என் மலர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து பிரதமர்"
- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர்கள் பேசியுள்ளனர்.
- செங்கற்களை அடுக்கி ஸ்டம்புகளாகப் பயன்படுத்தினர்.
இந்தியா- நியூசிலாந்து இடையே கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்ததுடன் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து உரையாடினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர்கள் பேசியுள்ளனர்.
இப்படி சந்திப்பு, கூட்டம் என டெல்லியில் நேரத்தை கழித்த நியூசிலாந்து பிரதமர் இந்திய குழந்தைகளுடன் தெருவில் கிரிக்கெட்டி விளையாடியது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

STAIRS தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி ஒரு பிரகாசமான தருணமாக இருந்தது. இதில் பிரதமர் குழந்தைகளுடன் மோதினார். செங்கற்களை அடுக்கி ஸ்டம்புகளாகப் பயன்படுத்தினர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நியூசிலாந்து தூதுக்குழுவில் உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ரோஸ் டெய்லர் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோரும் பங்கேற்றனர்.
- நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- இரு நாடுகள் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வந்துள்ளனர்.
பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி சிங் பாகேல் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் சந்தித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோரைச் சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும். இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் பதவி காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது.
- நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அவர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியிருப்பதாவது:-
நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி), 7ம் தேதிக்குள் நான் பதவி விலக போகிறேன். இந்த முடிவுக்கு நான் என்னை தயார்படுத்தி கொண்டேன். எனது பதவி காலத்தில் நான் ஒரு சிறந்த மனிதனாக பணியாற்றி உள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிடவில்லை என்றாலும் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியே அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நியூசிலாந்தில் அக்டோபர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.
- உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர் ஜெசிந்தா.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஜெசிந்தா கூட்டம் முடிந்தபின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ம் தேதிக்குள் நான் பதவி விலக போகிறேன். இந்த முடிவுக்கு நான் என்னை தயார்படுத்தி கொண்டேன். எனது பதவிக்காலத்தில் நான் ஒரு சிறந்த மனிதனாக பணியாற்றி உள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிடவில்லை என்றாலும் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியே அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டின் கல்வித்துறை மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக நியமிக்கப்பட உள்ளார் என தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
- பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.
- நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.
பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, நியூசிலாந்து நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார். இவர், அடுத்த 9 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருப்பார். பின்னர் பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்ற பிறகு விழாவில் பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், " இது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பு. எதிர்வரும் சவால்களை ஏற்க நான் உற்சாகமாகவும் இருக்கிறேன் " என்றார்.
- கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர்.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள் காதலரான க்லார்கே கேஃபோர்டுக்கும் (47) கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிறகு, கொரோனா பரவல் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில், ஜெசிந்தா ஆர்டனுக்கும் க்லார்கே கேஃபோர்டுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்பேலாது ஆர்டெர்ன் ஒரு வெள்ளை நிற ஆடையும், கேஃபோர்ட் கருப்பு நிற உடையையும் அணிந்திருந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணமக்கள் இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ஆசியான் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
- நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆசியா அமைப்பின் 19-வது உச்சி உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். இந்திய நாட்டை நான் நேசிக்கிறேன், மிகவும் மதிக்கிறேன். நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் திறமையாக செயலாற்றி வருகிறார்கள். அவர்கள் மிகுந்த உத்வேகம் அளிப்பவர்கள், கடின உழைப்பாளிகள்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. என்னை இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதற்கான சரியான நேரத்தை நாங்கள் விரைவில் முடிவு செய்வோம். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் பலப்படுத்த தொடர்ந்து உழைப்போம்."
இவ்வாறு அவர் கூறினார்.
- நியூசிலாந்து பிரதமரின் லிமோசின் மீது போலீஸ் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை
- உத்தியோகபூர்வ வாகனங்களை நிர்வகிக்கும் நிறுவனம், சொகுசு கார் பின்புறம் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நிதியமைச்சர் நிகோலா வில்லிஸ் ஆகியோரை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனத்தின் (லிமோசின்) பின்புறத்தில் காவல்துறையின் கார் மோதி விபத்துக்குள்ளானது.
பாராளுமன்றம் அமைந்துள்ள நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நேற்று பிற்பகல் சிறிய விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு விவகாரத் துறை, உத்தியோகபூர்வ வாகனங்களை நிர்வகிக்கும் நிறுவனம், சொகுசு கார் பின்புறம் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் லக்சன் இன்று ஆக்லாந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "விபத்து ஏற்பட்டது அதிர்ச்சி தான். ஆனால் நாங்கள் நன்றாக இருக்கிறார்" என்றார்.
- நியூசிலாந்து பிரதமரை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்தார்.
- அப்போது பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்துக் கொண்டார்.
ஆக்லாந்து:
நியூசிலாந்து நாட்டில் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா காலத்தின்போது தடுப்பூசி தயாரிப்புகளில் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் இருந்து வருகிறோம். எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன்படி, இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையில் இருந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தோம்.
ரஷியா-உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கையிலெடுத்துக் கொண்டதும் ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயம்.
5-வது மிக பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா இந்த தசாப்தத்தின் முடிவில் 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருமாறும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்னை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அந்நாட்டின் வெளிவிவகார மந்திரி நனையா மகுதாவையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டார்.