என் மலர்
நீங்கள் தேடியது "சசிதரூர்"
- உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.
- சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசிதருர். இவர் தனது மனதில் உள்ள கருத்துக்களை கட்சிக்கு அப்பாற்பட்டு மிகவும் வெளிப்படையாக தெரிவிப்பார். இதனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி யிலேயே கடும் எதிர்ப்பு உள்ளது.
இந்தநிலையில் சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார். அமெரிக்காவில் அதிபர் டிரப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசியதை பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாட்டையும் பாராட்டினார்.
அது மட்டுமின்றி கேரள மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசையும் பாராட்டினார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்தநிலையில் பிரதமர் மோடியை சசிதரூர் எம்.பி. மீண்டும் பாராட்டியுள்ளார்.
"கோவிட்-19" காலக் கட்டத்தில் பல நாடுகளுக்கு "கோவிட்" தடுப்பூசிகளை வினியோகிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உதவியதாக கூறியி ருக்கும் அவர், அதற்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சசிதரூர் எம்.பி. கூறியிருப்ப தாவது:-
"கோவிட்-19" காலத்தில் உலகின் தடுப்பூசி மையமாக இந்திய திகழ்ந்தது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது. "கோவிட்" தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது வளரும் நாடுகளுக்கு இந்தியா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வினியோகம் செய்தது.
சமமான தடுப்பூசி வினியோகத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு இந்திய பங்களித்தது. தொற்றுநோயின் இருண்ட காலத்திலும், உலகளாவிய சுகாதார ராஜ தந்திரத்தில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தியது. நெருக்கடியான நேரங்களில் பல்வேறு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.
பணக்கார நாடுகள், தங்களின் சொந்த குடிமக்களுக்காக அதிக அளவிலான தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தங்களின் வளங்களை செலவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட வேண்டியிருந்தது. அவை ஏழை நாடுகளுக்கு வினியோகிக்கப்பட்டிருந்தால் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.
இவ்வாறு சசி தரூர் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரே மாதத்தில் இரண்டு முறை பிரதமர் மோடியை பாராட்டி சசி தரூர் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரத மரை பாராட்டியிருக்கிறார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தலை மைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது.
- காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக இது வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்து உள்ளது.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்து உள்ளது. எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பும் நல்ல வாதங்கள் எடுத்து வைக்கின்றன என்பது எனது சொந்த கருத்து. இந்த பிரச்சினை சமரசத்துக்குரியதுதான். ஏனெனில் நமது நிகழ்காலத்தின் மதிப்பீடுகளை உறுதிப்படுத்த கடந்த காலத்திலிருந்து இந்த சின்னத்தை (செங்கோல்) தழுவிக்கொள்வோம்' என குறிப்பிட்டு இருந்தார்.
- இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.
- பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவார்.
இந்நிலையில் சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருடன் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டதை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான அவரது பதிவில், துபாய் வழியாக டெல்லிக்கு திரும்பினேன். அப்போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் சோயிப் அக்தர் என்னை சந்தித்து 'ஹலோ' என்று கூறியதும் ஆனந்தமும், ஆச்சரியமும் அடைந்தேன். வேகப்பந்து வீச்சில் ஸ்மார்ட்டான, அதே நேரத்தில் ஊக்கமளிக்கும் மனிதர் அவர். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். என்னை வாழ்த்த வந்த இந்தியர்கள் அனைவரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுக்க விரும்பினர். இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதில் சிலர், சோயிப் அக்தர் மற்றும் சசிதரூர் ஆகியோரை பார்க்க ஒன்றுபோல் இருப்பதாகவும், இருவரின் முகம், ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவை ஒன்று போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
- கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது.
- காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்
கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-
கேரளாவில் மதக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். விரைவாக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது. இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் வன்முறையால் வன்முறையை தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்று அவர்களை பின்பற்றுபவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன்.
- திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணுர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புர, வயநாடு, சாகர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம், பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.
அந்த தொகுதிகளை கைப்பற்றும் வகையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.

இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியிருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். கட்சியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- சசிதரூர் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
- ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களையும் வெளியிட்டு இருந்தார். அதில் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார். இதில் முக்கியமாக ரூ.5,11,314 மதிப்பிலான பிட்காயின் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார். இவற்றை தவிர ரூ.9.33 கோடி பங்கு முதலீடுகள், ரூ.3.46 கோடி கார்பரேட் பத்திரங்கள், ரூ.91.7 லட்சம் டெபாசிட் ஆவணங்கள், ரூ.36 ஆயிரம் கையிருப்பு போன்றவையும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
- சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.
- எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் தற்போதைய எம்.பியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் பன்னியன் ரவீந்திரன் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சசிதரூர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், ஓட்டு வாங்க பொதுமக்கள் மற்றும் பாதிரியார் உள்ளிட்ட கிறிஸ்வத தலைவர்களுக்கு பாரதிய ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
சசிதரூரின் இந்த கருத்துக்கு தன்மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.
இந்நிலையில் மத்திய மந்திரி மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு விவகாரத்தில் சசிதரூருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- சசிதரூர் குரங்குக்கு 2 வாழைப்பழங்களை சாப்பிட கொடுத்தார்.
- குரங்கால் எனக்கு அச்சுறுத்தல் இருக்காது என நம்பி, அதன் செயல்பாடுகளை வரவேற்றேன்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் நேற்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டின் தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்போது குரங்கு ஒன்று அவரை நோக்கி வேகமாக ஓடிவந்தது. சசிதரூர் எந்தவித சலனமும் இன்றி குரங்கு என்ன செய்கிறது என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அந்த குரங்கு சசிதரூரின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டது. இதையடுத்து சசிதரூர் குரங்குக்கு 2 வாழைப்பழங்களை சாப்பிட கொடுத்தார். அவற்றை கையில் வாங்கிய குரங்கு பொறுமையாக சாப்பிட்டது.
குரங்கு தனது மடியில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சசிதரூர் அமைதியாக செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார். வாழைப்பழங்களை சாப்பிட்டு முடித்த பிறகு அந்த குரங்கு, சசிதரூரை கட்டியணைத்து அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தியது. அதன் பின்னர் சசிதரூரின் மார்பில் படுத்துக்கொண்ட குரங்கு கண்ணை மூடி உறங்கியது. பின்னர் சசிதரூர் மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்திருக்க ஆரம்பித்தபோது, குரங்கு அவரது மடியில் இருந்து குதித்து ஓடியது.
மனதுக்கு இதமளிக்கக்கூடிய இந்த காட்சிகள் அனைத்தையும் சசிதரூரின் உதவியாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் சசிதரூர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, இந்த சம்பவம் குறித்த தனது அனுபவத்தை விவரித்தார்.
அந்த பதிவில் அவர், "வனவிலங்குகள் மீதான பயபக்தி எனக்குள் வேரூன்றி இருக்கிறது, குரங்கு கடியால் ரேபிஸ் ஷாட் தேவைப்படும் அபாயம் குறித்து சிறிது கவலைப்பட்டாலும் அமைதியாக இருந்தேன். குரங்கால் எனக்கு அச்சுறுத்தல் இருக்காது என நம்பி, அதன் செயல்பாடுகளை வரவேற்றேன். எனது நம்பிக்கை பலித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன், எங்கள் சந்திப்பு முற்றிலும் அமைதியாகவும் மென்மையாகவும் இருந்தது" என குறிப்பிட்டுள்ளார். சசிதரூர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதில் நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டனர்.
- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.
- மல்லிகார்ஜூன கார்கே வந்ததும் தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளுடன் சத்திய மூர்த்தி பவன் அமர்க்களப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக போட்டியாளர்களாக களத்தில் நிற்கும் மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரசாரிடையே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கடந்த 6-ந் தேதி சசிதரூர் தமிழகத்துக்கு வந்தார். அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தபோது மாநில நிர்வாகிகள் யாரும் வரவேற்க வரவில்லை. ஒரு சிலர் மட்டும் வந்திருந்தார்கள். கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.
நேற்று மல்லிகார்ஜூன கார்கே வந்ததும் தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளுடன் சத்திய மூர்த்தி பவன் அமர்க்களப்பட்டது. வரவேற்பு பதாகைகள், கட் அவுட்டுகள் சத்திய மூர்த்தி பவனில் அணிவகுத்தன. கார்கே பேசுவதற்காக தனி மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. 8 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு அனைவரும் வந்திருந்தனர்.
