என் மலர்
நீங்கள் தேடியது "சைஃப் அலி கான்"
- கொள்ளை அடிக்கும் நோக்கில் மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.
- நடிகர் சைஃப் அலி கான் தேவரா, ஆதி புருஷ், ஓம்கரா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான். இவர் போபால் அரச குடும்பத்தை சேர்ந்தவர். மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி-நடிகை சர்மிளா தாகூர் தம்பதியினரின் மகன் ஆவார்.
சைஃப் அலி கான் 2012-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சைஃப் அலி கான்-கரீனா கபூர் தம்பதி மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வருகிறார்கள். சைஃப் அலி கான் குடும்பத்தாருடன் வீட்டில் வழக்கம் போல் தூங்கிக்கொண்டு இருந்தார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம மனிதன் ஒருவன் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்தான். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.
கொள்ளையனை பார்த்ததும் சைஃப் அலி கான் அதிர்ச்சி அடைந்தார். அவனை பிடிக்க முயன்றார். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதில் அவரது உடலில் கழுத்து, முதுகு பகுதி (தண்டுவடம் அருகே), கை உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதில் 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதை பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் அலறினார்கள். இதேபோல வீட்டில் இருந்த பணிப்பெண்ணும் கொள்ளையனால் தாக்கப்பட்டார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சைஃப் அலி கான் பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இது குறித்து லீலாவதி மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி நீராஜ் உத்தமணி கூறியதாவது:-
சைஃப் அலி கான் அதிகாலை 3.30 மணிக்கு எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் 2 ஆழமான காயம். ஒரு காயம் அவருக்கு முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நிதின் டாங்கே, உடல் அழகு அறுவை சிகிச்சை நிபுணர் நீலா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர். நரம்பியல் அறுவை சிகிச்சை 2.30 மணி நேரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்து இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சைஃப் அலி கான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகே அவரது மனைவி கரீனா கபூர் மருத்துவமனைக்கு வந்தார்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையனை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறிய தாவது:-
கொள்ளை அடிக்கும் நோக்கில் மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சைஃப் அலி கானை தாக்கிய மர்ம மனிதனை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 படைகள் மும்பைக்கு வெளியே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சைஃப் அலி கான் வீட்டில் பணிபுரியும் 3 உதவியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீடு புகுந்து மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கேள்விப்பட்டதும் பாலிவுட் திரை உலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சைஃப் அலி கான் தாக்கப்பட்டது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
கொள்ளை முயற்சி சம்பவத்தில் சைஃப் அலி கான் தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனால் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொதுவாக பிரபலங்கள் வீடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த பாதுகாப்பையும் மீறி மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு குளறுபடி தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் முயற்சியில் அவரது வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதே போல சல்மான்கானின் பங்களா வீட்டிலும் கொல்ல முயற்சி நடந்தது. பிரபல ரவுடியான பிஷ்னோய் கும்பல் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கொள்ளைக்காக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
54 வயதான நடிகர் சைஃப் அலி கான் தேவரா, ஆதி புருஷ், ஓம்கரா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சைஃப் அலி கான் தாக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது.
- இந்தி நடிகை பூஜாபட், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்பை:
நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதற்கு இந்தி திரையுலகம் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லோண்டே கூறியதாவது:-
மகாராஷ்டிர பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. பிரபல நடிகர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. பிரபலங்கள் வீடுகளில் குண்டு துளைக்காத ஜன்னல்கள் இருக்கும். அவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும்.
இதுபோன்ற சம்பவங்களால் மாநிலத்தின் முதலீடுகள் பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியதாவது:-
சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. அவர் ஆஸ்பத்திரியில் நலமாக இருக்கிறார். இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ராம்கதம் கூறும்போது, 'சைஃப் அலி கானை தாக்கிய குற்றவாளி விரைவில் பிடிபடுவான். போலீசார் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
இந்தி நடிகை பூஜாபட், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பயமாகவும் உள்ளது என்று பூஜா பட் தெரிவித்துள்ளார்.
- சைஃப் அலி கான், லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் - கரீனா கபூர் தம்பதி மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வருகிறார்கள்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.
கொள்ளையனை பார்த்ததும் சைஃப் அலி கான் அதிர்ச்சி அடைந்தார். அவனை பிடிக்க முயன்றார். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதில் அவரது உடலில் கழுத்து, முதுகு பகுதி (தண்டுவடம் அருகே), கை உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதில் 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதை பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் அலறினார்கள். இதேபோல வீட்டில் இருந்த பணிப்பெண்ணும் கொள்ளையனால் தாக்கப்பட்டார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சைஃப் அலி கான் பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையனை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்நிலையில், குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் மாடி படிக்கட்டுகளில் இருந்து குற்றவாளி கீழே இறங்கி வருகிறார். அவனுக்கு கிட்டத்தட்ட 35 வயது இருக்கும் போலீசார் தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், அங்கிருந்த பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த சைஃப் அலிகானை அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையே, குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்.
சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது பற்றி மாநில அரசை கடுமையாக சாடினர்.
இந்நிலையில், கத்திக்குத்து சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது சரியல்ல என தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மும்பை நாட்டின் மிகவும் பாதுகாப்பான மெகா நகரம். இந்த சம்பவம் தீவிரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது.
ஆனால் நகரத்தை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு. இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வழங்கி உள்ளனர்.
இது என்ன வகையான தாக்குதல், உண்மையில் இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- 12, 13வது மாடிகளில் சைஃப் அலிகானின் வீட்டின் பணியாளர்கள் 6 பேர் தங்கி உள்ளனர்.
- பணியாளர்கள் 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் மும்பை, பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு சாரண் என்ற 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மேலே உள்ள 4 தளங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது மனைவி பிரபல நடிகை கரீனா கபூர் ஆவார். நேற்று முன்தினம் இரவு சைஃப் அலிகான் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். தலா 3 படுக்கை அறைகள் கொண்ட அந்த 13 மாடி கட்டிடத்தின் வீடுகளில் 11 வது மாடி வீட்டில் சைஃப் அலிகான், கரீனா கபூர் தம்பதி ஒரு அறையிலும், மகன்கள் தைமூர் ஒரு அறையிலும், ஜெகாங்கீர் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
12, 13வது மாடிகளில் சைஃப் அலிகானின் வீட்டின் பணியாளர்கள் 6 பேர் தங்கி உள்ளனர்.
அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டதால் நடிகர் சைஃப் அலிகான் கண்விழித்தார். கரீனாகபூர் தனது மகன்கள் அறைக்கு சென்றுவிட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தபடி புரண்டு படுத்தார். ஆனால் சத்தம் அதிகரிக்கவே ஏதோ விபரீதம் நடக்கிறது என்று வெளியில் வந்து பார்த்தார்.
அப்போது வேலைக்கார பெண் எலியம்மா பிலிப் மர்ம நபர் ஒருவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் சைஃப் அலிகான் யார் நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டே அருகில் சென்றார்.
அப்போது அந்த மர்மநபர் நடிகர் சைஃப் அலிகானிடம் எனக்கு ரூ. 1 கோடி பணம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து அந்த மர்ம மனிதனுக்கும் நடிகர் சைஃப் அலிகானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைஃப் அலிகான் மீது சரமாரியாக குத்தினான்.
முதல் கத்தி குத்து சைஃப் அலிகானின் கழுத்தில் விழுந்ததால் அவர் நிலை தடுமாறினார். அடுத்தடுத்து மார்பு, இடுப்பு, முதுகு மற்றும் கால்களில் குத்திய அந்த நபர் மற்ற அறைகளின் கதவை வெளியில் பூட்டி விட்டு சைஃப் அலிகானை மிரட்டினார்.
பிறகு அந்த நபர் சைஃப் அலிகானின் மகன் ஜெகாங்கீர் தூங்கி கொண்டிருந்த அறை வழியாக வெளியேறி மழைநீர் குழாய் வழியாக இறங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சத்தம் கேட்டு மற்ற பணியாளர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.
அருகில் மற்றொரு வீட்டில் வசிக்கும் சைஃப் அலிகானின் மகன் இப்ராகீமுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிகாலை 3 மணிக்கு வந்து ஆட்டோ மூலம் நடிகர் சைஃப் அலிகானை மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தார்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் முதுகில் மர்ம நபர் குத்திய கத்தியின் முனை 3 அங்குலத்தில் முறிந்து பாய்ந்து இருந்தது. அதை டாக்டர்கள் அகற்றினார்கள்.

சுமார் 2 மணி நேர சிகிச்சைக்கு பிறகு நடிகர் சைஃப் அலிகான் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் நேற்று போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த நபர் பணியாளர்கள் 6 பேரில் ஒருவருக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பணியாளர்கள் 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பணிப்பெண்களில் ஒருவரான எலியம்மா பிலிப் மர்ம நபருடன் நீண்ட நேர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரிடம் போலீசார் நேற்று 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் மர்ம நபர் எப்படி நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் வந்தான். எப்படி தப்பி சென்றான் என்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் சில பகுதிகளில் மட்டும் தான் கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கேமராக்களில் அந்த மர்மநபர் சிக்கவில்லை. என்றாலும் 6-வது மாடியில் இருந்துஅந்த நபர் மாடிப்படிகளில் இறங்கி செல்வது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இதன்மூலம் அந்த நபர் பற்றி அடையாளம் தெரிந்துள்ளது. அவரை கைது செய்ய 10 தனிப்படைகளை மும்பை போலீசார் அமைத்து உள்ளனர். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
நடிகர் சைஃப் அலிகானின் வீடு 11, 12, 13-வது மாடிகளில் அமைந்திருக்கிறது. அவ்வளவு எளிதில் அந்த வீட்டுக்குள் யாரும் செல்ல இயலாது. அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே அந்த கட்டிடத்தின் நுணுக்கங்கள் தெரியும்.
