search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பிக்கப்பட்ட"

    • தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1000 பஸ்கள் ரூ.152.50 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
    • முதல் கட்டமாக 100 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1000 பஸ்கள் ரூ.152.50 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. முதல் கட்டமாக 100 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டத்தில் அடிச்சட்டம் என்ஜின் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 217 பஸ்கள் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 14 பஸ்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் சேலம் மண்ட லத்திற்கு 4 பஸ்களும், தருமபுரி மண்டலத்திற்கு 10 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அந்த பேருந்துகள் புணரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் அந்த பஸ்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது.
    • தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.

    திருப்பூர் :

    தங்கமயில் ஜூவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை பதித்துள்ளது. ஆடை உலகம் திருப்பூர் விரும்பும் ஆபரண உலகமாக திகழும் தங்கமயில் ஜூவல்லரி மிகச்சிறந்த நகைகளை மிகக்குறைந்த சேதாரத்தில் வழங்கி வருகிறது.

    ஆகையால் திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது. தற்போது திருப்பூர் தங்கமயில் ஜூவல்லரி முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜுவல்லரி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவிற்கு தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்த தாஸ், இணை நிர்வாக இயக்குனர்கள் பா.ரமேஷ், என்.பி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தொழில் அதிபர் பாண்டீஸ்வரன் ரத்தினம்மாள் திறந்து வைத்தார். தொழிலதிபர்கள் ரமணி ரமேஷ், சோபியா பரமேஸ்வரன், திவ்யா ரமேஷ், ரஜினிகாந்த், கிராம நிர்வாக அதிகாரி சித்ரா விஜயராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

    திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.

    ×