து விட்டு அதன் பிறகு அதனை பற்றி சிந்திப்பார்கள். இவர்களிடம் கோபம் குணமானது அதிகமாக காணப்படும். இதனால் நிறைய உறவுகளை இழக்க நேரிடும். வெளிப்படையாக மனதில் உள்ள விஷயத்தை மற்றவர்களிடம் பேசுபவர்களாக இருப்பார்கள். இதனால் நிறைய நபர்களிடம் மோதல்கள் ஏற்படும்.

    • மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்த இவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
    • தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு காட்டுப் பகுதியில் உள்ள கொலஞ்சிமடம் என்ற பகுதியில் வசிப்பவர் நிஷாந்த். இவருக்கு அபிஷா (வயது 19) என்ற மனைவி உள்ளார்.

    இவர்கள் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள். முதல் குழந்தை பிரசவ வலியால் அவதிபட்டு வந்தார். இவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இரவு 9.54 மணிக்கு பேச்சிப்பாறை ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள்.

    உடனடியாக பேச்சிப்பாறை 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அபிஷாவை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியானது இருண்ட அடர்ந்த காட்டு பகுதியாகும். இரவில் மிருகங்கள் நடமாடும் பகுதி மற்றும் கரடுமுரடான பாதையாகவும் இருந்தது.

    அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தப் பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    ×