search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிசம்பர்"

    • பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கிறது
    • பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் இன்று நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வேணுகோபால் கமிஷனை மீறி மாவட்ட நிர்வாகம் பல வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இது கண்டனத்துக்கு உரியது. வருத்தமும் அளிக்கிறது.

    குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். எனவே வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை மீறி குமரி மாவட்டத்தில் புதிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை பதில் தரவில்லை. எனவே குமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி டிசம்பர் 11-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ள உள்ளார்கள். அதோடு மாவட்ட நிர்வாகம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர், மேயர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்டனர். அதே சமயம் இந்த கூட்டத்தில் அமைச்சரின் மகனும் கலந்து கொண்டு உள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மகளிர் அணி மாநில செயலாளர் உமாரதி ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • விண்ணப்பிக்க வில்லையெனில் துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அனு மதி பெற்று துப்பாக்கி வைத் திருப்போர், அதற்கான உரி மத்தினை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

    அதாவது உரிமம் பெற்ற ஒற்றைக்குழல் மற்றும் இரட் டைக்குழல் துப்பாக்கிகள் (எஸ்.பி.பி.எல்., டி.பி.பி.எல்., ரிவால்வர் மற்றும் பிஸ்டல்) ஆகியவற்றின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியவர்கள் 1.1.2023 முதல் 31.12.2027 வரை யிலான 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவருக்கு கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங் கள் மற்றும் உரிய படிவத்து டன் விண்ணப்பிக்குமாறு உரிமத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதாவது துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் படிவம் (A3) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் உரிம புத்தகம், இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவண நகல் (2), இதையடுத்து 5 ஆண்டிற்குரிய உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.2,500 செலுத்திய தற்கான இ-செல்லான் அசல் மற்றும் நகல் மற்றும்துப்பாக்கி உபயோகப்படுத்தி பணி புரியும் பட்சத்தில் தொடர்பு டைய அலுவலகத்தில் இருந்து பணி நிமித்தமாக பெறப்பட்ட கடிதம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கும் அனுப்பும் பொருட்டு உரிம தாரர்கள் தங்களது விண்ணப் பங் களில் சரியான அஞ்சல் முகவ ரியை கொடுக்க வேண்டும். விண்ணப்பத் தோடு பணம் செலுத்திய செலானை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிம தாரர் மட்டுமே கையொப்ப மிட்டு அனுப்ப வேண்டும்.துப்பாக்கி உரிமம் செயல் திறன் முடிவடைவதற்கு 60 நாட்களுக்கு முன்பு புதுப்பிப்பதற்கு விண்ணப் பம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வில்லையெனில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×