search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணூர்"

    • சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
    • சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது.

    சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக தனது 3 வயதில் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து பல கார்களின் பெயரை லோகோவை பார்த்ததும் கூறிவிடுவான். இந்நிலையில் சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.

    சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அப்போது 33 வினாடிகளில் 50 கார்களின் பெயரையும், 1.57 நிமிடத்தில் 110 கார்களின் பெயரையும் லோகோவை பார்த்து சரியாக கூறினான். இதன் காரணமாக 'டைம் வோல்ட் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர் கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
    • இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, படுக்கை வசதி , பொதுப்பிரிவு, பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.தமிழகம், கேரளாவில் தொடர் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக, யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே(வ.எண்:06283) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நாளை காலை, 7:40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு, 8:30க்கு கண்ணுார் சென்றடையும். நாளை இரவு, 11:00க்கு கண்ணுாரில் இருந்து புறப்படும் ரயில்(06284) மறுநாள் மதியம், 1:00க்கு யஷ்வந்த்பூர் அடைகிறது. இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, 6, படுக்கை வசதி, 7, பொதுப்பிரிவு, 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பனஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரணுார், திரூர், கோழிக்கோடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    ×