என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய விளையாட்டு போட்டி"
- தேசிய விளையாட்டு போட்டிக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
- இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியீடு.
கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது.
- வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.
கோவா:
37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் நடந்தது. இதில் தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது. இதில் தமிழக தடகள அணி 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களை பெற்றது. வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.
தமிழக அணி 114.5 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. சர்வீசஸ் 117 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. தமிழக அணி 2.5 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.
- பேட்மிண்டன், ஹாக்கி, டென்னிஸ், கபடி, உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.
- இந்த போட்டியில் 393 வீரர், வீராங்கனைகளை கொண்ட தமிழக அணி 31 விளையாட்டுகளில் களம் காணுகிறது.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடக்கிறது. டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூதெக்ரி ஆகிய 7 நகரங்களில் 18 நாட்கள் அரங்கேறும் இந்த போட்டியில் 38 அணிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதில் தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஆக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, கோ-கோ உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது. களரிப்பட்டு, யோகாசனம், மல்லர்கம்பம், ரேப்டிங் ஆகியவை காட்சி போட்டியாக நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 393 வீரர், வீராங்கனைகளை கொண்ட தமிழக அணி 31 விளையாட்டுகளில் களம் காணுகிறது. பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்த போட்டியை தவறவிடுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறும் கோலாகல தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். போட்டியை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கடந்த தேசிய விளையாட்டு 2023-ம் ஆண்டு கோவாவில் 5 நகரங்களில் நடந்தது. இதில் மராட்டியம் 82 தங்கம் உள்பட 230 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது.
- 2022-ம் ஆண்டு போட்டியில் தமிழக வீரர் சுப்ரமணி சிவா 5.31 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தடகளத்தில் நேற்று நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 19 வயது தேவ்குமார் மீனா 5.32 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தக்கவைத்தார்.
இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு போட்டியில் தமிழக வீரர் சுப்ரமணி சிவா 5.31 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
- 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.
- நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற்றன.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் தடகளத்தில் தமிழக வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கம் பெற்றனர். 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா 58.11 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கமும், ஸ்ரீவா் தனி 59.86 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றனர். உயரம் தாண்டுதலில் கோபிகாவுக்கு (1.78 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற்றன. தடகளத்தில் தமிழகத்துக்கு 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கம் கிடைத்தது.
ஆதர்ஷ்ராம் (உயரம் தாண்டுதல்), பவித்ரா (போல் வால்ட்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), ஆகியோர் தங்கம் வென்று இருந்தனர். ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் கிடைத்தது.
ரீகன், பரணிகா (போல்வால்ட்), வித்யா (400 மீட்டர் ஓட்டம்), மணவ் 110 மீட்டர் (தடை தாண்டுதல்), ஸ்ரீராம் (நீளம் தாண்டுதல்), ராகுல் (200 மீட்டர்), சலாகுதீன் (டிரிபிள் ஜம்ப்) ஆகியோர் வெள்ளிப் பெற்று இருந்தனர். ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஆட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
கிரிதரணி (100 மீட்டர் ஓட்டம்), நித்யா (100 மீட்டர் தடை தாண்டுதல்) நிதின் (200 மீட்டர்), தீபிகா (ஹெப்டத்லான்) ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்று இருந்தனர்.
நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 24 தங்கம், 30 வெள்ளி, 30 வெண்கலம் ஆக மொத்தம் 84 பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.
சா்வீசஸ் 65 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என 114 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மராட்டியம் 50 தங்கம், 62 வெள்ளி, 63 வெண்கலம் என 175 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், அரியானா 39 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலம் என 140 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
- விளையாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும்.
- 2036 ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டி இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும்போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள்" என்றார்.
மேலும், மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கும்போது, நம்முடைய விளையாட்டு பட்ஜெட் 800 கோடியாக இருந்தது. தற்போது அது 3,800 கோடியாக உயர உள்ளது. இது மோடி அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்காக உறுதிப்பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
2014-ல் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 15 பதக்கங்கள் வென்றனர். தற்போது அது 26 ஆக உயர்ந்துள்ளது, 2014 ஆசியப் போட்டியில் 57 பதக்கங்கள் வென்ற நிலையில், 2023-ல் 107 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது ஆரம்கால கட்டத்திலேயே உள்ளது. அடுத்த வருடம் வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது தொடர்பாக முடிவு எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரையத்லான் பந்தயத்தில் தமிழகத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது.
- கர்நாடகா 27 தங்கம் உள்பட 88 பதக்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் தமிழக அணிக்கு ஒரு தங்கம் உள்பட 3 பதக்கம் கிடைத்தது.
டிரையத்லான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது. ஆகாஷ், பெருமாள்சாமி, வாமன், ஆர்த்தி, கீர்த்தி ஆகியோர் அடங்கிய அணி கலப்பு தொடரில் 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதல் இடத்தை பிடித்தது.
யோகாசான போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் அணிகள் பிரிவில் நிவேதா, கீத்திகா, வைஷ்ணவி, ரோகிணி, காயத்ரி ஆகியோர் கொண்ட தமிழக அணி வெண்கல பதக்கம் பெற்றது. இதே போல யோகானம் ரித்மிக் ஜோடி பிரிவில் நிவேதா-அபிராமி ஜோடி வெண்கல பதக்கம் பெற்றது.