எனவே கட்டிட பணியாளர்கள் யாராவது இந்த செயல்களில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 2 பேரை மும்பை போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து சைஃப் அலிகானை கத்தியால் குதிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாந்திராவில் உள்ள வீட்டில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயம்.
- குற்றவாளியை பிடிக்க 20 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.
சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்தம் சொட்டசொட்ட ஆட்டோவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சைஃப் அலி கான். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் ஐசியு-வில் சேர்க்கப்பட்டார். பின்னர் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவரது உடல் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. அவர் நடக்கிறார். வழக்கமான உணவு எடுத்துக் கொள்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், கையில் இரண்டு இடங்களிலும், வலது பக்ககம் கழுத்தின் ஒரு இடத்திலும் காயம் ஏற்பட்டது. முக்கியமாக அவரது முதுகு தண்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த கூர்மையான பொருளை அப்புறப்படுத்தி, காயம் சரி செய்யப்பட்டது என தெரிவித்தனர்.
சைஃப் அலி கானை கைத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளது. சைஃப் அலி கான் மீதான தாக்குதலுக்கு சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
- மும்பையில் நடந்த நடிகர் சைஃப் அலி கான் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சைஃப் அலி கானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.
சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லீலாவதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
அவர் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும் பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் என்.சி.பி. தலைவர் பிரபுல் படேல் கூறியதாவது:
சட்டம் ஒழுங்கு பற்றி பேசினால், மகாராஷ்டிரா பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மகாராஷ்டிர காவல்துறை மற்றும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயாராக உள்ளது.
மும்பையில் நடந்த நடிகர் சைஃப் அலி கான் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவார். இந்த வழக்கில் விசாரணை முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஆனால் இந்த ஒரு சம்பவம் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, ஒட்டுமொத்த மாநிலமும் சீரழிந்துவிட்டது என்று கூறுவது தவறாகும்.
இவ்வாறு பிரபுல் படேல் கூறினார்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
- முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 2 பேரை மும்பை போலீசார் பிடித்தனர்.
- பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.
சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லீலாவதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
அவர் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும் பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதில், முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 2 பேரை மும்பை போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து சைஃப் அலிகானை கத்தியால் குதிய நபரை போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சந்தேகத்தின் பெயரில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கிலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- தான் ஒரு நடிகரின் வீட்டில் நுழைகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
- வழக்கறிஞர் ஒருவர் அவரிடம் வக்காலத்து பத்திரத்தில் கையொப்பம் பெற முயன்றார்
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தில் தானேவில் பதுங்கியிருந்த முகமது என்பவரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது பெயரை விஜய் தாஸ் என்று அவர் மாற்றி கூறியுள்ளார்.
ஆனால் அவர் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும் அவர் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்காக அவர் சைஃப் அலிகான் வீட்டில் நுழைந்ததாகவும், தான் ஒரு நடிகரின் வீட்டில் நுழைகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, முகமது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாந்த்ராவில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு குற்றவாளிகள் அமரும் பின்னறையில் முகமது அமர வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்காக வாதாட முன்வருவதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அவரிடம் வக்காலத்து பத்திரத்தில் கையொப்பம் பெற முயன்றார். அதே சமயத்தில் அங்கு வந்த மற்றொரு வழக்கறிஞர், தான் முகமதுக்காக வாதிடுகிறேன் என கூறி அவரிடம் வக்காலத்து பத்திரத்தில் கையொப்பம் பெற்றுவிட்டார்.
இதனால் இரு வழக்கறிஞர்களுடனும் இடையில் யார் முகமதுக்காக வாதாடுவது என்பதில் சண்டை மூண்டது. இதன் தொடர்ச்சியாக இருவரையும் முகமதுக்காக வாதாட அனுமதித்து மாஜிஸ்திரேட் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார்.
இதற்கு மத்தியில், நீதிமன்றம் முகமதுவை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. வக்காலத்து பத்திரம் என்பது குற்றம்சாட்டப்பட்டவருக்காக வாதாடும் அதிகாரத்தை வழக்கறிஞருக்கு கொடுக்கும் சட்டபூர்வ ஆவணம் ஆகும்.
- அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.
- முதுகுத் தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்தனர்.
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.
