என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரூ.1000 அபராதம்"
- மேட்டூரை சேர்ந்தவர் பச்சியண்ணன் (40). இவர் தேங்காய் நார் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.
- இவரது செல்போனுக்கு கடந்த 1-ந் தேதி ஓமலூர் போலீசாரால் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் பச்சியண்ணன் (40). இவர் தேங்காய் நார் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு கடந்த 1-ந் தேதி ஓமலூர் போலீசாரால் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்தது.
ஆன்லைனில் அதனை டவுன்லோட் செய்து பார்த்தபோது மொபட் ஓட்டும் ஒருவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் இவர் புல்லட் வைத்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பச்சியண்ணன் போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மனு எழுதிக் கொடுத்தால் அதை சரி செய்து தருவதாக கூறினர். ஆனால் இதுவரை சரி செய்து கொடுக்கவில்லை.
இதையடுத்து அவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாலிபர் கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார்.
- அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஹெல்மெட் அணி யாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1000 அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மேலதெருவை சேர்ந்தவர் பிரவீன் காந்தி (30). இவர் சொந்தமாக புல்லட் இருசக்கர வாகனம் வைத்து ள்ளார். தனது தோட்டத்து விவசாய பணிக்காக இரட்டை வாய்க்கால்-மூணாறு சாலைக்கு சென்று வருவது வழக்கம்.
கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஹெல்மெட் அணி யாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1000 அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த கட்டண ரசீதில் யமஹா வாகனத்தின் படம் இடம் பெற்றிருந்தது. தான் புல்லட் வைத்திருந்த நிலை யில் யமஹா வாகன த்திற்கு அபராதம் என குறிப்பிட்டு தனது விலாசத்திற்கு வந்த கடிதத்தை எடுத்து க்கொண்டு மோட்டார் வாகன ஆய்வாளரிடம் விவரம் கேட்டார். உங்க ளுக்குதான் ரூ.1000 அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கட்ட வேண்டும் என தெரிவித்து ள்ளார்.
இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேறுஒரு பைக்கை இட ம்பெற செய்து ஒரு நபருக்கு ரூ.1000 அபராதம் என வந்தது. கூலித்தொழி லாளி யான அவர் தனக்கு விதிக்க ப்பட்ட அபராதத்தை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். போக்குவரத்து காவலர்கள் இதுபோல அஜாக்கிரதையாக ஏதோ ஒரு வாகனத்திற்கு அபரா தத்தை வேறு ஒருவருக்கு அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக வாகன ஓட்டிகள் தெரி விக்கின்றனர்.
- இருசக்கர வாகன ஓட்டிகள் அதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணகிரி பஸ் நிறுத்த பகுதியில் நிறுத்தி வருகின்றனர்.
- காவல்துறையினர் ஒரு வாகனத்திற்கு 1000 ரூபாய் என அபராதம் விதித்தனர்.
தருமபுரி,
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தருமபுரியில் இருந்து தென் மார்க்கமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, மற்றும் கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை, திருவண்ணாமலை, வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகிறது.
இந்த நிலையில் தினசரி இருசக்கர வாகனங்கள், தள்ளு வண்டிகள் என பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதால் பேருந்துகளில் பயணம் செய்ய பஸ் நிலையம் வரும் பயணிகளுக்கு இடையூ றாகவும், பேருந்துகளுக்கு இடை யூறாகவும், இருப்பதால் காவல்துறை பஸ் நிலையத்திற்குள் செல்வதற்கு இருசக்கர வாகனங்களுக்கும் கார், தள்ளுவண்டி ஆகிய வாகனங்களுக்கும் தடை விதித்துள்ளது.
பஸ் நிலையத்தில் கிருஷ்ணகிரி பஸ் நிறுத்தத்தின் அருகே மூலிகை பான கடைகள் உள்ளதால் இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை அருந்துவதற்காக தினசரி 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்துவதால் கிருஷ்ணகிரி மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிற்பதற்கு இடமின்றி நுழைவு வாயிலிலே நிறுத்துவதால் மற்ற பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு வழியின்றி வெளியே நிறுத்தப்படுகிறது.
இதனால் ஒருவழிப்பாதையான ஆறுமுக ஆச்சாரி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பஸ் நிலையத்திற்குள் வரும் இருசக்கர வாகனங்களுக்கு தினசரி அபராதம் விதித்தாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணகிரி பஸ் நிறுத்த பகுதியில் நிறுத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று புறநகர் பேருந்து நிலையம் கிருஷ்ணகிரி பஸ் நிருத்தத்தில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை அறிந்த காவல்துறை இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு வந்ததை கண்டதும் மின்னல் வேகத்தில் பஸ் நிலையத்தில் இருந்து வாகனங்களை எடுத்துச்சென்றனர்.
அப்படி இருந்தும் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையினர் ஒரு வாகனத்திற்கு 1000 ரூபாய் என அபராதம் விதித்தனர். மேலும் இப்பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பியதை அடுத்து கிருஷ்ணகிரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை, இடையூறு இன்றி ஓட்டுநர்கள் நிறுத்தி எடுத்துச் சென்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சந்தை பேட்டை. தினசரி மார்க்கெட் பகுதியில் பயன்படுத்தி வந்த வியா பாரிகளிடம் இருந்து 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்