கடந்த 29-ந்தேதி தொடங்கிய தேசிய விளையாட்டு போட்டி இன்று முடிவடைகிறது. நேற்றைய போட்டியின் முடிவில் தமிழக அணி 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் ஆக மொத்தம் 73 பதக்கம் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் 56 தங்கம், 34 வெள்ளி, 31 வெண்கலம் ஆக மொத்தம் 121 பதக்கத் துடன் முதல் இடத்தில் உள்ளது.
மராட்டியம் 38 தங்கம் உள்பட 138 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், அரியானா 34 தங்கம் உள்பட 106 பதக்கத்துடன் 3-வது இடத்திலும், கர்நாடகா 27 தங்கம் உள்பட 88 பதக்கத்துடன் 4-வது இடத்திலும் உள்ளன.
- 70 பதக்கத்துடன் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.
- நாளை தேசிய விளையாட்டு போட்டிகள் முடிகிறது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டுப்போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் தமிழக அணிக்கு மேலும் 3 பதக்கம் கிடைத்தது.
சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் வேலூர் வீராங்கனை ராகஸ்ரீ மனோகர் பாபு முதல் இடத்தை பிடித்தார். மல்லர்கம்பம் பந்தயத்தில் தமிழக வீரர் ஹேம் சந்திரன் தங்கம் வென்றார். பெண்களுக்கான கால்பந்தில் வெண்கல பதக்கம் கிடைத்தது.
நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 24 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் ஆக மொத்தம் 70 பதக்கம் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது.
சர்வீசஸ் 53 தங்கம் உள்பட 115 பதக்கத்துடன் முதல் இடத்தில் உள்ளது. மராட்டியம், அரியானா, கர்நாடகா முறையே அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. நாளை தேசிய விளையாட்டு போட்டிகள் முடிகிறது.
- பெண்களுக்கான டிரையத்லான் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஆர்த்தி வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.
- நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 67 பதக்கத்துடன் தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டிகளின் முடிவில் தமிழக அணி 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கங்களுடன் இருந்தது.
நேற்றைய போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 2 பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான டிரையத்லான் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஆர்த்தி வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.
இதே போல ஆண்களுக்கான 120 கிலோ மீட்டர் மாஸ் ஸ்டார்ட் சைக்கிள் பந்தயத்தில் தமிழக வீரர் ஸ்ரீநாத் லட்சுமிகாந்தும் வெண்கல பதக்கம் வென்றார். சைக்கிளிங் போட்டியில் கிடைத்த 2-வது பதக்கம் ஆகும்.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 67 பதக்கத்துடன் தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் 51 தங்கம் உள்பட 113 பதக்கத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. அரியானா 2-வது இடத்தி லும், மராட்டியம் 3-வது இடத்திலும், கர்நாடகா 4-வது இடத்திலும் உள்ளன.
தேசிய விளையாட்டு போட்டிகள் நாளை மறு நாளுடன் முடிவடைகிறது.
- பதக்கப் பட்டியலில் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடம்.
- 22 தங்கம் பதக்கங்களுடன் தமிழகத்திற்கு 5வது இடம்.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் வெல்லும் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். 50.41 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார்.
தேசிய விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில், சர்வீசஸ் அணி இதுவரை தங்கத்தை 45 தங்கம், 31 வெள்ளி, 28 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 30 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலம் உள்பட அரியானா இரண்டாவது இடத்திலும், 28 தங்கம், 28 வெள்ளி, 54 வெண்கல பதக்கத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்களுடன் 5 இடத்தில் உள்ளது.
- ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது.
- பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது.
நேற்றைய போட்டியில் தமிழக அணி 5 பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த போட்டியில் பஞ்சாப்பை 97-89 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு வீழ்த்தியது.
கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழகம் 62-67 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவிடம் தோற்றது. இதன் மூலம் தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது.
பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஹரிகரன்-நர்த்தனா ஜோடி வெண்கலம் வென்றது.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
- நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.
- மனயா முக்தா, அத்விகா, பிரமிதி, சக்தி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி 4x200 மீட்டர் தொடர் நீச்சலில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழக அணி 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என 46 பதக்கங்கள் பெற்று இருந்தது.
நேற்று தமிழக அணிக்கு 4 தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்தது. ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சுனைனா குருவில்லா தங்கம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் அபய்சிங் தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்கள் அணிகள் பிரிவில் அபய்சிங், வேலவன் செந்தில்குமார், அரிந்தர் பால்சிங், நவனீத் பிரபு ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது.
மேலும் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு வெள்ளி கிடைத்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வேலவன் செந்தில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.
சுனைனா குருவில்லா, ரதிகா சீலன், சமீனா ரியாஸ், பூஜா ஆர்த்தி ஆகியோர் அடங்கிய தமிழக பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றது.
டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் மனீஷ் சுரேஷ்குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். நீச்சல் போட்டியில் தமிழகத்துக்கு வெள்ளிபதக்கம் கிடைத்தது.
மனயா முக்தா, அத்விகா, பிரமிதி, சக்தி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி 4x200 மீட்டர் தொடர் நீச்சலில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.