என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வட்டார வளர்ச்சி அதிகாரி ஆய்வு"
- வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராக பொறுப்பறே்றார்.
- ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும்,
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 23 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ரமேஷ்குமார் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த பியூலா எப்சிபாய் குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராகவும், குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராக இருந்த சாதிக்பாட்சா, மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உடுமலை ஒன்றிய ஆணையாளராக இருந்த சரவணன் ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராகவும், ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராக இருந்த சுரேஷ்குமார் குண்டடம் ஒன்றிய ஆணையாளராகவும், குண்டடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த பிரியா பல்லடம் ஒன்றிய ஆணையாளராகவும், பல்லடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த ரமேஷ் வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராகவும், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்த ஜோதி உடுமலை ஒன்றிய ஆணையாளராகவும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஸ்ரீதர் மூலனூர் ஒன்றிய ஆணையாளராகவும், மூலனூர் ஒன்றிய ஆணையாளராக இருந்த பாலசுப்பிரமணியன் மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த வெங்கடேசன் குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த கந்தசாமி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மீனாட்சி ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சாந்திலட்சுமி ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
காங்கயம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ராகவேந்திரன் காங்கயம் ஒன்றிய ஆணையாளராகவும், காங்கயம் ஒன்றிய ஆணையாளராக இருந்த விமலாதேவி அவினாசி ஒன்றிய ஆணையாளராகவும், அவினாசி ஒன்றிய ஆணையாளராக இருந்த மனோகரன் பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மகேஸ்வரன் வெள்ளக்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், வெள்ளகோவில் வட்டாரவளர்ச்சி அதிகாரியாக இருந்த எத்திராஜ் மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராகவும், மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராக இருந்த செந்தில்கணேஷ்மலா குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சிவகுருநாதன் தாராபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
- தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் பகுதியில் தற்காலிக சாலை வசதி மேற்கொள்ளப்பட்டது.
- ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கூடம் நகர் பகுதியை ஆய்வு செய்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் பகுதியில் சாலை வசதி கோரி வரப்பட்ட புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்படி கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜய சந்திரிகா கூடம் நகர் பகுதியை ஆய்வு செய்தார்.
மண்சுவரினால் கட்டப்பட்ட தகர வீடுகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு புதிய வீடுகள் ஒதுக்கீடு வரும்போது பணி மேற்கொள்ளப்படும் என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
சாலை அமைத்திட உரிய மதிப்பீடு தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும் என்றும், நிர்வாக அனுமதி கிடைத்ததும் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். அதுவரை தற்காலிகமாக சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், ஊராட்சி செயலாளர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்