search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரான் அதிபர்"

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
    • அவரது உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் நேற்று துக்கம் அனுசரிப்பு.

    டெஹ்ரான்:

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் கடந்த 19-ம் தேதி மாயமானது. அதன்பின், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்திய தேசியக் கொடி நேற்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

    இதற்கிடையே, இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஈரான் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

    இந்நிலையில், டெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அஞ்சலி செலுத்தினார்.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
    • அவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மாயமானது. பின்னர் விபத்தில் ஹெலிகாப்டர் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். நேற்று இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இந்திய தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.

    இந்த நிலையில் இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நாளை அவர் ஈரான் புறப்பட வாய்ப்புள்ளது. அஜர்பைஜான்- ஈரான் எல்லையில் இருந்து தப்ரிஸ் திரும்பும்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    • நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
    • வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என பல மணிநேரம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆளில்லா டிரோன்கள் மூலம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தனர்.

    இதனிடையே மறைந்த ஈரான் அதிபர் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று 'இந்தியா' முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

    • இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
    • விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    • ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.

    ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.

    அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

    ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் உடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் வைத்து மரணம் அறிவிக்கப்பட்டது. 

    முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக அதிபராக முகமது முக்பர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
    • இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    புதுடெல்லி:

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. 

     இப்ராஹிம் ரைசி

     இப்ராஹிம் ரைசி

    இதையடுத்து முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

    இந்நிலையில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
    • ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

    ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய அதிபராக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • மோசமான வானிலை காரணமாக மீட்பு குழுக்களால் விபத்து நடந்த பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

    ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.

    அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

    ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதனை ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தது.

    மோசமான வானிலை காரணமாக மீட்பு குழுக்களால் விபத்து நடந்த பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஹெலிகாப்டரில் ஈரான் அதிபருடன் இரண்டு அமைச்சர்கள் அதிகாரிகளும் பயணம் செய்தனர். ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

    விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியது.
    • அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தற்பொழுது ஈரானி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவ இடத்தில் இருந்து ஒருவர் மீட்பு படையினருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க பிரதமரான ஜோ பைடன் விபத்துக்குள்ளான ஹெலிக்காப்டரை கண்டுப்பிடிப்பதற்கு  அவர்களது சாடிலைட் மேப்பிங் தொழில் நுட்பத்தை வழங்கி உதியுள்ளார்.

    இந்த விபத்தை குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கவலை பதிவை பதிவிட்டுள்ளார் அதில் இப்ராஹிம் ரைசி மற்றும் சக அதிகாரகளின் நல்வாழ்வுக்காக பிராத்திக்கிறேன் என்று அவரது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



     


    • போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்.
    • கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

    ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி போலீசாரால் தாக்கப்பட்ட இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்தார். இதனால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்தநிலையில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஷா அமினியின் மரணம் துயரமானது. ஆனால் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பு என்பது ஈரான் அரசின் சிவப்பு கோடு ஆகும். அதை மீறி குழப்பம் விளைவிக்க யாருக்கும் அனுமதி இல்லை. எதிரி (அமெரிக்கா) தேசிய ஒற்றுமையை இலக்காக கொண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×