என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே மாதரம்"

    • மிசோரமைச் சேர்ந்த 7 வயது சிறுமி எஸ்தர் நாம்தே வந்தே மாதரம் பாடலை பாடினார்.
    • அவரைப் பாராட்டிய அமித்ஷா அந்தச் சிறுமிக்கு கிடார் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்தார்.

    புதுடெல்லி:

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது வசீகர குரலில் வந்தே மாதரம் பாடலை பாடினார். இவரது பெயரில் யூ டியூப் சேனல் இயங்கிவருகிறது. எஸ்தரின் வந்தே மாதரம் ஆல்பத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மிசோரம் முதல் மந்திரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அந்தச் சிறுமியைப் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மிசோரம் மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்தர் நாம்தே என்ற சிறுமி வந்தே மாதரம் பாடலை பாடியதை கேட்டு நெகிழ்ந்துள்ளார்.

    அவரைப் பாராட்டிய அமித்ஷா எஸ்தர் நாம்தேவை வரவழைத்து கிடார் ஒன்றையும் பரிசளித்து மகிழ்ந்தார்.

    இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பாரதத்தின் மீதான அன்பு நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. மிசோரமின் அதிசய குழந்தை எஸ்தர் லால்துஹாவ்மி நாம்தேவை அய்ஸ்வாலில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். பாரத மாதா மீதான 7 வயது சிறுமியின் அன்பு அவளது பாடலில் வெளிப்பட்டது. அவர் பாடக் கேட்பது ஒரு மயக்கும் அனுபவமாக மாறியது. அவருக்கு ஒரு கிடார் பரிசாக அளித்து, அற்புதமான எதிர்காலம் அமைய வாழ்த்தினேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், குவைத்தும் நேற்று மோதின. இந்த போட்டியில் இரு அணியினரும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர். இதனால், கோல் அடிக்க முடியாமல் வீரர்கள் திணறினர். இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் (1-1) போட்டி முடிவின்போது, சமநிலையில் இருந்தன.

    இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து ஒரு கோலை அடிக்க விடாமல் தடுத்து அணி வெற்றி பெற உதவினார். போட்டியில் இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.

    இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் அந்த அரங்கம் முழுவதிலும் இருந்த ரசிகர்கள் வந்தே மாதரம் என முழுக்கமிட்டனர். அப்போது இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் அவர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல் அணியின் நிர்வாகமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

    • கயானாவில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
    • சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    ஜார்ஜ் டவுன்:

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். முதலில் நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.

    பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து, பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கயானா சென்றார்.

    கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    தொடர்ந்து அங்குள்ள வகுப்பறைக்குச் சென்ற பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். நடன பயிற்சியையும் பார்வையிட்டார்.

    முன்னதாக, ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    • ஹலோ என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரம்.
    • மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    மும்பை:

    மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதாவது:

    உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் போது அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், "ஹலோ" என்பதற்குப் பதிலாக "வந்தே மாதரம்" என்று தெரிவிக்க வேண்டும். அரசுத் துறைத் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும். "ஹலோ" என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரத்தை சித்தரிக்கிறது. அதற்கு எந்த உணர்வும் இல்லை.

    வந்தே மாதரம் என்றால், நாங்கள் எங்கள் தாய்க்கு தலைவணங்குகிறோம் என்று பொருள். எனவே, பொதுமக்களும் "ஹலோ" என்பதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று சொல்லுங்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    வந்தே மாதரம் கூட கட்டாயமில்லை. 'ஜெய் பீம்' அல்லது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றும் சொல்லலாம், தங்கள் பெற்றோரின் பெயரைக் குறிப்பிடலாம். ஆனால் தொலைபேசி அழைப்பைப் பெறும்போது ஹலோ சொல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "ஜெய் பலிராஜா" ( (விவசாயிக்கு வாழ்த்துக்கள்) மற்றும் "ராம் ராம்" என்ற வார்த்தைகளை பயன்படுத்துமாறு காங்கிரஸ தொண்டர்களை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது நாடு விவசாயப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது 'ஜெய் பலிராஜா', 'ராம் ராம்' என்று சொல்வோம் என்பதே எங்களது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.

    ×