வரவேற்புக்காக ஏராளமானோரை திரட்டி வந்தும் அமர்க்களப்படுத்தினார்கள். எந்த வேட்பாளருக்கும் சோனியா, ராகுல் ஆதரவு இல்லை என்று அறிவித்தார்கள். அப்படி இருந்தும் காங்கிரசார் வரவேற்பதில் ஏன் பாரபட்சம் காட்டினார்கள் என்று தெரியவில்லை.
இதை சசிதரூரே வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். காங்கிரசார் என்னை வரவேற்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அது இதுதான் காங்கிரஸ் ரகசியம். நாங்கள் இதை வெளிப்படையாக சொல்ல முடியாது. மேலிடத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கார்கேதான் என்றார்கள். அப்படியென்றால் ஏன் தேர்தல் நடத்த வேண்டும் என்றதும் அவர்களுக்கே உரித்தான பாணியில் இதெல்லாம் சகஜம்தான் என்றனர். காங்கிரசுக்குள் இப்படி தப்புத்தப்பாக எடுக்கப்படும் முடிவுகள்தான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தப்புக்கணக்காகி விடுகிறது.
- பா.ஜ.க.வுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் கட்சி செயல்பாடுகளை மாற்றுவேன்.
- செயலற்று கிடக்கம் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவுக்கு புத்துயிரூட்டுவேன்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேயும், கேரளாவை சேர்ந்தவருமான சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சசி தரூர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். கட்சியின் அடித்தட்டு நிர்வாகிகளுக்கு உண்மையிலேயே அதிகாரம் வழங்க வேண்டும். நான் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்துக்கான வேட்பாளர் ஆவேன். நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், உதய்பூர் சிந்தனை அமர்வில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை அப்படியே முழுமையாய் செயல்படுத்துவேன்.
உட்கட்சி ஜனநாயகத்தை இன்னும் வலுப்படுத்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்துவேன். 25 ஆண்டுகளாக செயலற்று கிடக்கும் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவுக்கு புத்துயிரூட்டுவேன். கட்சி விவகாரங்களிலும் ஆட்சி விவகாரங்களிலும் பா.ஜ.க.வின் அதிகார மயமாக்கலுக்கு எதிரான நம்பகமான மாற்றை காங்கிரஸ் வழங்க வேண்டும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் கட்சியின் தற்போதைய செயல்பாடுகளை மாற்றிக் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- தனக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நடப்பது நட்பு போட்டி என்று சசிதரூர் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. மேலும் சசிதரூரை போட்டியில் இருந்து வாபஸ் பெற பலர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி மறுத்துள்ளார். தங்கள் குடும்பம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் தேர்தல் நியாயமாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சூழலில் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக சசிதரூர் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வந்தன.
இந்த தகவலை சசிதரூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நடப்பது நட்பு போட்டி. இதில் இருந்து நான் விலகப்போவது இல்லை. ஓட ஆரம்பித்து விட்டேன். இனி நிறுத்தப்போவதில்லை. இறுதி வரை போராடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
- காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை.
- தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்க மாட்டேன்.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி.சசிதரூர் போட்டியிடும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன், மற்றொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வந்த சசிதரூர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
எனது வேட்பு மனுவை வாபஸ் பெற வலியுறுத்துமாறு, ராகுல் காந்தியிடம் சில கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அவரே என்னிடம் தெரிவித்தார். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதை அவர் (ராகுல் காந்தி) எனக்கு நினைவு கூர்ந்தார். இந்த தேர்தலில் போட்டியிட்டவர்களை வாபஸ் பெறச் சொல்ல மாட்டேன் என்று என்னிடம் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையில், நான் நாக்பூர், வார்தா மற்றும் ஐதராபாத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்தேன். அவர்கள்தான் என்னைப் போட்டியிடச் சொல்கிறார்கள், பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள். நான் அவர்களிடம் பின்வாங்க மாட்டேன் என்று உறுதியளித்தேன்.
இதுவரை எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் எனக்கு பலத்தை அளிக்கிறது. எனது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் இளம் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள். அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை, யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.
யார், யாருக்கு வாக்களிப்பாளர்கள் என்பது யாருக்கும் தெரியாது. தங்கள் விருப்பம் மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப வாக்களிக்கலாம். யார் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவரை தயார்படுத்தலாம். இவ்வாறு சசிதரூர் தெரிவித்தார்.