ஆறு முறை கத்தியால் குத்தப்பட்ட சைஃப் அலி கான் பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சைஃப் அலிகானின் கைகளிலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், முதுகுத் தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். அவரை கடந்த 4 நாட்களாக மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று பிற்பகல் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது வீட்டுக்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கு மேல் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். வெளியாட்களை சந்தித்தால் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், யாரும் அவரைக் நலம் விசாரிக்க வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தானேவில் பதுங்கியிருந்த முகமது என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும் அவர் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்காக அவர் சைஃப் அலிகான் வீட்டில் நுழைந்ததாகவும், தான் ஒரு நடிகரின் வீட்டில் நுழைகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
- முதுகுத் தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
- பலத்த பாதுகாப்புடன் நேற்று பிற்பகல் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார். ஆறு முறை கத்தியால் குத்தப்பட்ட சைஃப் அலி கான் பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சைஃப் அலிகானின் கைகளிலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், முதுகுத் தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். அவரை கடந்த 4 நாட்களாக மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் நேற்று பிற்பகல் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது வீட்டுக்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தானேவில் பதுங்கியிருந்த முகமது என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும் அவர் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்றும் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், கைதான முகமதுவை போலீசார் சைஃப் அலி கானின் அடுக்கு மாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று சம்பவத்தன்று என்ன நிகழ்ந்தது என்பதை நடிக்கச் சொன்னனர்.
அதன்படி, சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த முகமது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததை கண்டதும், சத்தம் வராமல் இருக்க காலில் இருந்த காலணிகளைக் கழற்றியும், செல்போனை சுவிட்ச் ஆப் செய்தும் கொண்டான். அதன்பின் அங்கு படிக்கட்டு அருகில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளான். இதையடுத்தே சைஃப் அலிகானை தாக்கியதாக கூறினான்.
இதன்பின், கைதான நபர் எப்படி தப்பி சென்றிருப்பார் என்பது தொடர்பாக அவர் சென்ற இடங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் 70 மணி நேரத்துக்கு பிறகு பிடிபட்டார்.
- கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் சென்றபோது தான் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியுள்ளார்.
மும்பை:
மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இந்தி நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை 6 இடங்களில் கத்தியால் குத்தினார்.
பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு கை மற்றும் கழுத்தில் கட்டுகளுடன் அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் 70 மணி நேரத்துக்கு பிறகு பிடிபட்டார். அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத் என்றும், வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சட்ட விரோதமாக பல்வேறு பெயர்களில் தங்கி இருந்த அவரை மும்பை அருகே உள்ள தானேவில் போலீசார் கைது செய்தனர்.
5 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
நடிகர் சைஃப் அலி கான் குடியிருக்கும் கட்டிடத்தில் இருந்த பாதுகாவலர்கள் இருவரும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ஷரிபுல் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தார். சத்தம் வராமல் இருக்க தனது காலணிகளை கழற்றி பையில் வைத்துள்ளார். தனது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். கட்டிடத்தின் நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளை முயற்சியில் அவர் நுழைந்துள்ளார்.
வீட்டில் இருந்த பணியாளர்கள் அவரை பார்த்து சத்தம் போட்டனர். இதைக் கேட்டு அங்கு வந்த சைஃப் அலி கான் கொள்ளையனை தடுக்க முயன்றார். அப்போது சைஃப் அலி கானை அவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பைக்கு வந்துள்ளார். தன் பெயரிலேயே ஆதார் அட்டை பெற பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தொழிலாளர் ஒப்பந்ததாரரான அமித் பாண்டே என்பவரின் உதவியோடு ஷரிபுல் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார்.
ஷரிபுல் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தாயார் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் அவர் திருடுவதற்காக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். ஒரு பணக்கார வீட்டில் கொள்ளையடித்து விட்டு வங்காள தேசம் தப்பி செல்ல திட்டமிட்டுள்ளார்.
சைஃப் அலி கான் வீடு என்று தெரியாமல்தான் அவர் அங்கு நுழைந்துள்ளார். கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் சென்றபோது தான் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தானேயில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு ஒர்லியில் இருக்கும் உணவகத்தில் மாதம் ரூ.13 ஆயிரம் சம்பளத்திற்கு பணிபுரிந்தார். அதில் ரூ.12 ஆயிரத்தை தாயின் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு அவர் திருடியதால் வேலையை இழந்தார். தானேயில் ஒரு வீட்டு பராமரிப்பு வேலையில் சேர்ந்தார். கடந்த மாதம் 15-ந் தேதி அவரது ஒப்பந்தம் முடிவடைந்ததால் அந்த வேலையும் இல்லை. அவர் கிட்டதட்ட கையில் பணம் இல்லாமல் இருந்தார்.
இவ்வாறு ஷரிபுல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.