என் மலர்
நீங்கள் தேடியது "ஐ.எஸ்.எல்.கால்பந்து"
- சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தான் கன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் போட்டியில் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடின.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
கொச்சி:
ஐ.எஸ்.எல்.( இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து) போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணியும் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் கேரளா வீரர் அட்ரியன் லூனா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 82-வது நிமிடத்தில் அந்த அணியின் இவான் கல்யுஸ்னி 2-வது கோலை அடித்தார். பதிலுக்கு பெங்கால் அணியின் அலெக்ஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
89-வது நிமிடத்தில் கேரள வீரர் இவான் கல்யுஸ்னி மீண்டும் கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.