search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகல் 12 மணி"

    • பரிவேட்டை திருவிழாவையொட்டி நடவடிக்கை
    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துஉள்ளது.

    இவற்றை தினமும் கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

    தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழாவான வருகிற 5-ந்தேதிகாலை 11.30 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்காக ஊர்வல மாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த பரிவேட்டை திருவிழா வில் சுற்றுலாப்ப யணிகள், விவேகானந்த கேந்திரா மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஊழியர்களும்பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்று பகல் 12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை கன்னியா குமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழா நடைபெறும். வருகிற 5-ந்தேதி அன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நிறுத்துவதால் அன்றைய தினம் பகல் 12 மணி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் மூடப்படும் என்று விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

    ×